விடுமுறை அளித்து பெண்களைப் பெருமைப்படுத்திய தெலுங்கானா

2 mins read
1c329ddb-8232-4a09-ab49-f62d9d6e9ddf
அனைத்­து­லக மக­ளிர் தினம் இன்று கொண்­டா­டப்­ப­டு­வதை முன்­னிட்டு இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லம் பெண் ஊழி­யர்­க­ளுக்கு விடு­முறை அறி­வித்து உள்­ளது. படம்: பிக்ஸாபே -

அனைத்­து­லக மக­ளிர் தினம் இன்று கொண்­டா­டப்­ப­டு­வதை முன்­னிட்டு இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லம் பெண் ஊழி­யர்­க­ளுக்கு விடு­முறை அறி­வித்து உள்­ளது.

இந்­தி­யா­வில் இது­வரை எந்த ஒரு மாநி­ல­மும் பெண்­க­ளைப் போற்­றும் வகை­யி­லான இந்த முயற்­சியை எடுத்­த­தில்லை என்­றும் உல­க­ள­வில்­கூட பெண்களுக்கு வழங்­கப்­பட்டு இருக்­கும் ஓர் அரி­தான சலுகை இது என்­றும் செய்தி நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

தெலுங்­கானா மாநி­லத்­தின் அரசு அலு­வ­ல­கங்­களில் வேலை செய்­யும் எல்­லாப் பெண்­க­ளுக்­கும் இன்று சம்­ப­ளத்­து­டன் கூடிய விடுப்பு வழங்­கப்­ப­டு­வ­தாக மாநில தலை­மைச் செய­லா­ளர் சாந்­தி­கு­மாரி அறி­வித்­துள்­ளார்.

அத்­து­டன், மக­ளிர் சுய உத­விக் குழு­வில் இடம்­பெற்­றுள்ள பெண்­க­ளுக்­கும் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்டு வரும் மக­ளிர் அமைப்­பு­க­ளுக்­கும் 750 கோடி ரூபாய் அள­வுக்கு வட்டி இல்­லாக் கட­னும் வழங்­கப்­பட இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இந்த அறி­விப்­பால் தெலுங்­கானா பெண் ஊழி­யர்­கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

தெலுங்­கானா மாநில ஆளு­ந­ராக இருப்­ப­வ­ரும் ஒரு பெண்­தான். தமி­ழ­கத்­தைச் சேர்ந்த தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் அப்­ப­த­வி­யில் உள்­ளார்.

மக­ளிர் தினத்தை முன்­னிட்டு ஆளு­நர் மாளி­கையில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் பேசிய அவர், உயர் பத­வி­களில் இருக்­கும் பெண்­கள் அவ­மா­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

மேலும், பெண்­களை இழி­வு­ப­டுத்­து­வோ­ருக்கு வெகுமதிகள் வழங்­கப்­ப­டு­வது வேத­னைக்­கு­ரி­யது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"தெலுங்­கானா என்­பது ராணி ருத்­ரம்­மா­வின் பூமி. நானும் வேலு நாச்­சி­யார் என்­னும் வீராங்­க­னை­யின் மண்­ணி­லி­ருந்து வந்­த­வள். எனவே பெண்­களை மதிக்­கக் கற்­றுக்­கொள்­ளுங்­கள். சமூக ஊட­கங்­களில் கருத்­தைப் பதிவு செய்­யு­முன்­னர் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள்," என்று திரு­மதி தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் கூறி­னார்.