'ஏ' நிலை படிப்பில் மாற்றங்கள்

'ஏ' நிலை படிப்பில் மாற்றங்கள்

3 mins read
a6299e9a-448f-4b8e-8a57-005f453e9fec
தொடக்­கக் கல்­லூ­ரி­க­ளி­லும் (ஜேசி) மில்­லே­னிய கல்வி நிலை­யத்­தி­லும் (எம்ஐ) அரை­யாண்­டுத் தேர்­வு­கள் அடுத்த ஆண்­டி­லி­ருந்து கட்­டங்­கட்­ட­மாக அகற்­றப்­படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாண­வர்­கள் தேர்­வுத் தரம் பற்றி அதி­கம் கவ­லைப்­ப­டா­மல் தங்­க­ளுக்­குப் பிடித்­த­வற்­றில் அதிக கவ­னம் செலுத்­த­வும் பெரி­ய­வர்­கள் பின்­னா­ளில் தங்­கள் பட்­டப் படிப்பை மேற்­கொள்­ள­வும் ஏது­வாக பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் மேல்­நி­லைத் தேர்வு ('ஏ' நிலை) மதிப்­பீட்டு முறை மாற்­றம் காண்­கிறது.

எதிர்­வ­ரும் 2026 முதல் சுயேட்­சைப் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு மாண­வர்­க­ளின் ஒட்­டு­மொத்­தத் தேர்வு முடி­வு­களை உயர்த்­தி­னால் மட்­டுமே நான்­கா­வது பாடத்­தொ­குப்பு கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

அத்­து­டன், 2026ஆம் ஆண்டு முதல் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக் கணக்­கீட்­டுக்­கான அதி­க­பட்­சப் புள்ளி 70 ஆகக் குறைக்­கப்­படும். அது தற்­போது 90 ஆக உள்­ளது.

கல்வி அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் இந்த மாற்­றங்­களை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அரை­யாண்­டுத் தேர்வு நீக்­கம்

தொடக்­கக் கல்­லூ­ரி­க­ளி­லும் (ஜேசி) மில்­லே­னிய கல்வி நிலை­யத்­தி­லும் (எம்ஐ) அரை­யாண்­டுத் தேர்­வு­கள் அடுத்த ஆண்­டி­லி­ருந்து கட்­டங்­கட்­ட­மாக அகற்­றப்­படும்.

அவற்­றுக்­குப் பதி­லா­கப் பள்ளி நிலை­யில் அதி­கத் தேர்­வு­களை நடத்­த­மாட்டா.

ஒரு தவ­ணை­யில், ஒவ்­வொரு பாடத்­திற்­கும் ஒரே­யொரு முறை­சார்ந்த மதிப்­பீடு மட்­டுமே வழங்­கப்­படும் என கல்வி அமைச்சு விளக்­கி­யது.

ஒப்­ப­டைப்­புத் திட்­டம்,

பொதுத் தாள் பாட மாற்­றங்கள்

தொடக்­கக் கல்­லூ­ரி­யில் அடுத்த ஆண்டு சேரு­வோ­ரின் ஒப்­ப­டைப்­புத் திட்­டம் (புரோ­ஜெக்ட் ஒர்க்), தேர்ச்சி அல்­லது தோல்வி என்­னும் முறை­யில் மதிப்­பி­டப்­படும்.

பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக் கணக்­கீட்­டி­லி­ருந்து இந்­தப் பாடம் அகற்­றப்­ப­டு­கிறது.

"இந்த மாற்­றம், மதிப்­பெண்­க­ளால் உந்­தப்­ப­டு­வ­தை­விட, ஆர்­வ­முள்ள துறை­களில் அதிக நாட்­டத்­து­டன் படைப்­பாற்­ற­லைப் பயன்­ப­டுத்த மாண­வர்­களை ஊக்­கு­விக்­கிறது," என்று திரு சான் கூறி­னார்.

எனி­னும், சுயேட்சைப் பல்­கலைக்­க­ழ­கங்­க­ளுக்­குத் தகு­தி­பெற 2026 முதல் மாண­வர்­கள் ஒப்­ப­டைப்­புத் திட்­டப் பாடத்­தில் தேர்ச்சி பெற்­றி­ருக்­க­வேண்­டும்.

வரும் 2024ல் தொடக்­கக் கல்­லூ­ரி­க­ளி­லும் மில்­லே­னி­யக் கல்வி நிலை­யத்­தி­லும் சேரும் மாண­வர்­க­ளுக்கு பொதுத் தாள் (ஜிபி) கட்­டா­ய­மா­கிறது.

கல்­வி­ய­றி­வும் ஆய்­வும் (நாலேட்ஜ் அண்ட் என்­குவைரி) பாடம் தத்­து­வத்­தில் அதிக கவ­னம் செலுத்­தும். இப்­ப­டிப்பு தொடர்ந்து வழங்­கப்­படும். ஆனால் அது இனி இப்­பா­டத்தை பொதுத் தாளுக்கு மாற்­றா­கப் படிக்க முடி­யாது.

பொதுத்­தாள் பாடத்­திட்­டம் நடப்பு விவ­கா­ரங்­கள், சம­கால பிரச்­சி­னை­களில் அதிக கவ­னம் செலுத்­து­கிறது. 2022 கிட்­டத்­தட்ட 100 மாண­வர்­கள் பொதுத் தாளுக்­குப் பதி­லாக ஒப்படைத் திட்ட பாடத்­தைப் படித்­த­னர்.

கல்­வி­ய­மைச்சு 'ஏ' நிலை பாடத்­திட்­டத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளதா என்று தெம்­ப­னிஸ் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பே யாம் கெங், அங் மோ கியோ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் டேரல் டேவிட் கேட்­ட­தற்­குப் பதி­ல­ளித்­தும் பேசிய அமைச்­சர் சான் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

"21ஆம் நூற்­றாண்­டின் திறன் மேம்­பாட்­டுக்கு அதிக நேரத்தை ஒதுக்­கும் ­வ­கை­யில் காலப்­போக்­கில் பாடத்­திட்ட உள்­ள­டக்­கத்தை படிப்­ப­டி­யா­கக் குறைத்து வந்­துள்­ளோம். தற்­போது பெரும்­பா­லான ஏ-நிலைப் பாடத்­திட்ட உள்­ள­டக்­கம், ஒப்­பிட பயன்­ப­டுத்­தப்­படும் அனைத்­து­ல­கப் பாடத்­திட்­டங்­க­ளு­டன் ஒத்­த­தா­கவோ அல்­லது அதற்கு கிட்­டத்­தட்­ட சமமாகவோ உள்­ளது என்­றார் அவர். "கல்வி முறைக்­குப் பாதிப்­பில்­லா­மல், பாடத்­தொ­குப்­பைக் குறைக்க முடி­யாது," என்­பதை அவர் சுட்­டி­னார்.

தற்­போது ஜேசி, எம்ஐ மாண­வர்­கள் பொது­வாக பொதுத் தாள், ஒப்­ப­டைப்­புத் திட்­டம் ஆகி­ய­வற்­று­டன் மூன்று எச்2, ஒரு எச்1 நிலைப் பாடங்­க­ளைப் படிக்­கி­றார்­கள். தாய்­மொழி மொழிப் பாடத்­தை­யும் படிக்­க­லாம்.

அதிக பல்­க­லைக்­க­ழக இடங்­கள்

மேலும், வாழ்­நாள் கல்வி பிரி­வி­ன­ரில் பங்­கேற்பு விகி­தத்தை கல்வி அமைச்சு அதி­க­ரிப்­ப­தால், அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் அர­சாங்க நிதி பெறும் பட்­டப்­ப­டிப்புத் திட்­டங்­களில் சேர­லாம். இதன்­படி, மாண­வர்­கள், பெரி­யோர் ஆகிய இரு­தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய இந்த எண்­ணிக்கை 2025ஆம் ஆண்­ட­ள­வில் தற்­போ­தைய 50 விழுக்­காட்­டி­லி­ருந்து இருந்து 60 விழுக்­கா­டாக உய­ரும் என்று கல்­வி­ய­மைச்­சர் சான் கூறி­னார்.

அதா­வது, வரும் 2025இல் கூடு­த­லாக 2,300 பொது நிதி­யுதவி பெறும் பல்­க­லைக்­க­ழக இடங்­கள் இருக்­கும்.