தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வதந்தியைத் தடுக்க தமிழக அரசு அவசர நடவடிக்கை

3 mins read
d203c284-9faa-414a-a347-55ae37ddcf7e
-

வட­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக வெளி­யான வதந்தி தமிழ்­நாடு அர­சுக்­குப் பெரும் தலை­

வ­லி­யைத் தந்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்­தில் உட­ன­டி­யாகத் தலை­யிட்ட அரசு, வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­திலும் மேலும் வதந்தி பரவாமல் தடுப்பதிலும் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கிறது.

எல்லா மாவட்­டங்­க­ளி­லும் உள்ள வட­இந்­தி­யத் தொழி­லா­ளர்­கள் கணக்­கெ­டுக்­கப்­பட்டு அவர்­க­ளு­டன் கலந்­து­பே­சு­

வ­தற்கு ஏது­வாக இந்தி தெரிந்த அதி­கா­ரி­கள் அமர்த்­தப்­பட்டு வரு­வ­தாக தமிழ்­நாடு அரசு தெரி­வித்து ள்­ளது.

இந்­நி­லை­யில் தமிழ்­நாட்­டில் இருந்து வட­இந்­தி­யா­வுக்­குச் செல்­லும் ரயில்­களில் கூட்­டம் நிரம்பி வழி­வ­தா­க­வும் இது ஹோலி பண்­டி­கைக்­கான கூட்­டமா அல்­லது அச்­சத்­தின் கார­ண­மாக ஊர் திரும்­பும் கூட்­டமா என்று 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' கேள்வி எழுப்பி உள்­ளது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் கூட்­டம் கூட்­ட­மாக அத்­த­கைய தொழி­லா­ளர்­கள் தங்­க­ளது சொந்த ஊருக்­குத் திரும்­பி­யதை இந்தச் சம்பவம் நினை­வூட்­டு­வ­தாக அச்­செய்தி குறிப்பிட்டது.

இதற்­கி­டையே, தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக வட­மா­நி­லங்­களில் வேக­மா­க­வும் கடு­மை­யா­க­வும் பர­விய வதந்தி உண்­மையா என்­பதை அறிய பீகார் மாநில அரசு அதி­கா­ரி­கள் தமிழ்­நாட்­டில் தீவி­ர­மாக ஆய்வு மேற்­கொண்­ட­னர். இறு­தி­யில் நேற்று தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்­புவை அந்த அதி­கா­ரி­கள் சந்­தித்­துப் பேசி­னர்.

பீகார் அதி­கா­ரி­களில் பால­மு­ரு­கன் என்ற தமி­ழ­ரும் உள்­ளார். அந்த மாநில உள்­ளாட்­சித் துறைச் செய­லா­ள­ராக இருக்­கும் அவர், தமிழ்­நாட்­டில் அச்­ச­மின்றி இருப்­ப­தாக பீகார் மாநில தொழி­லா­ளர்­கள் தமது குழு­வி­டம் தெரி­வித்­த­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

வதந்­தி­யால் அச்ச உணர்வு ஏற்­பட்­ட­தா­க­வும் தற்­போது உண்மை நிலையை அறிந்­துள்­ள­தா­க­வும் தொழி­லா­ளர்­கள் கூறி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், பீகார் முத­ல­மைச்­சர் நிதிஷ்­கு­மாரை தமி­ழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டிஆர் பாலு நேற்று சந்­தித்­துப் பேசி­னார். வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தமி­ழக அரசு தேவை­யான பாது­காப்பு அளித்து வரு­வ­தாக அப்­போது நிதிஷ் குமா­ரி­டம் அவர் விளக்­கி­னார்.

இந்­தி­யா­வில் நேற்று ஹோலி பண்­டி­கை கொண்­டா­டப்­பட்­டது.

இதில் பங்­கேற்­ப­தா­கக் கார­ணம் காட்டி வெளிமாநி­லத் தொழி­லா­ளர்­கள் பலரும் தங்­க­ளது சொந்து ஊருக்­குத் திரும்பு­ வது குறித்து கோவை தொழில்­துறை கூட்­ட­மைப்­பான 'போசியா' நிர்­வா­கி­கள் கவலை தெரி­வித்­த­னர்.

"எங்­க­ளது நிறு­வ­னங்­களில் 50 விழுக்­கா­டும் நூற்­பா­லை­களில் 80 விழுக்­கா­டும் வட­

மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் வேலை செய்­கி­றார்­கள். மார்ச் 7ஆம் தேதி (நேற்று) அவர்­க­ளுக்கு சம்­பள நாள். சம்­ப­ளம் வாங்­கிய பின்­னர் ஊருக்­குச் சென்­று­விட்­டால் ஹோலியை கார­ணம் காட்டி அவர்­கள் திரும்பி வரு­வார்­களா என்­பது தெரி­ய­வில்லை," என்று அந்த அமைப்­பி­னர் கூறி­னர்.

ஆனால் 'என்­டி­டிவி'யிடம் பேசிய வட­மா­நில தொழி­லா­ளர்­கள், ஹோலி முடிந்­த­தும் தமி­ழ­கம் திரும்­புவதாக­வும் தமிழ்­நாட்டு நண்­பர்­கள் தங்­க­ளைக் காப்­பார்­கள் என்று நம்­பிக்கை இருப்­ப­தா­க­வும் கூறி­னர்.

இந்­நி­லை­யில், வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக போலி காணொளி வெளி­யிட்­ட­தன் தொடர்­பில் மனோஜ் யாதவ் என்­ப­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். செங்­கல்­பட்டு மாவட்­டம் பொத்­தே­ரி­யில் தங்கி இருந்த அவர், ஜார்க்­கண்ட் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர். அவர் மீதும் அவ­ருக்கு உடந்­தை­யாக இருந்த 6 பேர் மீதும் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

வடஇந்தியா செல்லும் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்