ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 74%க்கு மேல் பதிவான வாக்குகள்

1 mins read
83dc25a2-c496-4829-b5b5-60cf6f24a8c0
-

தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நேற்று வாக்குப் பதிவு நிறைவுபெற்றுள்ளது.

இந்திய நேரப்படி நேற்றுக் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 6 மணிவாக்கில் நிறைவுபெற்றது. ஏறத்தாழ 2.27 லட்சம் வாக்காளர்கள் இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

வாக்குப்பதிவின் முடிவில், 74.69% வாக்­கு­கள் பதி­வா­ன­தா­கக் கூறப்­பட்­டது. இது, 2021ஆம் ஆண்டு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பதி­வா­ன­வ­தை­விட அதி­கம் எனத் தமிழக ஊடகங்கள் கூறின.

இடைத்­தேர்­த­லில் ஆளும் கூட்­டணி சார்­பில், இத்­தொ­கு­தி­யின் மறைந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரின் தந்­தை­யும் முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் போட்­டி­யிட்­டார். அவ­ரை­யும் சேர்த்து மொத்­தம் 77 பேர் இதில் கள­மி­றங்­கி­னர்.

இடைத்­தேர்­தல் வாக்­க­ளிப்­பிற்­காக 238 வாக்­குச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவற்­றில் 32, பதற்­ற­மா­னவை என்று வகைப்­படுத்­தப்­பட்­டன. தொகுதி முழு­வ­தும் 3,000க்கு மேற்­பட்ட காவல்­து­றை­யினர் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கும் உரிய ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இருப்­பி­னும், சில இடங்­களில் சல­ச­லப்பு ஏற்­பட்­டது.

உரிய ஆவ­ணங்­க­ளைக் கொண்டுவ­ரா­தோரை அதி­கா­ரி­கள் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­க­வில்லை.

வாக்காளர்கள் கைத்­தொ­லை­பேசி­களை உள்ளே கொண்­டு­செல்­ல­வும் அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

வாக்கு எண்­ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி நடை­பெ­றும்.

தகவல், படம்: இந்திய ஊடகம்

மேலும் செய்தி பக்கம் 4ல்