ஜோகூர் வெள்ளம்: சேதத்தைச் சரிசெய்ய 6 மாத காலமாகலாம்

ஜோகூர் வெள்ளம்: சேதத்தைச் சரிசெய்ய 6 மாத காலமாகலாம்

2 mins read
b5a68788-29f1-467b-8e06-9864e00890a0
சேதத்­தைச் சரி­செய்ய சுமார் 750,000 ரிங்­கிட் (S$225,760) செல­வா­கக்­கூ­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் வெள்­ளத்­தால் சேத­ம­டைந்த சுகா­தார வச­தி­க­ளைச் சீர­மைக்க ஏறத்­தாழ ஆறுமாத காலம் ஆகும் என்று அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஸாலிஹா முஸ்­தபா தெரி­வித்­துள்­ளார்.

குறிப்­பாக, ஜோகூ­ரில் ஆறு இடங்­கள் கடு­மை­யான பாதிப்­புக்கு உள்­ளா­கின. அதில் ஒன்று சுகா­தார மருந்­த­கம். எஞ்­சிய ஐந்­தும் கிரா­மப்­புற மருந்­த­கங்­கள் என்று அறி­யப்­ப­டு­கிறது.

சுகா­தார வச­தி­க­ளுக்­குக் கிட்­டத்­தட்ட 1.8 மில்­லி­யன் ரிங்­கிட் இழப்பு நேர்ந்­தி­ருக்­க­லாம் என மதிப்­பி­டப்­பட்டுள்ளது.

சேதத்­தைச் சரி­செய்ய சுமார் 750,000 ரிங்­கிட் (S$225,760) செல­வா­கக்­கூ­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அறைகலன்­கள், சாத­னங்­கள், மருத்­து­வ ஆவணங்கள் போன்­றவை சேத­ம­டைந்­துள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட கிரா­மப்­புற மருந்­த­கம் ஒன்றை நேற்று பார்­வை­யிட்ட அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

மற்ற மருந்­த­கங்­க­ளி­ட­மி­ருந்து இர­வல் வாங்­கிய பொருள்­க­ளைக் கொண்டு கிரா­மப்­புற மருந்­த­கங்­கள் தங்­க­ளின் செயல்­பா­டு­களை மீண்­டும் தொடங்­கி­யுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, வெள்ள நெருக்­க­டி­யின்­போது தங்­க­ளின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வர்­களில் இறுதி 141 பேர் மீண்­டும் வீடு திரும்­பி­யுள்­ள­தால் அனைத்து நிவா­ரண நிலை­யங்­களும் மூடப்­பட்­ட­தாக மாநி­லப் பேரி­டர் நிர்­வா­கக் குழு நேற்று தெரி­வித்­தது.

நிவா­ரண நிலை­யங்­களில் தஞ்­சம் புகுந்த இறுதி 37 குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அவர்­கள் என்று அறி­யப்­ப­டு­கிறது.

ஜோகூரை வெள்ள நெருக்­கடி தாக்­கி­ய­போது ஒரு கட்­டத்­தில் 50,000க்கும் மேற்­பட்­டோர் தங்­களின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு 270 நிவா­ரண நிலை­யங்­களில் தஞ்­சம் புகுந்­த­னர்.

6,000 டன் குப்­பை­கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டன.

இதற்­கி­டையே ஜோகூர் வெள்­ளத்­தால் உரு­வான சுமார் 6,000 டன் எடை­யி­லான குப்­பை­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தக் குப்­பை­கள் அனைத்­தும் நிலப்­ப­ரப்­புத் தளங்­களுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

குப்­பை­களை அனுப்­பும் பணி­கள் இம்­மா­தம் 3ஆம் தேதி தொடங்கி நேற்று முன்­தி­னத்­தோடு முடி­வ­டைந்­தது.

இதற்­கி­டையே, அனைத்து கிரா­மங்­களும் குப்­பை­கள் குவிந்­தி­ருக்­காத வண்­ணம் இருப்­பதை உறு­தி­செய்­யும் சோதனை நட­வடிக்­கை­கள் நடந்து வரு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

"வெள்­ளத்­தால் உரு­வான கழி­வுப்­பொ­ருள்­கள் அனைத்­தும் உடனே அகற்­றப்­ப­டு­வதை நாங்­கள் உறு­தி­செய்து வரு­கி­றோம். இத­னால் வெள்­ளப் பாதிப்­புக்­குள்­ளா­னோ­ரது சுகா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடி­யும்," என்­றார் ஜோகூர் பாரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அக்­மல் நஸ்­‌ருல்லா முகம்­மது நசிர்.

வெள்­ளத் தணிப்­புத் திட்­டங்­கள் தொடர்­பான பணி­கள் ஜோகூ­ரில் வரும் மாதங்­களில் தொடங்­கி­வி­டும் என்று முன்­ன­தாக மாநி­லப் பய­ணத்­துறை, சுற்­றுச்­சூ­ழல், மர­பு­டைமை, கலா­சார செயற்­கு­ழுத் தலை­வர் ரவின் குமார் கூறி­யி­ருந்­தார்.