ஜோகூர் வெள்ளத்தில் மூழ்கி இந்தியர் பலி

1 mins read
59f53611-2189-4b2e-90c3-d5ebbff21025
-

தொடர்ந்து பெய்­யும் மழை­யி­னால் ஜோகூர் மாநி­லம் மீண்­டும் வெள்­ளத்­தி­னால் தத்­த­ளிக்­கிறது. 6,000க்கும் அதி­க­மா­னோர் தற்காலிக நிவா­ரண மையங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர்.

வெள்­ளத்­தில் மூழ்கி 20 வயது­களில் இருக்கும் கே. சரத்­குமார் உயி­ரி­ழந்­துவிட்டார். நேற்­றுக் காலை 7.20 மணி­யளவில் தனது டொயோட்டா அவான்சா காரில் அரு­கி­லுள்ள தொழிற்­சாலைக்கு அவர் வேலைக்குச் சென்று கொண்­டி­ருந்­த­போது இச்சம்­ப­வம் நடந்­துள்ளது.

"புகார் பெறப்­பட்­ட­தும் காவல் துறை­யி­னர் தேடுதல் பணி­யில் இறங்­கி­னர். கிட்­டத்­தட்ட ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு நண்­பகல் 12.20 மணி அளவில் நீரில் மூழ்­கிய காரில் அவ­ரது உடல் கண்­டெ­டுக்­கப்­பட்­டது," என்று குலு­வாங் காவல்­துறை தலைமை உதவி ஆணை­யர் பஹ்­ரின் முக­மட் நோ தெரி­வித்­தார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவு­வ­தற்­காக உதவி நிறு­வ­னங்­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தாக நிவா­ரண மையத்தை நேற்­றுப் பார்­வை­யிட்ட பிறகு ஜோகூர் முத­ல­மைச்­சர் ஓன் ஹபீஸ் ஹாசி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

செகா­மாட் மாவட்­டத்­தில் வசிப்­ப­வர்­கள் தங்­கள் வீட்­டுக் கூரை­களில் தஞ்­சம் புகுந்த படங்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

ஜன­வ­ரி­யில் ஏற்­பட்ட வெள்­ளத்­தால் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­ட­னர். குறைந்­த­பட்­சம் இன்று வரை மழை தொட­ரும் என்று வானிலை அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.