ஜோசஃபின் டியோ: இணைய ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காக்க நடவடிக்கை
பாதுகாப்பான மின்னிலக்கத் தளங்களை நோக்கி சிங்கப்பூர் நகர்ந்து வரும் வேளையில் தீங்கிழைக்கக்கூடிய, குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்கும் உள்ளடக்கங்களை நீக்குமாறு கைப்பேசிச் செயலி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படும்.
இணைய விளையாட்டுகள் தொடர்பான அபாயங்களும் இதில் அடங்கும்.
குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதையும் அந்தத் தரவுகள் செயற்கை நுண்ணறிவு முறையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அரசாங்கம் அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை கவனிக்கும்.
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறிப்பாக, தீங்கு விளைவிக்கக்கூடிய அம்சங்களைக் கொண்ட செயலி
களுக்கென அரசாங்கம் புதிய விதித் தொகுப்பை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
"கைபேசிச் செயலியை உருவாக்கும் நிறுவனங்கள் தீங்கு விளைக்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கக்கூடும்.
"குறிப்பாக, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பதாக அவை இருக்கலாம். வெளிப்
படையான பாலியல் செயல்
பாடுகள் அல்லது வன்செயலைத் தூண்டும் நடவடிக்கைகளைக் கொண்டதாக அவை இருக்கலாம்," என்றார் திருவாட்டி டியோ.
புதிதாக உருவாக்கப்படும் நடைமுறைத் தொகுப்பு பற்றி சம்பந்தப்பட்ட தொழில்துறையினருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சமூக ஊடகச் சேவைகளுக்கும் அப்பால் உள்ள தளங்களில் தீங்கான அம்சங்களைக் களைய தொடர்பு, தகவல் அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சர் டியோ பதிலளித்தார்.
புதிய நடைமுறைத் தொகுப்பு இணையப் பாதுகாப்பு நடை
முறைக்கான விதித்தொகுப்பைத் தழுவி இருக்கும் என்றும் இவ்வாண்டின் பிற்பகுதியில் அது முழுமையாக அறிமுகம் செய்யப்படும் என்றும் திருவாட்டி டியோ கூறினார்.
அதன் பிறகு, இன்ஸ்ட
கிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் சிங்கப்பூர் பயனாளர்களுக்கான வரம்பைச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கம், இணைய அச்சுறுத்தல் அல்லது இன, சமயப் பதற்றங்களைத் தூண்டக்கூடிய அம்சங்கள் போன்றவற்றுடனான இணையத் தீங்குகளை சிங்கப்பூர் பயனாளர்கள் எளிதில் நாடாவண்ணம் அந்த வரம்புகளை அமைக்குமாறு அவை கேட்டுக்கொள்ளப்படும். அத்துடன், இணைய விளயாட்டுகள்வழி தீங்கான அம்சங்கள் சிங்கப்பூர் பயனாளர்களுக்குச் செல்லாத வகையில் தொடர்பு, தகவல் அமைச்சும் கவனம் செலுத்தும் என்றார் அமைச்சர்.
"விளையாட்டுகளுக்கான பொருத்தமான வயதைப் பரிசீலிக்குமாறும் குழந்தைகளின் இணைய விளையாட்டுகளின்போது அவர்களின் பெற்றோர் கண்காணிப்பு இருப்பதையும் உறுதிசெய்ய சமூக ஊடக நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படும்.
"அருவருப்பான உள்ளடக்கம் கொண்ட கைப்பேசிச் செயலி
களைப் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், கைப்பேசிச் செயலிகளையும் கடந்து, இணையம் வழியான இதர தளங்களிலும் ஆபத்தான விளையாட்டுகளைப் பெறமுடியும் என்பதால் அதுபோன்ற நிலைமையை சமாளிப்பது குறித்து நாங்கள் ஆராய்வோம், என்று திருவாட்டி டியோ விளக்கினார்.
புத்தாக்க வழிகளில் செய்தி களைத் தெரிவிக்க உள்ளூர் ஊடகங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைத் தழுவுகின்றன என்று கூறிய திருவாட்டி டியோ, அதற்கு உதாரணமாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸைக் குறிப்பிட்டார்.
"மலாய் மொழி நாளிதழான பெரித்தா ஹரியான் நடப்பு விவகாரங்களை விவாதிக்கும் வலையொளிகளைத் தயாரிக்கிறது. அதேபோல தமிழ் முரசு நாளிதழும் கைப்பேசிச் செயலியை உருவாக்கி வருகிறது," என்றார் அமைச்சர் டியோ.

