இக்கட்டான நிதிச்சூழலில் சமநிலை காணும் முயற்சி

இக்கட்டான நிதிச்சூழலில் சமநிலை காணும் முயற்சி

3 mins read
50fc7f4d-18dc-4d97-b02b-45c62a634ef3
-

வரவுசெலவுத் திட்டம் 2023 குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

இந்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை, கடு­மை­யான நிதிச்­சூ­ழல், அதி­க­ரிக்­கும் தேவை­கள் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் சம­நிலை காணும் நுண்­ணிய முயற்சி என்று துணைப் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் குறிப்­பிட்­டுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று, வர­வு­செ­ல­வுத் திட்­டம் குறித்த விவா­தங்­க­ளின் நிறை­வில் அவர் உரை­யாற்­றி­னார்.

சம­நிலை காணு­தல் என்­பது அவ­ரது உரை­யின் முக்­கி­யக் கருப்­பொ­ரு­ளாக அமைந்­தி­ருந்­தது.

கூடு­தல் வரி­க­ளுக்­கும் கூடு­தல் வழங்­கு­தொ­கை­களுக்­கும் இடை­யி­லான சம­நிலை, அன்­றாட வாழ்க்­கை­யின் பல்­வேறு முன்­னு­ரி­மை­களுக்கு இடை­யி­லான சம­நிலை, அதி­க­ரிக்­கும் நிறு­வன வரி­க­ளுக்­கும் போட்­டித்­தன்­மை­யைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­கும் இடை­யி­லான சம­நிலை போன்­றவை அவர் குறிப்­பிட்­ட­வற்­றுள் அடங்­கும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாழ்க்­கைச் செல­வி­னம் தொடர்­பில் கூடு­தல் உதவி தேவை என்று கோரி­யி­ருந்­த­னர். குறிப்­பிட்ட சில குழு­வி­ன­ருக்­குக் கூடு­தல் உதவி தேவை என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

அவை தொடர்­பில் நட­வடிக்கை எடுக்­கும் வேளை­யில் நிதி­ய­மைச்சு அர­சாங்­கத்­தின் செல­வு­கள் தொடர்­பில் சம­நிலை காண­வேண்­டி­யி­ருந்­த­தாக துணைப் பிர­த­மர் விளக்­கி­னார்.

இந்த ஆண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் பெற்­றோர், குடும்­பம் தொடர்­பான திட்­டங்­களுக்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த ஆண்டு மற்ற திட்­டங்­களில் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார் அவர்.

வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் நன்­மை­கள் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரை­யும் சென்­ற­டை­யும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2023 குறித்து மூன்று நாள்­கள் நடை­பெற்ற விவா­தங்­களில் 58 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு திரு வோங் பதில் அளித்­தார்.

"நிதி நிலை­மையை மேலும் நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டி­ய­தா­க­வைத்­தி­ருக்க அர­சாங்­கம் முயல்­கிறது. ஆனால் ஆத­ர­வுத் திட்­டங்­களை ஒரே­ய­டி­யா­கக் குறைக்க இய­லாது. ஏனெ­னில் பொரு­ளி­ய­லில் நிச்­ச­ய­மற்­ற­தன்மை நில­வு­கிறது," என்­றார் அவர்.

சமு­தா­யத்­தில் பெரும்­பா­லான நடுத்­தர வரு­வாய் கொண்­டோ­ரின் நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தில் அர­சாங்­கம் தொடர்ந்து கவ­னம் செலுத்­து­கிறது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­களில் உள்ள இத்­த­கை­யோ­ரைக் காட்­டி­லும் இங்கு உள்­ளோர் குறை­வா­கவே வரி செலுத்­து­வ­தா­கத் துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

இவர்­கள் செலுத்­தும் வரித்­தொ­கை­யை­விட அதி­க­மா­கவே சலு­கை­க­ளைப் பெறு­கின்­ற­னர் என்­றா­ர­வர்.

"சிங்­கப்­பூ­ரில் வரி­க­ளுக்­கும் மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்­கும் இடை­யி­லான விகி­தம் 14 விழுக்­காடு. பெரும்­பா­லான வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது கணி­ச­மா­கக் குறைவு.

"மற்ற நாட்­டுக் குடி­மக்­க­ளை­விட சிங்­கப்­பூ­ரர்­கள் குறை­வான வரி செலுத்­தி­னா­லும் உயர்­த­ர­மான பொதுச் சேவை­க­ளைப் பெறு­கின்­ற­னர்.

"அதே­நே­ரம் குறை­வான வரிச்­சுமை என்­பது மக்­க­ளின் கடின உழைப்­புக்­கான வெகு­மதி.

"இத­னால் மக்­களும் நிறு­வ­னங்­களும் அவ­ர­வர் ஈட்­டிய வரு­வா­யில் பெரும்­ப­கு­தியை அவர்­களே பயன்­ப­டுத்த முடி­கிறது," என்று திரு வோங் கூறி­னார்.

நாடா­ளு­மன்­றம் நேற்று $123.7 பில்­லி­யன் மதிப்­புள்ள வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை அங்­கீ­க­ரித்­தது.

சிங்­கப்­பூ­ரின் நிதிச் சூழல் கடு­மை­யாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட திரு வோங், பொருள், சேவை வரி­யின் இரண்­டாம் கட்ட உயர்வு திட்­ட­மிட்­ட­படி அடுத்த ஆண்டு அமல்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­வித்­தார்.

"இதைத் தவிர்த்­தால் வருங்­கா­லத்­தில் சிக்­கல்­கள் அதி­க­மா­கும். அத்­து­டன், சிங்­கப்­பூ­ரில் மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை அதி­க­ரிக்­கும் நிலை­யில் அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்கு உரிய வளங்­கள் குறை­யும்," என்று அவர் சொன்­னார்.

இந்த ஆண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் குறை­வான ஊதி­யம் பெறும் ஊழி­யர்­க­ளுக்­கும் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­கும் கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தைத் திரு வோங் சுட்­டி­னார்.

"சிங்­கப்­பூ­ரர்­கள் வாழ்க்­கைச் செல­வின நெருக்­கு­த­லைச் சமா­ளிக்க அர­சாங்­கம் உத­வு­கிறது. அதே­நே­ரம் தேவை­களை அதி­க­ரிக்­கா­ம­லும் பண­வீக்­கம் மோச­ம­டை­யா­மல் காப்­ப­தி­லும் அது கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது," என்று துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் வலு­வான நிதி அடித்­த­ளத்­தைக் கொண்­டி­ருந்­தால் தொடர்ந்து பல ஆண்டு­களுக்கு வளப்­ப­மு­டன் திக­ழ­லாம் என்­றார் அவர்.

மேலும் செய்திகள் பக்கம் 2ல்