கோயிலில் ஆசி வழங்கும் இயந்திர யானை

2 mins read
058da2f0-b2cb-4fa0-86d2-b2a4f2f6b0ac
-

இந்­தி­யா­வின் கேரள மாநி­லம் திருச்­சூ­ரில் உள்ள இரிஞ்­சி­டப்­பில்லி ஸ்ரீ கிருஷ்­ணர் கோயி­லுக்­குச் செல்­வோ­ருக்கு ஆசி வழங்­கு­கிறது ஓர் இயந்­திர யானை (படம்).

10.5 அடி உய­ரத்­தில், 800 கிலோ எடை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இது, உயி­ருள்ள யானை­யைப் போன்றே தோற்­ற­ம­ளிக்­கிறது. விலங்­கு­கள் நலச் சங்­கத்­தால் கோயி­லுக்கு காணிக்­கை­யாக வழங்­கப்­பட்­டுள்ள இந்த யானைக்கு இரிஞ்­சி­டப்­பில்லி ராமன் என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

காணிக்கை வழங்­கு­வது தொடர்­பான 'நடை­யி­றுத்­தல்' நிகழ்ச்சி நேற்று முன் தினம் இடம்­பெற்­றது.

இந்த யானை­யால், ஒரு நேரத்­தில் நான்கு மனி­தர்­க­ளைத் தன்­மேல் சுமந்து வலம் வர முடி­யும். இதன் தலை, கண்­கள், வாய், துதிக்கை, காது­கள், வால் என அனைத்­துப் பாகங்­களும் மின்­சாரத்­தில் இயங்­கக்­கூ­டி­யவை.

கேர­ளா­வில் உள்ள பெரும்­பா­லான கோயில்­களில் யானை­கள் வளர்க்­கப்­படு­கின்­றன. கோயில் விழாக்­களில் இவை பங்­கேற்­பது வழக்­கம். பக்­தர்­களுக்கு ஆசி வழங்­கு­வ­து­டன் கோயி­லின் அன்­றாட நட­வ­டிக்­கை­கள் சில­வற்­றி­லும் இந்த யானை­கள் கலந்­து­கொள்­ளும்.

இத்­த­கைய யானை­கள் சில நேரங்­களில் மதம் பிடித்து யானைப் பாக­ரைத் தாக்­கு­வது, பக்­தர்­களை விரட்­டு­வது போன்ற சம்­ப­வங்­கள் நடந்­த­துண்டு. இத்­த­கைய சம்­ப­வங்­க­ளைத் தடுக்­க­வும் யானை­க­ளைப் பாது­காக்­க­வும் ஆலோ­சனை நடத்­திய விலங்­கு­கள் நல சங்­கம் இயந்­திர யானைத் திட்­டத்தைக் கையிலெடுத்தது.

தற்­போது திருச்­சூர் கோயி­லில் உள்ள இயந்­திர யானை தும்­பிக்கை நீட்டி பக்­தர்­க­ளுக்கு ஆசி வழங்­கு­கிறது. இனி கோயில் ஊர்­வ­லத்­தில் சாமி சிலை­க­ளை­யும் இதுவே சுமந்து செல்­லும் என்று கூறப்­பட்­டது.

மற்ற கோயில்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றவேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.