தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை நெருக்கடிக்கு முடிவுகட்ட அனைத்துலகப் பண நிதியத்தின் $4 பில்லியன் கடன் உதவி

1 mins read
212be6d3-31fd-4e4e-8235-09b143f9eaca
-

இலங்கை கடந்த 70 ஆண்­டு­களில் காணாத நெருக்­கடி நிலை­யைத் தற்­போது சந்­தித்­து­வர, நாட்டை மீட்­டெ­டுக்­கும் வகை­யில் $3 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$4 பி.) அனைத்­து­ல­கப் பண நிதி­யம் (ஐஎம்­எஃப்) வழங்க அதன் நிர்­வா­கச் செயற்­குழு ஒப்பு­தல் வழங்­கி­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் ஒட்­டு­மொத்­த­மாக $7 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் வரை இலங்கை அர­சாங்­கம் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஐஎம்­எஃப் எடுத்­துள்ள இந்த முடி­வி­னால் இலங்கை உட­ன­டி­யாக கிட்­டத்­தட்ட $333 மில்­லி­ய­னைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்­றும் இதர பங்­கா­ளி­க­ளி­ட­மி­ருந்து நிதி ஆத­ரவு விரை­வில் வரத் தொடங்­கும் என்­றும் ஐஎம்­எஃப் குறிப்­பிட்­டுள்­ளது. இதற்­கி­டையே இலங்கை பல்­வேறு சீர்­தி­ருத்­தத் திட்­டங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்று ஐஎம்­எஃப் நிர்­வாக இயக்­கு­நர் கிரிஸ்­ட­லினா ஜியோர்­ஜீவா கூறி­னார்.

அனைத்­து­லக முத­லீட்­டுச் சந்­தை­களில் இலங்­கை­யின் தர­நிலையை மேம்­ப­டுத்த ஐஎம்­எஃப் திட்­டம் கைகொ­டுக்­கும் என்று இலங்கை அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதன்­வழி முத­லீட்­டா­ளர்­களை­யும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளை­யும் ஈர்க்க முடி­யும் என்று கூறப்­பட்­டது. இலங்­கை­யின் பொரு­ளி­யல் மேம்­படும் அறி­கு­றி­கள் தெரி­வ­தாக திரு விக்­ர­ம­சிங்க நாடா­ளு­மன்­றத்­தில் முன்­ன­தா­கக் கூறி­யிருந்­தார். கடன் மறு­சீ­ர­மைப்பு உத்­தி­முறை குறித்து இலங்கை அடுத்த மாதம் அறி­விக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.