வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் வரவேற்கிறது சீனா

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் வரவேற்கிறது சீனா

2 mins read

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிறகு பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைப் பெரிய அள­வில் தளர்த்த சீனா முடி­வெ­டுத்­துள்­ளது.

இன்று முதல் வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு மீண்­டும் விசாக்­கள் வழங்­கப்­படும் என்று அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பெய்­ஜிங் படிப்­ப­டி­யாக அதன் 'கொவிட் அறவே அற்ற' கொள்­கை­யைத் தளர்த்­தி ­வ­ரு­வ­தன் ஓர் அங்­க­மாக இந்­ந­ட­வ­டிக்கை அமைந்­துள்­ளது.

புதிய விசா விண்­ணப்­பங்­களை மறு­ஆய்வு செய்து ஒப்­பு­தல் வழங்­கும் வேளை­யில், 2020ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதிக்கு முன்­னர் வழங்­கப்­பட்ட விசாக்­கள் இன்­னும் காலா­வதி ஆகா­மல் இருந்­தால் அவற்­றைப் பயன்­படுத்தி சீனா செல்­ல­லாம் என்று கூறப்­பட்­டது.

அமெ­ரிக்கா, பிரான்ஸ் உள்­ளிட்ட நாடு­களில் அமைந்­தி­ருக்­கும் சீனத் தூத­ர­கங்­க­ளின் இணை­யத்­த­ளங்­க­ளி­லும் இது­பற்­றித் தக­வல் இடம்­பெற்­றுள்­ளது.

சொகு­சுக் கப்­பல்­கள் மூலம் ஷங்­காய் செல்­வோ­ருக்­கும் ஹாங்­காங், மக்­காவ், ஆசி­யான் நாடு­கள் சில ஆகி­ய­வற்­றில் இருந்து வரு­வோர்க்கு விசா தேவை­யில்லை என்ற நடை­மு­றை­யும் மீண்­டும் நடப்­புக்கு வரும் என அறி­விக்­கப்­பட்­டது.

கிரு­மிப் பர­வலை முன்­னிட்டு எல்­லை­களை மூடிய சீனா, இந்த ஆண்டு ஜன­வரி 8ஆம் தேதி முதல் வெளிநாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று தெரி­வித்­தது.

இருப்­பி­னும் விசா கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­தன.

இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் சீனா­வில் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­ததை முன்­னிட்டு ஜப்­பான், தென்­கொ­ரியா போன்ற நாடு­கள் சீனப் பய­ணி­க­ளுக்கு மீண்­டும் கட்­டுப்­பாடு விதிக்­கவே, பதி­ல­டி­யாக சீனா­வும் அவ்­விரு நாட்­டுப் பய­ணி­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு விதித்­தது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் நிலைமை மேம்­ப­டவே கட்­டுப்­பா­டு­கள் இரு­த­ரப்­பி­லும் தளர்த்­தப்­பட்டு இப்­போது பய­ணி­க­ளுக்கு எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ரில் அமைந்துள்ள சீனத் தூத­ர­கத்­தின் அறி­விப்­பு­கள்

இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள சீனத் தூத­ர­கம் வெளி நாட்­டி­ன­ருக்கு இன்று முதல் அனைத்துவித­மான விசாக்­க­ளை­யும் மீண்­டும் வழங்குகிறது.

சுற்­றுப்­ப­யண விசா, மருத்­துவ சிகிச்­சைக்­கான விசா போன்­ற­வை­யும் இவற்­றில் அடங்­கும்.

தூத­ர­கம் நேற்று முன்­தி­னம் பின்­னே­ரத்­தில் அதன் இணை­யத்­த­ளத்­தில் இது­கு­றித்து அறி­வித்­தது.

2020 மார்ச் மாதம் வெளி நாட்­டி­ன­ருக்கு விசா வழங்­கு­வ­தைச் சீனா நிறுத்­தி­ய­போது சிங்­கப்­பூ­ரர்­கள் விசா எடுக்­கத் தேவை­யின்றி 15 நாள் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்ற ஏற்­பா­டும் நிறுத்­தப்­பட்­டது.

அது மீண்­டும் நடப்­புக்கு வரு­கி­றதா என்று இன்­னும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

கூடு­தல் தக­வல்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் சீனத் தூத­ர­கத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்­பு­கொண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள பயண முக­வர்­கள் கூடு­தலா­னோர் சீனப் பய­ணத்­துக்­குத் திட்­ட­மி­டு­வர் என்று எதிர்­பார்க்­கின்­ற­னர்.

இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்தே சீனா­விற்கு சுற்­றுப்­ப­ய­ணம் செல்­வ­தற்­கா­கத் தொடர்­பு­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் இதன் தொடர்­பில் வெளி­யா­கும் அறி­விப்­பு­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து அதற்­கேற்ப பய­ணத் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சுற்றுப் பயண முகவர்கள் கூறினர்.