தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக-பாஜக உறவில் விரிசல் அறிகுறி; கட்சி தாவும் போக்கு; மாநில பாஜக சவால்

2 mins read
4922db77-b835-4d5e-8dd6-38bdb53a783e
-

தமிழ்­நாட்­டில் திரா­விட இயக்­கத்­தைச் சேர்ந்த கரு­ணா­நிதி, ஜெய­ல­லிதா போன்ற அதிக வல்­லமை வாய்ந்த தலை­வர்­களுக்­குப் பிறகு, வலு­வாக செயல்­பட்டு வந்த அதி­முக-பாஜக கூட்­ட­ணி­யில் விரி­சல் ஏற்­பட்டு இருப்­ப­தற்­கான அறிகு­றி­கள் தெரி­ய­வந்து இருக்­கின்­றன.

பாஜ­க­வில் இருந்து வில­கு­வோரை அதி­மு­க­வும் அதி­மு­க­வில் இருந்து வில­கு­வோரை பாஜ­க­வும் போட்டி போட்­டுக்­கொண்டு சேர்த்து வரு­வது ஒரு­பு­றம் இருக்க, இரு கட்சி­களை­யும் சேர்ந்த தொண்­டர்­கள் போட்­டா­ போட்டி போட்டுக் கொண்டு போராட்டக் களத்­தில் குதித்து இருக்­கி­றார்­கள்.

அதி­முக தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­ சுவரொட்டி­களை கோவில்­பட்­டியில் பாஜ­க­வி­னர் கிழித்து, கொளுத்­தி­னர்.

அதனை ஆட்­சே­பித்து அதி­மு­க­வி­னர் பேரணி நடத்­தி­யதை அடுத்து பாஜ­க­வைச் சேர்ந்த நால்­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். இந்த நிலை­யில், அதி­மு­க­வின் மற்­றொரு தரப்­பா­கச் செயல்­படும் ஓ. பன்­னீர் செல்­வத்­தைச் சந்­திக்க சென்ற தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, கட்­சி­யில் இருந்து யார் வில­கி­னா­லும் அதைப் பற்றி தான் கவ­லைப்­ப­டு­வ­தாக இல்லை என்று தெரி­வித்­தார்.

கரு­ணா­நிதி, ஜெய­ல­லி­தாவை போல தானும் மிக வலு­வான ஒரு தலை­வர் என்று குறிப்­பிட்ட அவர், கட்­சி­யில் குற்­றம் செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதைச் சகித்­துக்­கொள்ள முடி­யா­மல் சிலர் கட்­சி­யை­விட்டு வெளி­யே­று­வ­தா­க­வும் கூறி­னார்.

தன்­னு­டைய தலை­மைத்­து­வத்­தின்­கீழ் போகப்போக செயல்­பாடு­கள் மேலும் உறு­தி­யாக இருக்­கும் என்­றா­ர­வர்.

திரா­விடக் கட்­சி­கள் பாஜ­க­வினரை இழுத்து பாஜ­க­வின் ஆத­ர­வு­டன் அர­சி­யல் நடத்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்டு வரு­வ­தையே இது காட்­டு­வ­தா­க­வும் அண்­ணா­மலை கூறி­னார்.

பாஜ­க­வின் தக­வல் தொழில்­நுட்­பப் பிரி­வின் தலை­வ­ரான நிர்­மல் குமார் சில நாள்­க­ளுக்கு முன் பாஜகவுக்கு முழுக்கு போட்டு விட்டு அதி­மு­க­வில் சேர்ந்­து­விட்­டார். அதைத் தொடர்ந்து இதர சில­ரும் பாஜ­க­வில் இருந்து அதிமுக போய்விட்டனர்.

இந்­நி­லை­யில், மது­ரை­யில் அண்­ணா­மலை முன்­னி­லை­யில் 100க்கும் மேற்­பட்ட அதி­மு­கவினர் பாஜ­க­வில் சேர்ந்­த­னர்.

பாஜ­க­வி­னர் அதி­மு­க­வில் சேர்­வது பற்றி கருத்து கூறிய முன்­னாள் அதி­முக அமைச்­சர் ஜெயக்­கு­மார், இது அதி­முக கட்சி வலு­வ­டை­வ­தையே குறிக்­கிறது என்­றும் பாஜ­க­வில் இருந்து விலகி மேலும் பலர் அதி­மு­க­வில் சேர­வுள்ளனர் என்றும் கூறினார்.

அதே­போல, அதி­முக வழக்­கறி­ஞர் பிரி­வைச் சேர்ந்த முரு­க­வேல், நீண்­ட­கா­ல­மாக தாங்­கள் எதிர்­பார்த்து வரும் ஒன்று நடந்­தால் நல்­லது என்று கூறி­னார்.

பாஜ­க­வு­டன் உறவு வைத்­திருப்­ப­தன் கார­ண­மா­கத்­தான் அதி­மு­க­வுக்குத் தோல்வி ஏற்­படு­வ­தாக அதி­மு­க­வின் பெரும்­பா­லான தொண்­டர்­கள் கரு­து­கிறார்­கள் என்று அப்­போ­தைக்கு அப்­போது தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

அதி­முக-பாஜக இடையே விரி­சல் அறி­கு­றி­கள் தெரி­ய­வந்து இருப்­ப­தற்கு அண்­மை­யில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்­தேர்­தலே கார­ண­மாக இருக்­க­லாம் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கி­றார்­கள்.

மாநி­லத்­தில் நடக்­க­வி­ருக்கும் தேர்­தல்­களைக் குறி­வைத்து அதி­முக செயல்­ப­டத் தொடங்கி இருப்­ப­தாக அர­சி­ய­லில் பேச்சு அடி­ப­டு­கிறது.