தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'2022ல் சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதம் ஆகக் குறைவு'

2 mins read
edee14af-6041-49ab-a971-76847ca24ea2
-

சிங்­கப்­பூ­ரின் மொத்­தக் கரு­வள விகி­தம் சென்ற ஆண்டு வர­லாறு காணாத அளவு குறைந்து 1.05ஆகப் பதி­வா­னது.

திரு­ம­ணம், பிள்ளை பெறு­தல் ஆகி­ய­வற்­றைத் தள்­ளிப்­போ­டு­வோர் எண்­ணிக்­கை­யும் குறை­வான பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் தம்­ப­தி­யர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தது இதற்­குக் கார­ணங்­கள்.

இருப்­பி­னும் திரு­ம­ணம், பிள்­ளைப்­பேறு ஆகி­யவை தொடர்­பான சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கன­வு­களை நன­வாக்க அர­சாங்­கம் தொடர்ந்து ஆத­ரவு வழங்­க­வி­ருக்­கிறது. பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

"சென்ற ஆண்டு குழந்தை பிறப்பு குறைந்­த­தற்கு, சீன நாள்­காட்­டி­யின்­படி புலி ஆண்­டாக இருந்­த­தும் ஒரு கார­ணம். சீனர்­களி­டையே பொது­வாக புலி ஆண்­டில் குழந்தை பிறப்பு விகி­தம் குறை­வது வழக்­கம்," என்­றார் அமைச்­சர்.

வர­வு­செ­ல­வுத் திட்­டம் குறித்த விவா­தத்­தின்­போது, சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­களுக்கு அவர் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

நார்வே, ஃபின்­லாந்து உள்­ளிட்ட பல வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளைப் போன்றே சிங்­கப்­பூ­ரி­லும் மக்­கள்­தொகை பல ஆண்­டு­க­ளா­கவே குறைந்து வரு­வதை அமைச்சர் இந்­தி­ராணி சுட்­டி­னார்.

மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை உள்­ளிட்ட வேறு சில சிக்­கல்­க­ளை­யும் சிங்கப்பூர் எதிர்­நோக்­கு­கிறது என்­றார் அவர்.

புதி­தா­கத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டோர், இளம் பெற்­றோர் ஆகிய பிரி­வி­ன­ருக்கு இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­பட்­டு இருக்கிறது.

தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­க­ளுக்கு விண்­ணப்­பிப்­ப­தில் அவர்­க­ளுக்­குக் கூடு­தல் சலு­கை­கள் உண்டு என்­பதை அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

'பேபி போனஸ்' ரொக்­கப் பரி­சுத் தொகை, குழந்தை மேம்­பாட்­டுக் கணக்கு மானி­யம் போன்­ற­வற்­று­டன் வெள்­ளிக்கு-வெள்ளி ஈடு­செய்­யும் அர­சாங்­கத் தொகை வரம்­பும் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

அடுத்த ஆண்­டில் இருந்து சம்­ப­ளத்­து­டன்­கூ­டிய தந்தையர் விடுப்பு நான்கு வாரங்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தை­யும் அவர் சுட்­டி­னார்.

முத­லா­ளி­களும் சக ஊழி­யர்­களும் புதி­தா­கப் பிள்ளை பெற்ற தந்­தை­யர் இந்த விடுப்­பைப் பயன்­படுத்த ஊக்­கு­விக்க வேண்­டும் என்­றார் அமைச்­சர்.

பிள்­ளைப் பரா­ம­ரிப்பு விடுப்பு நாள்­கள் உயர்த்­தப்­ப­டுமா என்­றும் கருத்­த­ரிப்பு சிகிச்சை மேற்­கொள்­வோ­ருக்கு அதன் தொடர்­பில் விடுப்பு வழங்­கப்­ப­டுமா என்­றும் அமைச்­சர் இந்­தி­ரா­ணி­யி­டம் கேட்­கப்­பட்­டது.

இதற்குப் பதிலளிக்கையில், "நீக்குப்­போக்­கான வேலை நேர ஏற்­பா­டு­க­ளைச் செய்­யும்­படி முத­லா­ளி­களை ஊக்­கு­விப்­பது மற்­றொரு முக்­கிய உத்தி. இது சிறு குழந்­தை­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் மட்­டு­மன்றி வய­தா­னோ­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்­கும் உத­வி­யாக இருக்­கும் என்றார் அவர்.

"இது­தொ­டர்­பான முத்­த­ரப்பு வழி­காட்­டிக் குறிப்­பு­கள் அடுத்த ஆண்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

"இவற்­றின்­கீழ், நிறு­வ­னங்­கள் நியா­ய­மான, சரி­யான முறை­களில் நீக்­குப்­போக்­கான வேலை நேரக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வது கட்­டா­ய­மா­கும்," என்று அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.