கிராமப்புறத் தமிழ்ப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள்; தீர்வுகாண விழையும் மலேசிய அரசு

2 mins read
63284207-6121-4004-b50c-973377bb8d9e
-

மலேசிய கிராமப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள 367 தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 150க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாக அது கவலை தெரிவித்தது.

கிராமப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே மலேசிய அரசாங்கத்தின் விருப்பம் என்று அந்நாட்டின் கல்வி துணை அமைச்சர் லிம் ஹுவி யிங் கூறினார். தமிழ்ப் பள்­ளி­களில் குறை­வான மாண­வர் சேர்க்­கைக்கு நீண்­ட­கா­லத் தீர்வு காண தனது அமைச்சு வழி­வ­கை­களை ஆராய்ந்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

நாடு தழு­விய நிலை­யில், ஒட்­டு­மொத்த அடிப்­ப­டை­யில் தமிழ்ப் பள்­ளி­களில் சொற்ப எண்­ணிக்­கை­யில் மாண­வர்­கள் இருப்­பது போதா­தென்று ஒரு­சில பள்­ளி­களில் மாண­வர் எண்­ணிக்கை அதை­விட மோச­மாக உள்­ளது என்­றும் அவை சொல்­லிக்­கொள்­ளும் அள­வில் இல்லை என்­றும் திரு­வாட்டி லிம் தெரி­வித்­தார்.

பேராக் மாநி­லம் குனோங் ரபாட் நக­ரில் தமிழ்ப் பள்ளி ஒன்­றின் திறப்பு விழா­வில் அவர் நேற்று முன்­தி­னம் கலந்­து­கொண்டு பேசி­னார். குனோங் ரபாட் தமிழ்ப் பள்ளி அந்­ந­க­ரின் மையப் பகு­தி­யில் 1954ஆம் ஆண்­டில் கட்­டப்­பட்­டது.

அப்­பள்ளி தற்­போது இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய பள்­ளிக் கட்­ட­டத்தை மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், சமூ­கத் தலை­வர்கள் ஆகியோர் ஒன்­றி­ணைந்து நேற்று முன்­தி­னம் திறந்­து­வைத்­த­னர்.

தமிழ்ப் பள்­ளி­யின் திறப்பு விழா­வில் தொழில்­மு­னை­வர் மேம்­பாட்டு, கூட்­டு­றவு துணை அமைச்­சர் சரஸ்­வதி கந்­த­சா­மி­யும் புந்­தோங் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எம். துளசி திவா­னி­யும் கலந்­து­கொண்­ட­னர்.

தேவை­யில்­லாத, பயன்­ப­டுத்­தப்­ப­டாத திட்­டங்­கள் என்று மாண­வர்­க­ளைக் குறை­வா­கக் கொண்ட தமிழ்ப் பள்­ளி­கள் வர்­ணிக்­கப்­

ப­டு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

ஆனால் இப்­பள்­ளி­க­ளுக்­கான புதுப்­பிப்பு, பரா­ம­ரிப்­புப் பணி­கள் தாம­தம் அடை­வ­தற்கு இது கார­ண­மல்ல என்று அமைச்­சர் லிம் கூறி­னார். மாறாக, இப்­ப­ணி­கள் தாம­த­ம் அடை­வ­தற்கு வேறு பல கார­ணங்­கள் இருப்­ப­தாக அவர் விளக்கம் அளித்தார்.

பணி­க­ளுக்­குத் தேவை­யான பொருள்

­க­ளின் விலை அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் கட்­டு­

மா­ன ஊழி­யர்­கள் தட்­டுப்­பா­டும் அவற்­றில் அடங்­கும் என்­றார் அவர்.

இருப்­பி­னும், தமிழ்ப் பள்­ளி­க­ளுக்­காக அர­சாங்­கம் ஒப்­பு­தல் அளித்­துள்ள மேம்­

பாட்­டுப் பணி­க­ளை­யும் புதிய தமிழ்ப் பள்­ளி­

க­ளைக் கட்­டு­வ­தற்­கான கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் விரை­வுப்­ப­டுத்த கல்வி அமைச்சு தொடர்ந்து முக்­கி­யத்­து­வம் கொடுத்து அதில் கவ­னம் செலுத்­தும் என்­றும் அமைச்­சர் லிம் உறுதி அளித்­தார்.