ஜோகூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 12 சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணியளவில் வடக்கு-தெற்கு விரைவுச்
சாலையில் விபத்து நடந்ததாக மலேசிய காவல்துறை கூறியது.
சிங்கப்பூரர்கள் பயணம் செய்த சுற்றுலா வாகனம் மீது மலேசியாவின் விரைவுப் பேருந்து ஒன்று மோதியது. இந்த வாகனங் களுடன் மேலும் இரு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
மலாக்காவிலிருந்து 28 பயணிகளுடன் ஜோகூர் பாரு நோக்கி பேருந்து சென்றபோது விபத்தில் சிக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது.
"விரைவுச்சாலையின் இடது தடத்தில் பேருந்து சென்றுகொண்டு இருந்தபோது அதன் எதிரே வந்த சுற்றுலா வாகனம் மீது அது மோதியது. மோதப்பட்ட வாகனம் பின்னோக்கிச் சென்றதில், பின்னால் வந்துகொண்டு இருந்த இரு வாகனங்
களும் சேதமடைந்தன," என்று மூவார் மாவட்ட காவல்துறை தலைவர் ரெய்ஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் மலேசிய ஊடகங்களிடம் கூறினார்.
அந்த வாகனத்தில் சிக்கிக்கொண்ட நான்கு சிங்கப்பூரர்களை மீட்க தமது குழு உதவியதாகவும் அவர் மலேசிய நாளிதழான பெரித்தா ஹரியானிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டு
நருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. ஆயினும் பேருந்தில் இருந்த பயணிகள் எவரும் காயமடையவில்லை.
அதேநேரம் சிங்கப்பூரைச் சேர்ந்த 11 சுற்றுப் பயணிகளுக்கு இலேசான காயமும் ஒரு சுற்றுப்பயணிக்கு கடுமையான காயமும் ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இருப்பினும் சுற்றுலா வாகன ஓட்டுநருக்குக் காயம் இல்லை. பின்னால் வந்து மோதிய இரு வாகனங்களில் ஒன்றின் ஓட்டுநர் காயமடைந்தார்.
காயமடைந்த அனைவரும் மூவாரில் உள்ள சுல்தானா ஃபாத்திமா சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பேருந்தின் ஓட்டுநர் மதுபானம் அருந்தி உள்ளாரா என்று அறிவதற்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த விபத்து தொடர்பில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் தொடர்புகொண்டது. பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் தொடர்புகொண்டு வருவதாகவும் அவர்
களுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்துவருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
"ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, சிங்கப்பூரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ
மனைக்குச் சென்று அவர்களைச் சந்தித்து தூதரக உதவிகளைச் செய்து வருகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைவார்கள்," என்று அந்தப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

