இளையர்கள் தமிழ் பேசவும் நேசிக்கவும் ஒரு மாத விழா

இளையர்கள் தமிழ் பேசவும் நேசிக்கவும் ஒரு மாத விழா

2 mins read
9234daea-c561-468b-b1b0-a41012549666
-

தமிழ்மொழியின் 'அழகை'ப் போற்ற 42 நிகழ்ச்சிகள்

பொன்­மணி உத­ய­கு­மார்

சிங்­கப்­பூர் தமி­ழர்­கள் ஆங்­கில மொழியை அதி­கம் பயன்­ப­டுத்­தி­னா­லும் கலா­சார, உணர்­வு­பூர்­வ­மான தொடர்பை தமிழ் மொழி­யு­டன் மட்­டுமே கொண்­டி­ருப்­ப­தாக வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் சு. மனோ­க­ரன் குறிப்பிட்டுள்ளார்.

பள்­ளி­யில், வேலை­யில், சமூக ஊட­கத்­தில் ஆங்­கி­லம் வழக்கமொழி­யாக இருக்க, உல­க­ம­ய­மா­தல் ஆங்­கிலப் புழக்­கத்தை மேலும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர் கூறி­னார்.

வாழ்க்கைத் தொழி­லில் முன்­னே­று­வ­தற்­கும் ஆங்­கி­லம் தேவைப்­ப­டு­வதை தேசிய அள­வில் காண­லாம் என்றார் அவர்.

இதற்­கேற்ப இந்­தி­யர்­களில் 59.2 விழுக்­காட்­டி­னர் வீட்­டில் அதி­க­மாக ஆங்­கி­லம் பேசு­வதாக 2020இல் புள்­ளி­வி­வரத் துறை வெளி­யிட்ட அறிக்கை தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு இந்த விகிதம் 41.6ஆக இருந்­தது. தமிழை வாழும் மொழி­யாக வைத்திருப்பதில் சவால்­கள் இருந்­தா­லும் தமிழ்மொழி என்­றும் செழிக்­கும் என்ற நம்­பிக்­கையை வளர்­த­மிழ் இயக்­கம் கொண்­டு உள்­ள­தாகத் திரு மனோ­க­ரன் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்ட நிலை­யில் தமிழ்­மொழி விழா 2023, முற்­றி­லு­மாக நேரடி வரு­கை­யா­ளர்­க­ளு­டன் நடை­பெற உள்­ளது. 'அழகு' என்­பது இவ்­வாண்டு தமிழ்மொழி விழா­வின் கருப்­பொ­ருள்.

பொது வாக்­கெடுப்­புக்­குப் பிறகு இந்­தக் கருப்­பொ­ருள் நிர்­ண­யிக்­கப்­பட்­ட­தாக வளர்­தமிழ் இயக்­கம் கூறி­யது.

'தமிழை நேசிப்­போம், தமி­ழில் பேசு­வோம்' என்ற குறிக்­கோளை ஒட்டி இவ்­வாண்டு 43 பங்­காளி அமைப்­பு­கள் 42 நிகழ்ச்­சி­களைப் படைக்க உள்­ளன. இலக்­கி­யம், கலை, கலா­சா­ரம் சார்ந்த பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் நடை­பெ­றும் ஒரு மாத விழா­வில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.

சிங்­கப்­பூர் தமிழ்ச் சமூ­கம் தமிழ்­மொ­ழி­மீது கொண்­டுள்ள ஆர்­வம், பயன்­பாட்­டில் கொண்­டுள்ள தன்­னம்­பிக்கை ஆகி­ய­வற்­றைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் உள்­ளூர்ச் சூழ­லுக்­குப் பொருந்­தும் தமிழ் மொழி வாழ்த்­துப் பாடலை வளர்­த­மிழ் இயக்­கம் தயா­ரிக்க உள்­ளது. இதை­ய­டுத்து தமிழ் மொழி வாழ்த்­துப் பாடல் எழு­தும் போட்­டி­யும் இவ்­வாண்டு நடை­பெ­றும்.

மேலும், தமிழ்­மு­ரசு உட்­பட மூன்று புதிய பங்­காளி அமைப்­பு­கள் நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பில் இவ்­வாண்டு இணைந்­துள்­ளன. தமிழ்­மு­ரசு, உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்­காக மொழி­பெ­யர்ப்­புப் பயி­ல­ரங்­கை­யும் செய்­தி­ய­றைச் சுற்­று­லா­வை­யும் நடத்த உள்­ளது.

அனைத்­துத் தரப்­பி­னர்க்­கும் நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக வளர்­த­மிழ் இயக்க உறுப்­பி­னர் எஸ்­என்வி நாரா­ய­ணன் கூறி­னார். இளை­யர்­க­ளின் பங்­கேற்பை அதி­க­ரிக்­கும் நோக்கில், இவ்­வாண்டு ஏறத்­தாழ 67 விழுக்­காட்டு நட­வடிக்­கை­கள் இளை­யர்­க­ளுக்­காக அல்­லது இளை­யர்­க­ளால் நடத்­தப்­பட உள்­ளன என்­றார்.

இளை­யர்­க­ளி­டம் தமிழ்­மொழிக் கூறு­களை எளி­தில் கொண்­டு­செல்ல உதவும் 'அழகு', 'அன்பு' எனும் இரண்டு புதிய உரு­வச் சின்­னங்­கள் தொடக்க நிகழ்ச்­சி­யின்போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று இயக்­கத்­தின் மற்­றோர் உறுப்­பி­னர் கார்த்­தி­கே­யன் சோம­சுந்­த­ரம் கூறி­னார்.

தமிழ்மொழி விழா­வின் அதி­கா­ர­பூர்­வத் தொடக்க நிகழ்ச்சி ஏப்­ரல் 1ஆம் தேதி இரவு 9 மணிக்கு மீடி­யா­கார்ப் அரங்­கத்­தில் இடம்­பெ­றும். வசந்­தம் ஒளி­வ­ழி­யி­லும் 'மீவாட்ச்' ஊட­கத்­த­ளத்­தி­லும் அது நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­கும். குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான நுழை­வுச்­சீட்­டு­களை இம்மாதம் 20ஆம் தேதி பிற்­ப­கல் 3 மணி முதல் 'பீடிக்ஸ்' தளத்­தில் பெற்றுக்கொள்ளலாம்.