இந்தியாவில் மனித உரிமை மீறல்: அமெரிக்க அறிக்கை

இந்தியாவில் மனித உரிமை மீறல்: அமெரிக்க அறிக்கை

2 mins read

சமய சிறு­பான்­மை­யி­னர், எதிர்ப்­பா­ளர்­கள், செய்­தி­யா­ளர்­கள் போன்­றோ­ரைக் குறி­வைக்­கும் வகை­யில் இந்­தி­யா­வில் மனித உரிமை மீறல் சம்­ப­வங்­கள் குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யில் நடந்­துள்­ள­தாக அமெ­ரிக்­கா­வின் வரு­டாந்­திர அறிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

மனித உரி­மை­கள் தொடர்­பான நடை­மு­றை­கள் குறித்து வெளி­யி­டப்­பட்ட அந்த அறிக்­கை­யில், இத்­த­க­வல் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தி­யா­வின் ஒரு­சில அர­சாங்­கத்­துறை, காவல்­துறை, சிறைத்­துறை அதி­கா­ரி­க­ளால் அந்­நாட்­டில் மனித உரிமை மீறல் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளதை அமெ­ரிக்கா கண்­கா­ணித்து வரு­வ­தாக அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன் கூறி­யதை அடுத்து ஓராண்டு காலத்­திற்­குப் பின் இந்­தத் தக­வல்­கள் வெளி­வந்­துள்­ளன.

இந்­திய அர­சாங்­கம் அல்­லது அந்­நாட்­டின் அதி­கா­ரி­கள் சட்­டத்­திற்­குப் புறம்­பான கொலை­கள் அல்­லது சித்­தி­ர­வதை செய்­தல், இழி­வு­ப­டுத்­தும் தண்­ட­னை­கள் தரு­தல் தொடர்­பான சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் அந்­நாட்­டில் செய்­தி­யா­ளர்­கள் நியா­ய­மற்ற முறை­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

மேலும், அர­சி­யல் தடுப்­புக்­காவல் தன்­னிச்­சை­யான கைது நட­வ­டிக்­கை­களும் ஊட­க­வி­ய­லாளர்­கள் மீதான அடக்­கு­முறை சம்­ப­வங்­களும் அடங்­கிய மனித உரிமை மீறல் சம்­ப­வங்­கள் இந்தி­யா­வில் நடந்­துள்­ள­தாக அறி­யப்­படு­கிறது.

இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­தா­லும் தான் வகுத்­துள்ள கொள்­கை­கள் அனைத்­தும் வெவ்­வேறு சமூ­கங்­க­ளின் மேம்­பாட்­டுக்கு வழி­வ­குக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தாக அர­சாங்­கம் பதி­ல­ளித்­துள்­ளது.

இந்­தி­யா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடையே நில­வி­வ­ரும் நெருக்­க­மான பொரு­ளி­யல் உறவு, வட்­டா­ரத்­தில் சீனாவை எதிர்க்க அமெ­ரிக்­கா­வுக்கு இந்­தி­யா­வின் அதி­க­ரிக்­கும் முக்­கியத்­து­வம் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் இவ்­வாறு இந்­தி­யாவை அமெ­ரிக்கா சாடி­யுள்­ளது அரி­தான ஒன்றே.

ரஷ்யா, சீனா, ஈரான், வட­கொரியா, மியன்­மார் போன்ற நாடு­களில் பெரும் மனித உரிமை மீறல்­கள் நடப்­ப­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.