முகைதீன்மீது அதிகார முறைகேடு உட்பட ஆறு குற்றச்சாட்டுகள்

முகைதீன்மீது அதிகார முறைகேடு உட்பட ஆறு குற்றச்சாட்டுகள்

2 mins read
19c23318-ba56-4e67-8122-1f5ca14da2a4
-

அதி­கா­ரத்தை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தாக மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசின் மீது நேற்று நான்கு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

அர­சாங்­கத்­தின் கொவிட்-19 உத­வித் திட்ட நிதி­யாக 232.5 மில்­லி­யன் ரிங்­கிட் (S$69.8 மில்­லி­யன்) தொடர்­பான அந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் கோலா­லம்­பூர் அமர்வு நீதி­மன்­றம் சுமத்­தி­யது.

கடந்த 2020ஆம் ஆண்­டுக்­கும் 2021ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 17 மாதங்­கள் மலே­சி­யா­வின் பிர­த­ம­ராக இருந்­தார் முகை­தீன்.

பெர்­சத்து கட்­சி­யின் தலை­

வ­ரா­க­வும் இருந்த அவர் மீது 195 மில்­லி­யன் ரிங்­கிட் முறை­கேடு தொடர்­பில் மேலும் இரு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றம் தொடர்­பா­னவை அவை. தமது பிர­த­மர் பத­வி­யைப் பயன்­ப­டுத்­தி­யும் பெர்­சத்து கட்­சி­யின் தலை­வர் பத­வி­யைப் பயன்­ப­டுத்­தி­யும் நான்கு நிறு­வ­னங்­க­ளி­ட­ம் இருந்தும் தனிப்­பட்ட ஒரு­வ­ரி­ட­மும் 232.5 மில்­லி­யன் ரிங்­கிட் பெற்­ற­தாக 75 வயது முகை­தீன் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

புகாரி ஈகு­விட்டி, நெப்­டூ­ரிஸ், மாம்­ஃபோர் என்­பன அந்த நிறு­வ­னங்­கள். அஸ்­மான் யூசோஃப் என்­ப­வர் அந்த தனிப்பட்ட நபர். 2020 மார்ச் 1ஆம் தேதிக்­கும் 2021 ஆகஸ்ட் 20ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் முகை­தீன் இச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், 2021 பிப்­ர­வரி 25ஆம் தேதிக்­கும் 2022 ஜூலை 8ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால கட்டத்தில் புகாரி ஈகு­விட்­டி­யி­டம் இருந்து சட்டவிரோத நட­

வ­டிக்கை மூலம் 120 மில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­புள்ள அனு­கூ­லங்

களைப் பெற்­ற­தா­க­வும் முகை­தீன் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

நீதி­பதி அஸுரா ஆல்வி முன்­னி­லை­யில் வாசிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை மறுத்த முகை­தீன் அவற்­றின் மீது விசா­ரணை நடத்த வேண்­டும் என்று கோரி­னார்.

சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு­க­ளின்­படி முகை­தீன் 20 ஆண்டு சிறை­வா­சத்தை எதிர்­நோக்­கு­கி­றார். அத்­து­டன், லஞ்ச ஊழல் தொகை­யைக் காட்­டி­லும் ஐந்து மடங்கு அல்­லது 10,000 ரிங்­கிட் இதில் எது அதி­கமோ அது அவ­ருக்கு அப­ரா­த­மா­க­வும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும். அதி­கார முறை­கேடு தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான தண்­ட­னை­கள் இவை. 2 மில்­லி­யன் ரிங்­கிட் பிணை அனு­ம­திக்­கப்­பட்ட முகை­தீ­னின் பாஸ்­போர்ட் முடக்­கப்­பட்டு உள்­ளது.

அதே­போல கள்­ளப் பண­மாற்ற குற்­றத்­திற்கு 15 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் முறை­கேட்­டுத் தொகை­யைக் காட்­டி­லும் ஐந்து மடங்கு அல்­லது 5 மில்­லி­யன் ரிங்­கிட் இதில் எது அதி­கமோ அது அப­ரா­த­மாக விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

நீதி­மன்­றத்­திற்கு வெளியே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முகை­தீன், "நான் லஞ்­சம் பெற மறுத்­தேன். ஒரு காசைக்­கூட எனது சொந்த பாக்­கெட்­டில் போட்­டுக்­கொள்­ள­வில்லை. வழக்­கில் நீதி கிடைக்க நானும் எனது வழக்­க­றி­ஞர்­களும் போராட உள்­ளோம்," என்றார்.