பங்ளாதேஷில் 30 அடி உயரத்திலிருந்து பேருந்து விழுந்தது; 19 பேர் மரணம்

பங்ளாதேஷில் 30 அடி உயரத்திலிருந்து பேருந்து விழுந்தது; 19 பேர் மரணம்

1 mins read
2287fc26-fd79-4ec7-bce9-133d81202561
-

பங்­ளா­தே­ஷில் நேற்­றுக் காலை நிகழ்ந்த பேருந்து விபத்­தில் சிக்கி 19 பேர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் 25 பேர் காய­ம­டைந்­த­தா­க­வும் அவர்­களில் 12 பேரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

தலை­ந­கர் டாக்­கா­வின் தெற்கே உள்ள மத­ரி­பூர் மாவட்­டத்­தில் இவ்­வி­பத்து நிகழ்ந்­தது.

புதிதாகக் கட்டப்பட்ட ஆற்றுப்பால விரை­வுச்­சாலை தரை­மட்­டத்­தி­லி­ருந்து ஏறக்­

கு­றைய 30 அடி உய­ரத்­தில் உள்­ளது. உள்­ளூர் நேரம் காலை 7.30 மணி­ய­ள­வில் அந்த விரை­வுச்­சா­லை­யில் சென்­று­கொண்டு இருந்த தனி­யார் பேருந்து திடீ­ரென்று ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து சாலைத்­

த­டுப்பை உடைத்­துக்­கொண்டு 30 உய­ரத்­தி­லி­ருந்து பள்­ளத்­தில் விழுந்­தது. பயணிகளின் அல­றல் சத்­தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தி­னர் திரண்­ட­னர்.

காவல்­து­றை­யி­ன­ரும் தீய­ணைப்­புப் படை­யி­ன­ரும் விரைந்து வந்து மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­னர். முதலில் 17 பேர் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட நிலை­யில் பிற்­ப­க­லில் அந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­தது.

"மரண எண்­ணிக்கை 19க்கு அதி­க­ரித்­து­விட்­டது. இன்­னும் 12 பேர் உயி­ருக்­குப் போரா­டு­வ­தால் இந்த எண்­ணிக்கை உய­ரக்­

கூ­டும் என்று அஞ்­சு­கி­றோம்," என உள்­ளூர் காவல்­துறை தலைமை அதி­காரி மசூத் ஆலம், ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

சாலை­களும் வாக­னங்­களும் பழை­ய­ன­வா­க­வும் சரி­வ­ரப் பரா­ம­ரிக்­கப்­ப­டா­த­வை­யா­க­வும் உள்­ள­தா­லும் முறை­யான பயிற்சி பெறாத ஓட்­டு­நர்­க­ளா­லும் பங்­ளா­தே­ஷில் ஏரா­ள­மான சாலை விபத்­து­கள் நிகழ்ந்து வரு­கின்­றன.