தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக வீடு கிடைக்க தாமதம்; 896 பேருக்கு $5.1 மி. இழப்பீடு

2 mins read
efcd27c2-4128-4e67-8370-47566f830844
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் 'பொங்­கோல் வாட்­டர்வே சன்­ரைஸ் II' வீடு­களை வாங்­கிய அனைத்து வீட்டு உரி­மை­யா­ளர் களுக்­கும் இம்­மாத இறு­தி­யில் வீட்­டுச் சாவி வழங்­கப்­ப­டு­கிறது. அதே சம­யத்­தில் கொள்ளை­ நோய் கார­ண­மாக வீடு­களை வழங்­கு­வ­தில் ஏற்­பட்ட தாம­தத்­திற்­காக அவர்­க­ளுக்கு மொத்தம் $5,156,700 மதிப்­பிலான இழப்­பீடு வழங்­கப்­ப­டு­கிறது.

இத­னால் 896 வீட்டு உரி­மை­யா­ளர் களுக்கு வீட்­டுச் சாவி­யோடு இழப்­பீ­டும் கிடைக்­க­வி­ருக்­கிறது.

தாம­த­மான இரண்டு தேவைக்­கேற்ப கட்­டப்­படும் (பிடிஒ) வீட்­டுத் திட்­டங்­களில் 'பொங்­கோல் வாட்­டர்வே சன்­ரைஸ் II' திட்ட ­மும் ஒன்று.

வீட்­டுத் திட்­டங்­க­ளின் தற்­போ­தைய நில­வ­ரத்தை நேற்று வெளி­யிட்ட வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், ஒவ்­வொரு வீட்டு உரிமை­ யா­ள­ருக்கு ஆயி­ரம் வெள்ளி முதல் $10,500 வரை இழப்­பீடு வழங்­கப்­படும் என்று தெரி­வித்­தது. அதா­வது பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு உரி­மை­யா­ள­ரும் சராசரியாக 5,750 வெள்ளி பெறு­வர். வீட்­டின் விலை மற்றும் தாம­தத்திற்கு ஏற்ப இழப்­பீடு மாறு­படும்.

இந்­தத் திட்­டத்­தில் ஏழு புளோக்­கு­கள் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ள­தாக வீவக தெரி­வித்­தது. மொத்­த­முள்ள 1,014 வீடு­களில் 951 வீடு­கள் முன்­ப­திவு செய்­யப்­பட்­டன. ஆனால் 2021 அக்­டோ­பர் மாதத்­துக்­குள் முன்­ப­திவு செய்த மொத்­தம் 896 வீட்டு உரி­மை­யா­ளர்­கள் மட்­டும் இழப்­பீட்­டுக்­குத் தகுதி பெற்­றுள்­ள­னர்.

இதற்­கி­டையே தாம­த­மான மற்­றொரு பிடிஒ திட்­ட­மான செங்­காங்­கில் உள்ள 207 வீடு­களை உள்­ள­டக்­கிய 'ஆங்­கர்­வில்­லேஜ்' வரும் மே முதல் ஜூலை மாதத்­திற்­குள் நிறை­வ­டை­யும் என வீவக தெரி­வித்­தது. இந்­தத் திட்­டம் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் முடிக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

இதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இழப்­பீடு வழங்­கப்­படும் என்று கடந்த மே மாதம் வீவக தெரி­வித்­தி­ருந்­தது. இதன் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தாம­த­மான காலத்­திற்­கேற்ப $2,270 முதல் $6,360 வரை இழப்­பீடு பெறு­வர்.

இந்த செங்­காங் குடி­யி­ருப்­புத் திட்­டத்­தில் மே மாதத்­தில் வீட்­டுச் சாவி­யைப் பெறு­ வோ­ருக்கு $2,270 முதல் $4,240 வரை­யும் ஜூலை­யில் சாவி­யைப் பெறு­வோ­ருக்கு $3,400 முதல் $6,360 வரையும் இழப்பீடு வழங்கப் படும் என்­றும் கழ­கம் அறி­வித்­தி­ருந்­தது.

'வாட்­டர்வே சன்­ரைஸ் II' குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­திற்கு நேற்று சென்ற தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, டிசம் ­ப­ரி­லி­ருந்து பத்­தில் ஆறு குடி­யி­ருப்­பா­ளர்­கள் வீட்­டுச் சாவி­யைப் பெற்­று­விட்­ட­தாக தெரி­வித்­தார். எஞ்­சி­ய­வர்­க­ளுக்கு இம்மாத இறுதி­ யில் வீட்­டுச் சாவி வழங்­கப்­படும்.

'வாட்­டர்வே சன்­ரைஸ் II' குடி­யி­ருப்பு வளா­கத்­தில் ஈரறை ஃபிளக்ஸி, மூவறை, நான்­கறை வீடு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இதற்­கி­டையே, வீடு கிடைக்க தாம­த­மா­ன­தால் சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளின் பொறுமை, புரிந்­து­ணர்வு, சகிப்­புத்­தன்­மைக்கு திரு டெஸ்­மண்ட் லீ நன்றி தெரி­வித்­துக்கொண்­டார்.

"அவர்­க­ளு­டைய வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது. நிறைய அசௌ­க­ரி­யத்­தை­யும் நிச்­ச­ய­மற்­ற­ நிலையையும் பொறுத்­துக்கொண்­ட­னர்," என்­று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.