ரஷ்ய அதிபருக்குக் கைதாணை

ரஷ்ய அதிபருக்குக் கைதாணை

2 mins read
ff934ec0-ec47-4a3c-b3f8-dce9de6c7d18
-

அனைத்­து­ல­கக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றம், ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்­குக் (படம்) கைதாணை பிறப்­பித்­துள்­ளது.

அவர் போர்க்­குற்­றம் புரிந்­த­தா­கக் கூறி நேற்று முன்தினம் கைதாணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இதன்­கீழ் அனைத்­து­லக நீதி­மன்­றத்­தில் உறுப்­பி­யம் பெற்­றுள்ள உல­கின் 123 நாடு­க­ளின் எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­களில் திரு புட்­டின் எங்கு சென்­றா­லும் அவ­ரைக் கைது செய்து, விசா­ர­ணைக்­காக, 'த ஹேக்' அனைத்­து­ல­கக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு அனுப்ப இய­லும்.

உக்­ரே­னில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்­தை­களை சட்­ட­வி­ரோ­த­மாக ரஷ்­யா­விற்­குக் கொண்­டு­சென்­ற­தாகத் திரு புட்­டின்­மீது போர்க்­குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

உக்­ரேனியப் படை­யெ­டுப்­பில் ரஷ்­யப் படை­கள் கொடுஞ்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தா­கக் குறை­கூறல்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் மாஸ்கோ அத­னைத் தொடர்ந்து மறுத்­து­வ­ரு­கிறது.

அனைத்­து­ல­கக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் பிறப்­பித்­துள்ள கைதாணை செல்­லா­து என்­கிறது ரஷ்ய அதி­பர் மாளி­கை­யான கிரெம்­ளின்.

ரஷ்யா, உக்­ரேன் இரண்­டுமே அனைத்­து­ல­கக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் உறுப்­பி­யம் வகிக்­க­வில்லை. இருப்­பி­னும் தனது எல்­லைக்­குள் நடை­பெற்ற குற்­றச்­செயல்­க­ளுக்­குத் தீர்ப்பு வழங்­கும் உரி­மையை உக்­ரேன் அந்த நீதி­மன்­றத்­திற்கு வழங்கி உள்­ளது.

அனைத்­து­லக நீதி­மன்­றத்­திற்­குச் சொந்­த­மா­கக் காவல்­ப­டைப் பிரிவு ஏது­மில்லை. எனவே குற்­றம் புரிந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படு­வோ­ரைத் தடுத்து வைக்­க­வும் விசா­ர­ணைக்­குக் கொண்­டு­வ­ர­வும் உறுப்­பி­யம் வகிக்­கும் நாடு­களையே அது சார்ந்­துள்­ளது.

திரு புட்­டின் தாமாக முன்­வந்து விசா­ர­ணைக்­குச் செல்­ல­மாட்­டார் என்­ப­தால், உறுப்­பிய நாடு­க­ளுக்­குச் சென்­றால் அவ­ரைக் கைது செய்­யும் அதி­கா­ரத்தை இந்­தக் கைதாணை வழங்­கு­கிறது.

அனைத்­து­ல­கக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தின் கேள்­வி­கள் சினமூட்டுபவை என்­றும் அவை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை என்­றும் கிரெம்­ளின் பேச்­சா­ளர் டிமிட்ரி பெஸ்­கோவ் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வின் முன்­னைய அதி­பர் பராக் ஒபா­மா­வின் நிர்­வா­கத்­தில் போர்க் குற்ற விவ­கா­ரங்­க­ளுக்­கான பொதுத் தூத­ரா­கச் செயல்­பட்ட ஸ்டீ­ஃபன் ராப், "இந்­தக் கைதாணை மூலம் புட்­டின் சமூ­கத்­தி­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வ­ரா­கக் கரு­தப்­ப­டு­வார். அவர் பய­ணம் மேற்­கொண்­டால் கைது செய்­யப்­ப­டு­வார். இந்த விவ­கா­ரம் தீர்க்­கப்­ப­டா­மல் ரஷ்யா அதன்­மீது விதிக்­கப்­பட்ட பொரு­ளி­யல் தடை­களில் இருந்து நிவா­ர­ணம் பெற இய­லாது," என்று கூறி­னார்.

பத­வி­யில் இருக்­கும் அதி­பர் ஒரு­வ­ருக்கு இவ்­வாறு கைதாணை பிறப்­பிக்­கப்­ப­டு­வது இது மூன்­றா­வது முறை. இதற்கு முன்­னர் சூடா­னிய அதி­பர் ஒமார் அல்-பஷீர், லிபி­யா­வின் அதி­பர் முஅம்­மர் அல்­க­டாஃபி ஆகிய இரு­வ­ருக்­கும் இத்­த­கைய கைதாணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இவ்­வே­ளை­யில், திரு புட்­டி­னுக்­குக் கைதாணை பிறப்­பிக்­கப்­பட்­டதை உக்­ரேன், வர­வேற்­றுள்­ளது. நீதி­யின் சக்­க­ரம் செய­லற்று நின்­று­வி­ட­வில்லை; இன்­னும் சுழல்­கிறது என்­பதை இந்­தத் துணிச்­ச­லான முடிவு காட்­டு­கிறது என்று உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் கூறி­னார்.

ஏறக்­கு­றைய 16,000 குழந்­தை­களை மாஸ்கோ சட்­ட­வி­ரோ­த­மா­கக் கவர்ந்து சென்­றி­ருப்­ப­தா­கக் கூறு­கிறது கியவ்.

அனைத்­து­ல­கக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தின் வழக்­க­றி­ஞர் கரிம் கான் கடந்த ஓராண்­டாக உக்­ரே­னில் போர்க்குற்­றங்­கள், மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான குற்­றங்­கள், இனப் படு­கொலை நட­வ­டிக்­கை­கள் நடை­பெற்­ற­னவா என்­பது குறித்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளார்.

உக்­ரே­னுக்கு நான்கு முறை பய­ணம் செய்த அவர், சிறா­ருக்கு எதி­ரான குற்­றங்­கள், பொது­மக்­க­ளுக்­கான உள்­கட்­ட­மைப்­பு­க­ளைக் குறி­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­கள் போன்­ற­வற்­றில் தாம் கவ­னம் செலுத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.