பிரதமர்: பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி மிகவும் முக்கியம்

2 mins read
f31c6d4c-667d-4345-b7d0-2820f64a94d9
-

என்­றா­வது ஒரு­நாள் அதிர்ஷ்­டம் நமக்கு கைகொ­டுக்­கா­மல் போக­லாம் என்­ப­தால் பயங்­க­ர­வாத எதிர்ப்­புப் பயிற்­சியை முக்­கி­ய­மான ஒன்­றாக நாம் கரு­த­வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து உள்­ளார்.

ஜூரோங் தீவில் நேற்று நடை­பெற்ற தேசிய அள­வி­லான பயிற்சியை அவர் பார்­வை­யிட்­டார். பேரளவிலான நெருக்­க­டி­க­ளைச் சமா­ளிக்க அர­சாங்க அமைப்­பு­கள் தயார்­நி­லை­யில் இருப்­ப­தைக் காட்­டும் அந்­தப் பயிற்சி 'எக்­சர்­சைஸ் நார்த்ஸ்­டார் XI' என்­னும் பெய­ரில் நடத்­தப்­பட்­டது.

இந்­நி­கழ்­வில் பேசிய பிர­த­மர், "பயங்­க­ர­வாதக் குழுக்­கள் உல கெங்­கும் உள்­ளன. அவர்­க­ளின் கண்­கா­ணிப்­பில் சிங்­கப்­பூ­ரும் உள்­ளது. அத­னால்­தான் வெவ்வேறு விதமான பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்­க­ளைச் சமா­ளிக்­கும் திறனை சிங்­கப்­பூர் பெறு­வ­தோடு அத்­த­கைய அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குப் பதி­லடி தர­வும் தெரிந்து வைத்­தி­ருக்க வேண்­டும்.

"அச்­சு­றுத்­தல்­களை எப்­ப­டிக் கையாள்­வது என்று தெரி­யா­மல்­போ­னால் விளை­வுகள் பேர­ழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­ன­வாக இருக்­கும். மேலும், அத­னால் நமது சமூகம் உடைந்­து­போ­கும் வாய்ப்பு உள்­ளது.

"பயங்­க­ர­வா­தத்­தை­யும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்­க­ளை­யும் கடு­மை­யா­ன­வை­யாக சிங்­கப்­பூர் கரு­து­கிறது. நம்­மைச் சுற்­றி­யுள்ள வட்­டா­ரத்­தில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­கள் காணப்­ப­டு­கின்­றன.

"சில சம­யங்­களில் தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட, சுய­மாக தீவி­ர­வா­தச் சித்­தாந்­தத்­திற்கு ஆளா­னோர் இங்­கும் இருப்­பதை அறிந்­தி­ருக்­கி­றோம்.

"இருப்­பி­னும் கடி­ன­மாக முயன்று, எந்த ஒரு தீங்­கான செய­லி­லும் ஈடு­படும் முன்­னர் அவர்­களை நாம் பிடித்­து­வி­டு­கி­றோம். அந்த வகை­யில் நாம் அதிர்ஷ்­ட­சா­லி­கள். ஆனால், என்­றா­வது ஒரு­நாள் நமக்கு அதிர்ஷ்­டம் கைகொ­டுக்­கா­மல் போக­லாம். என­வே­தான் இது­போன்ற பயிற்­சி­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­து­வம் தர­வேண்­டும்," என்­றார் திரு லீ.

அர­சாங்­கத்­தின் பல்­வேறு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 300க்கும் மேற்­பட்ட வீரர்­கள் இந்­தப் பயிற்­சி­யில் பங்­கேற்­ற­னர். சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, சிங்­கப்­பூர் காவற்­படை, சிங்­கப்­பூர் ஆயு­தப் படை போன்­றவை அந்த அமைப்­பு­க­ளுள் அடங்­கும்.

1997ஆம் ஆண்டு அறி­மு­கம் கண்ட 'நார்த்ஸ்­டார்' பயிற்­சி­யின் 11வது நிகழ்வு இது.

மூன்று மணி நேரம் நடைபெற்ற பயிற்சியை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பார்வையிட்டனர்.