இலங்கையைக் காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு நன்றி: அதிபர் ரணில் விக்கிரமசிங்க

2 mins read
a13adf26-028d-451e-a9d6-35974d2ea9bc
இலங்கை பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கித் தவித்­த­போது உத­விக்­க­ரம் நீட்­டிய மூன்று பெண்­க­ளுக்­குத் தாம் நன்றி கூறு­வ­தாக அந்­நாட்டு அதி­பர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்­ளார். படம்: ப்ளூம்பர்க் -

இலங்கை பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கித் தவித்­த­போது உத­விக்­க­ரம் நீட்­டிய மூன்று பெண்­க­ளுக்­குத் தாம் நன்றி கூறு­வ­தாக அந்­நாட்டு அதி­பர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்­ளார்.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கிய இலங்­கைக்கு இந்­தியா பெரு­ம­ள­வில் நிதி­யு­த­வியை வழங்­கி­யது. இதன் தொடர்­பில் இந்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மனை அவர் பாராட்­டி­னார்.

அனைத்­து­லக மக­ளிர் தினத்­தை­யொட்டி நேற்று முன்­தி­னம் கொழும்­பில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் அதி­பர் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­றி­னார்.

திரு­வாட்டி நிர்­மலா சீதா­ரா­மன் உள்­ளிட்ட மூன்று அனைத்­து­ல­கப் பெண் தலை­வர்­க­ளால்­தான் இலங்­கை­யின் நெருக்­கடி சீராகி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"இலங்கை பொரு­ளா­தார நெருக்­க­டி­யைச் சந்­தித்த நேரத்­தில் கைகொ­டுத்த மூன்று பெண் தலை­வர்­களில் முதன்­மை­யா­ன­வர் இந்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன். இலங்கை நொடித்­துப் போன­தாக அறி­வித்த பிற­கும் அவர்­தான் இந்­தி­யப் பிர­த­மர் உள்­ளிட்ட அமைச்­ச­ர­வை­ சகாக்களுடன் பேசி, மூன்று பில்­லி­யன் டாலர் கடன் வழங்க முடி­வெ­டுத்­தார்," என்­றார் அதி­பர் விக்­கி­ர­ம­சிங்கே.

"நொடித்­துப்­போன நாட்­டுக்கு கடன் கொடுக்­கும் துணிச்­ச­லான முடிவை எடுத்த அவ­ருக்கு நன்றி," என்று குறிப்­பிட்­டார்.

அதே­போல அமெ­ரிக்க நிதி அமைச்­சர் ஜெனட் எல்­ல­னும் இலங்­கைக்கு அமெ­ரிக்க நிதி­­உதவி கிடைப்­ப­தில் முக்­கி­யப் பங்­காற்­றி­யி­ருக்­கி­றார்.

அவ­ருக்­கும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­வ­தா­கக் கூறிய திரு விக்­கி­ர­ம­சிங்கே, அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கிறிஸ்­ட­லினா ஜார்­ஜிவா, உலக வங்கி உள்­ளிட்ட அமைப்­பு­க­ளி­டம் நிதி­யு­தவி பெற்­றுத்­த­ரு­வ­தில் ஆற்­றிய பங்­க­ளிப்­பிற்­காக நன்றி கூறி­னார்.

இந்த மூன்று பெண்­களும் தக்க நேரத்­தில் உத­வி­யி­ருக்­கா­விட்­டால் இலங்­கை­யின் நிலை மிக மோச­மா­கி­யி­ருக்­கு­ம் என்­றார் அதிபர் விக்கிரமசிங்க.