ராகுல் காந்தி: தொடர்ந்து போராடுவேன், மன்னிப்பு கேட்கமாட்டேன்

2 mins read
3a3b6ea9-363e-4e53-aeb6-da4144e5c0a8
-

சர்ச்­சைக்­கு­ரிய செல்­வந்­தர் கௌதம் அதா­னி­யு­டன் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு இருக்­கும் தொடர்பு குறித்து தாம் கேள்வி எழுப்­பி­ய­தால் தமது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பதவி பறிக்­கப்­பட்­ட­தாக காங்­கி­ரஸ்

கட்­சி­யின் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

2019ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது கர்­நா­டக மாநி­லத்­தில் நடந்த பொதுக்­கூட்­டத்­தில் பேசிய ராகுல் காந்தி, மோடி­யின் பெயர் குறித்து அவ­தூறு ஏற்­படும் வகை­யில் கருத்­து­ரைத்­

தி­ருந்­த­தாக குஜ­ராத் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது. அண்­மை­யில் இந்த வழக்கு தொடர்­பாக தீர்ப்­ப­ளித்த நீதி­மன்­றம், ராகுல் காந்­திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்­டனை விதித்­தது. இத­னால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை ராகுல் காந்தி இழந்­துள்­ளார். இதற்கு பாஜ­க­வின் அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சியே கார­ணம் என்று அவர் அடித்­துக்­கூ­று­

கி­றார்.

"நான் ஏன் தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளேன் என்­பதை தய­வு­செய்து புரிந்­து­கொள்­ளுங்­கள். அதானி குறித்து நான் பேசி­ய­தைக் கேட்டு பிர­த­மர் மோடி பயந்­து­விட்­டார்.

"ஆனால் நான் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை. தொடர்ந்து கேள்­வி­களை எழுப்­பு­வேன். பிர­த­மர் மோடிக்­கும் அதா­னிக்­கும் இடை­யி­லான உறவு என்ன?" என்று நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் கேள்வி எழுப்­பி­னார் ராகுல் காந்தி.

பிர­த­மர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரி­வித்த கருத்­து­

க­ளுக்கு அவர் வருத்­தம் தெரி­வித்து மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்று பாஜக தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறது.

ஆனால் தாம் மன்­னிப்பு கேட்­கப்­போ­வ­தில்லை என்று ராகுல் காந்தி நேற்று தெரி­வித்­தார்.

"நான் இந்­துத்வா சித்­தாந்­த­வாதி வி.டி. சவார்க்­கர் அல்ல. நான் காந்தி. காந்தி யாரி­ட­மும் மன்­னிப்பு கேட்­ப­தில்லை. பிரிட்­டிஷ்­கா­ரர்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது சவார்க்­கர் அவர்

களுக்கு உத­வி­னார். உயி­ருக்­குப் பயந்து தமக்­குக் கருணை காட்­டும்­படி பிரிட்­டிஷ்­கா­ரர்­க­ளுக்கு அவர் கடி­தம் எழு­தி­னார். அவர்­தான் மன்­னிப்பு கேட்க வேண்­டும்," என்­றார் ராகுல் காந்தி. பாஜ­க­வின் ஆட்­சி­யில் இந்­தி­யா­வின் ஜன­நா­ய­கம் அழிந்­து­விட்­ட­தா­க­வும் கருத்­துச் சுதந்­தி­ரம் அறவே இல்லை என்­றும் அவர் கூறி­னார். இதற்­கி­டையே, நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சவார்க்­கரை ராகுல் காந்தி கடு­மை­யாக விமர்­சித்­ததை எதிர்த்து மகாராஷ்­டிரா முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். ராகுல் காந்தி தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்­றார் அவர்.

ராகுல் காந்தி பொய் கூறும் பழக்­கம் உடை­ய­வர் என்­றும் பதவி நீக்­கத்­துக்கு எதி­ராக அவர் மேல்­மு­றை­யீடு செய்­யா­மல் எதிர்­வ­ரும் தேர்­த­லில் இதைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­

ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளார் என்றும் பாஜக குற்­றம் சாட்­டி­யுள்­ளது.