புதிய பாணி வீவக வாடகை வீடுகள்

புதிய பாணி வீவக வாடகை வீடுகள்

2 mins read
28b75cee-c0bd-450f-98a7-b8b35f2e2abe
-
multi-img1 of 2

ஒற்றையர்களுக்கு தனியறை, பொதுவான வசதிகள்

வரு­மா­னம் குறைந்த ஒற்­றை­யர்­க­ளுக்­காக பொது­வ­ச­தி­யு­டன் தனி­ய­றை­களை வாடகை வீடாக வழங்­கும் புதிய பாணி திட்­டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பரி­சீ­லித்து வரு­கிறது.

'ஓரறை பகிர்வு வச­தி­கள்' என்­ற­ழைக்­கப்­படும் இந்த முன்­னோ­டித் திட்­டம் இவ்­வாண்டு இறு­தி­யில் சோதிக்­கப்­படும்.

வரு­மா­னம் குறைந்த ஒற்­றை­யர்­கள் ஓர­றை­யில் வசிக்­க­லாம். ஆனால் கழி­வறை, சமை­ய­லறை போன்ற வச­தி­கள் பொது­வாக இருக்­கும்.

இந்­தப் புதிய திட்­டம், ஒற்­றை­யர்­க­ளின் தனிச்­சு­தந் திரத்தை பாதிக்­காத, அதே சம­யத்­தில் சமூ­கத்­து­டன் சேர்ந்து வாழும் சூழ­லைத் தரு­கிறது என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் வீவக தெரி­வித்­தது.

அங் மோ கியோ அவென்யூ 8ல் முன்பு ஆண்­டர்­சன் தொடக்­கக் கல்­லூரி இருந்த இடத்­தில் புதிய பாணி வாட­கைத் திட்­டம் அறி­மு­க­மா­கிறது.

அங்கு 11 மாடி­க­ளைக் கொண்ட இரண்டு புளோக்­கு­கள் உள்­ளன.

ஏறக்­கு­றைய 480 வாட­கை­தா­ரர்­கள் இங்கு ஓர­றை­களில் தங்க வைக்க முடி­யும். இவை, 240 வீடு­கள் பிரிக்­கப்­பட்டு உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஒவ்­வோர் அறை­யும் 9 சதுர மீட்­டர் (சுமார் 97 சதுர அடி) பரப்­ப­ள­வில் இருக்­கும். ஒற்­றைக் கட்­டில், அல­மாரி, நாற்­காலி, மேசை, சுவர் அல­மா­ரி­கள், சிறிய குளிர்­பத­னப் பெட்டி போன்ற அடிப்­படை வச­தி­கள் அறை­களில் செய்­யப்­பட்­டி­ருக்­கும்.

ஆனால் சுகா­தா­ரக் கார­ணங்களுக்­காக மெத்­தை­களை வாட­கை­தா­ரர்­களே வாங்க வேண்­டும் என்று வீவக தெரி­வித்­தது.

ஒவ்­வொரு மாடி­யி­லும் இருக்­கும் 24 வாட­கை­தா­ரர்­க­ளுக்கு ஐந்து அடுப்­பு­கள் உள்ள சமைய­ லறை, கைக­ழு­வும் தொட்டி, அல­மாரி போன்ற வச­தி­கள் பொது­வாக இருக்­கும்.

ஒவ்­வொரு மாடி­யி­லும் இரண்டு பொதுக் கழிப்­பறை வச­தி­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கும். அதா­வது 12 பேர் மூன்று குளி­யல் அறை­க­ளை­யும் மூன்று முதல் நான்கு பேர் கழி­வ­றை­யை­யும் பகிர்ந்­து­கொள்­வர்.

இதே வளா­கத்­திற்­குள் துணி துவைப்­பது, நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அறை­கள், உண­வ­ருந்­தும் இடங்­களை வாட­கை­தா­ரர்­கள் பகிர்ந்­து­கொள்­வார்­கள்.

இந்­தப் புதிய பாணி அமைப்பு, 2021ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கூட்டு ஒற்­றை­யர் திட்­டம்­போல இருக்­காது.

அதில் ஓரறை அல்­லது ஈரறை வீவக வீடு­களை இரு ஒற்­றை­யர்­கள் பகிர்ந்துகொண்­ட­னர்.

மாதிரி வீடு ஒன்றை நேற்று சுற்­றிப்பார்த்த தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, தற்­போ­தைய உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை மாற்றி உரு­வாக்­கு­வ­தற்கு நேரம் தேவைப்­ப­டு­வ­தால் முந்­தைய தங்குவிடுதி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது என்­றார்.

"புதி­தாக வச­தி­க­ளைச் செய்­யும் வாய்ப்பு உள்­ளது. ஆனால் அதற்கு சில ஆண்­டு­கள் ஆக­லாம்.

"ஏரா­ள­மான வளங்­களும் தேவை. இத­னால் ஏற்­கெ­னவே உள்ள வீடு­களை மறு­சீ­ர­மைக்­கும் முடிவு எடுக்­கப்­பட்­டது," என்று அவர் கூறி­னார்.

இந்த முன்­னோ­டித் திட்­டத்­தி­லி­ருந்து பல­வற்­றைக் கற்­றுக் கொள்ள முடி­யும் என்று கூறிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "இது சரி­ வர­லாம் அல்­லது வரா­மல் போக­லாம். உள்­கட்­ட­மைப்பு வச­தி ­களில் சிறிய மாற்­றங்­கள் செய்­தால் திட்­டம் செயல்­ப­ட­லாம். இது, கற்­ற­லுக்­கான சிறந்த வழி," என்று கூறினார்.

குறைந்த வருமான ஒற்றையர் களுக்கான வாடகை விவ­ரங்­கள் இவ்­வாண்டு இறு­தி­யில் வெளி­யி­டப்­ப­டும்.