தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீச்சல்குளத்திற்குள் இறங்கிய வாகனம்; உயிர்தப்பிய மூதாட்டி

2 mins read
d9b3b927-7f19-4b08-8c57-0fd73fa909d8
-

மோன­லிசா

'கோஜெக்' வாடகை வாக­னம் வழி­த­டு­மாறி நீச்­சல் குளத்­திற்­குள் இறங்­கி­ய­தில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அதில் பய­ணம் செய்த மூதாட்­டி­யும் வாகன ஓட்­டி­யும் உயிர்­தப்­பி­னர். அப்­பர் புக்­கிட் தீமா சாலை­யி­லுள்ள தனி­யார் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் நேற்று முன்­தி­னம் இரவு 9 மணி­ய­ள­வில் இச்­சம்­ப­வம் நடந்­தது.

மக­ளை­யும் பேத்­தி­யை­யும் பார்க்க 78 வயது மலே­சி­ய­ரான வசந்தா கும­ரன் சிங்­கப்­பூர் வந்­திருக்கிறார். சம்­ப­வத்­தன்று இரவு 7.51 மணிக்கு செங்­காங் ஃபெர்ன்வேல் பகு­தி­யி­லுள்ள மக­ளின் வீட்­டி­லி­ருந்து அப்பர் புக்­கிட் தீமா­விலுள்ள பேத்தி வீட்­டிற்கு கோஜெக் வாக­னத்­தில் தனி­யாகப் புறப்­பட்­டார் வசந்தா.

வாக­னத்தை முன்­ப­திவு செய்த பேத்தி யோகேஸ்­வரி நித்­தி­யா­னந்­தன், 42 இணைய வரை­ப­டத்­தில் வாக­னத்­தின் பய­ணத்தை கண்­கா­ணித்து வந்­தார்.

தீவு விரை­வுச்சாலை­யி­லேயே நெடு நேர­மாக வாக­னம் நின்­று­கொண்­டி­ருந்த தால் சந்­தே­க­ம­டைந்த யோகேஸ்­வரி பாட்­டி­யை­யும் வாகன ஓட்­டு­ந­ரை­யும் தொடர்பு கொள்ள முயற்­சித்­தார்.

இருமுறைக்கு மேல் பாட்டியின் மலே­சிய எண்ணைத் தொடர்­பு­கொள்ள இய­ல­வில்லை. ஒரு கட்­டத்­திற்குமேல் வாகன ஓட்­டு­நரும் கைப்­பே­சியை எடுக்காத சூழ­லில் குடும்­பத்­தி­னர் பரி­த­வித்­த­னர்.

"வாடகை வாக­னத்­தில் நான் தனி­யாகப் பய­ணித்­தது இது­தான் முதன்­முறை. இப்­போது நினைத்­தா­லும் மிக­வும் பதற்­ற­மாக இருக்­கிறது," என்ற திரு­வாட்டி வசந்தா சம்­ப­வத்தை விவ­ரித்­தார்.

"வாக­னம் புறப்­பட்­ட­தி­லி­ருந்தே ஓட்­டு­நர் வழிதெரி­யா­மல் தடு­மாறி­னார். கடும் மழை­யில் சரி­யாக பாதை­யும் தெரி­யாத சூழ­லில் பல இடங்­களில் வாக­னத்தை நிறுத்தி வழி­கேட்­டார். ஏறத்­தாழ ஒன்­றரை மணி நேரம் கழித்து 9.17 மணிக்கு பேத்தி வீட்­டுக்கு வந்துசேர்ந்­தார்.

"வாக­னம் நீச்­சல்­கு­ளத்தை நெருங்­கி­ய­போதே, அது நீச்­சல் குளம் என அல­றி­னேன். ஓட்­டு­நர் என்­னைப் பொருட்­ப­டுத்­த­வில்லை. அது நீச்­சல்­கு­ளம் அல்ல தரை­யில் உள்ள மழை­நீர் என்று அவர் சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும்­போதே வாக­னம் குளத்­திற்­குள் இறங்­கி­விட்­டது" என்று பட­ப­டப்­பு­டன் கூறி­னார் வசந்தா.

வாக­னத்­தின் முதல் இரண்டு சக்­கரங்க ளும் 1.8 மீட்­டர் ஆழ­முள்ள நீச்­சல்­கு­ளத்­திற்­குள் மூழ்க ஆரம்­பித்­த­தும் திரு­வாட்டி வசந்தா, கைப்­பையை எடுத்­துக்­கொண்டு காரின் கத­வைத் திறந்து நீச்­சல்­கு­ளத்­திற்­குள் இறங்கி வேக­மாக கரை­யே­றி­னார். குடி­யி­ருப்­பின் காவ­லா­ளி­கள், அக்­கம்­பக்­கத்­தி­னர் அவர் வீ­டு செல்ல உத­வி­னர்.

"தவிர்க்க முடி­யாத வேலை­ இருந்­த­தால், பாட்­டி­யைத் தனி­யாக அனுப்­பி­னோம். இது­வரை இச்­சம்­ப­வம் குறித்து கோஜெக் நிறு­வ­னம் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுத்­த­தா­கத் தெரி­ய­வில்லை. மன்­னிப்­புக்­கோ­ரும் மின்­னஞ்­சல் மட்­டுமே வந்­தது. நிறு­வ­னம் வழிதெரி­யாத ஓட்­டு­நருக்கு உத­வ­வில்லை. வண்டி வர தாம­த­மா­கி நான் அழைத்­தற்­கும் பதில் சொல்­ல­வில்லை," என்று ஆதங்­கப்­பட்­டார் யோகேஸ்­வரி நித்­யா­னந்­தன்.

மலே­சி­யா­வின் சிரம்­பான் பகு­தி­யில் தனி­யாக வசித்து வரும் திரு­வாட்டி வசந்தா, இச்­சம்­ப­வம் தமது துணிச்சலைக் குலைத்துவிட்­டது என்­றார்.

வரும் வெள்­ளிக்­கிழமை மக­ளு­டன் இந்­தியா செல்­லும் திட்­டத்­தில் இருக்கும் திரு­வாட்டி வசந்­தா­வின் பய­ணம் குறித்து குடும்­பத்­தி­னர் யோசிக்கின்றனர்.