கொவிட்-19 முன்களப் பணியாளர்களுக்கு நாடாளுமன்றம் மரியாதை

1 mins read
29e92c8d-c926-4d5c-ae91-2f5ddc26560e
-

கொவிட்-19 கொள்­ளை­நோயை எதிர்த்­துப் போராடிய முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு நேற்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எழுந்து நின்று மரி­யாதை செலுத்­தி­னர்.

நாடா­ளு­மன்­றத்­தின் பொது மாடத்­தில் 100 முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளைக் கொண்ட குழு அமர்ந்­தி­ருந்­தது.

தாதி­யர், மருத்­து­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள், சமூக சேவை நிபு­ணர்­கள், போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள், பேரங்­காடி மேலா­ளர்­கள், பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள், சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை அதி­கா­ரி­கள் மற்­றும் பின்­ன­ணி­யில் இருந்து முக்­கிய பங்­காற்­றிய அர­சாங்க, தனி­யார் துறை­க­ளைச் சேர்ந்த அலு­வ­லர்­கள் அந்­தக் குழு­வில் இடம்­பெற்று இருந்­த­னர்.

அவர்­க­ளின் அர்ப்­பணிப்பு

க­ளுக்கு அங்­கீ­கா­ரம் வழங்­கும் வகை­யில் உறுப்­பி­னர்­கள் எழுந்து நின்று, கைதட்­டிப் பாராட்­டி­னர்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளின் கடின உழைப்­புக்­கும் தியா­கங்­க­ளுக்­கும் கௌர­வம் அளிக்­கும் வகை­யில் கிட்­டத்­தட்ட அரை நிமிட நேரம் உறுப்­பி­னர்­கள் எழுந்து நின்று மரி­யாதை செலுத்­தி­னர்.

பின்­னர் உரை­யாற்­றிய துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், கொள்­ளை­நோ­யைச் சமா­ளிப்­ப­தில் சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­களும் செயல்­பா­டு­களும் மற்ற நாடு­க­ளி­லி­ருந்து முற்­றி­லும் வேறு­பட்டு இருந்­தது என்­றார். அத்­தி­யா­வ­சி­யப் பொருள் விநி­யோ­கம் தடை

­ப­டா­ம­லி­ருப்­பதை உறுதி செய்ய துறை­மு­கங்­க­ளை­யும் விமான நிலை­யங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் திறந்து வைத்­தி­ருந்­ததை அவர் நினை­வு­கூர்ந்­தார்.