கூட்டறிக்கையின்றி முடிந்த ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டம்

கூட்டறிக்கையின்றி முடிந்த ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டம்

2 mins read

இந்­தி­யா­வின் பெங்­க­ளூ­ரில் கடந்த வெள்ளி, சனிக்­கி­ழ­மை­களில் நடந்த உல­கின் ஆகப் பெரிய 20 பொரு­ளி­யல் நாடு­களின் கூட்­டம், கூட்­ட­றிக்கை வெளி­யி­டப்­ப­டா­ம­லேயே முடிந்­தது.

கூட்­டத்­தில் உக்­ரேன்­மீது ரஷ்யா போர் தொடுத்­த­மைக்கு மற்ற எல்லா நாடு­களும் கடும் கண்­ட­னம் தெரி­வித்த நிலை­யில், சீனா­வும் ரஷ்­யா­வும் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து, கூட்­ட­றிக்­கை­யில் கையெ­ழுத்­திட மறுத்­தன.

இத­னை­ய­டுத்து, இரு­நாள் கூட்­டத்­தில் பேசப்­பட்­டவை குறித்த தொகுப்­புரை மட்­டுமே இறு­தி­யில் வாசிக்­கப்­பட்­டது.

அந்­தத் தொகுப்­பு­ரை­யில், உக்­ரேன் மீதான தனது படை­யெ­டுப்பை ரஷ்யா திரும்­பப் பெற வேண்­டும் என்று மீண்­டும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இப்­போது ஜி20 நாடு­க­ளுக்கு இந்­தியா தலை­மை­யேற்­றுள்ள நிலை­யில், இந்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தலை­மை­யில் அந்த 20 நிதி­ய­மைச்­சர்­கள் மற்­றும் மத்­திய வங்கி ஆளு­நர்­க­ளின் கூட்­டம் நடை­பெற்­றது.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­களைச் சமா­ளிப்­ப­தற்­காக கடந்த 1999ஆம் ஆண்டு ஜி20 அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

ஜி20 அமைப்பு பாது­காப்­புப் பிரச்சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணும் அமைப்­பன்று என்­ற­போ­தி­லும், உல­கப் பொரு­ளி­ய­லில் ரஷ்யா-உக்­ரேன் போர் பாதிப்பை ஏற்­படுத்தி இருப்­ப­தால் அது­கு­றித்து மட்­டும் கூட்­டத்­தில் விவா­திக்க ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால், ரஷ்­யா­வும் சீனா­வும் அதற்கு இணங்­க­வில்லை எனக் கூறப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, ஒரு­மித்த உடன்­பாடு எட்­டப்­படா­ம­லேயே கூட்­டம் முடி­வ­டைந்­தது.

ரஷ்யா-உக்­ரேன் சண்­டை­யில் இந்­தியா எப்­பக்­க­மும் சேரா­மல் நடு­நிலை வகித்து வரு­கிறது. அர­ச­தந்­திர ரீதி­யில் அதற்­குத் தீர்­வு­காண வேண்­டும் என வலி­யு­றுத்­தி­வ­ரும் அதே வேளை­யில், ரஷ்­யா­விடம் இருந்து கச்சா எண்­ணெய் வாங்கு­வ­தை­யும் இந்தியா அதி­க­ரித்­துள்­ளது.

ரஷ்யா-உக்­ரேன் சண்டை தொடர்­பில் கடந்த 23ஆம் தேதி ஐக்­கிய நாட்டு மன்­றத்­தில் நடந்த வாக்­கெ­டுப்­பில் இந்­தி­யா­வும் சீனா­வும் பங்­கு­கொள்­ள­வில்லை. ஆயி­னும், உக்­ரே­னி­லி­ருந்து ரஷ்யா தனது படை­களை மீட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று பெரும்­பா­லான நாடு­கள், தீர்­மானத்­திற்கு ஆத­ர­வாக வாக்­களித்­தன.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் முடிந்த ஜி20 கூட்­டத்­தின் தொகுப்­பு­ரை­யா­னது, அமைதிப் பேச்­சு­வார்த்தை மூலம் சண்­டைக்­குத் தீர்­வு­காண்­பது, நெருக்­கடி நிர்­வா­கம், அர­ச­தந்­திர உறவு­கள் போன்­ற­வற்­றின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­யது.