பிரதமர் லீ சியன் லூங் நான்காண்டுகளில் முதல்முறையாக நேற்று சீனா சென்று சேர்ந்தார். குவாங்சு அனைத்துலக விமான நிலையத்தில் திரு லீக்கும் திருமதி லீக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாங்டோங் மாநில துணை ஆளுநர் ஸாங் ஸின், சீனாவுக்கான சிங்கப்பூர் தூதர் சன் ஹையான், குவாங்சு நகர துணை மேயர் டான் பிங் போன்றோர் இவ்விருவரையும் சிங்கப்பூரின் 50 அதிகாரிகளையும் வரவேற்றனர்.
பின்னர் ‘வீரைட்’ நிறுவனத் தயாரிப்பான ஓட்டுநரில்லா வாகனத்தில் திரு லீ பயணம் செய்தார். ‘வீரைட்’ அனைத்துலக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஹான் அந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
திரு லீயின் ஒருவார கால சீனப் பயணத்தின் தொடக்க இடமாக குவாங்டோங் மாநிலம் இடம்பெற்றது. மாநிலத்தின் தென்பகுதி நகரான குவாங்சு சென்று சேர்ந்த அவர், அங்குள்ள சிங்கப்பூரர்களைச் சந்திப்பார்.
பெய்ஜிங் புறப்படும் முன்னர் ஹைனானில் நடைபெறும் ஆசிய வருடாந்திர மாநாட்டுக்கான போவோ கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் லீ உரையாற்றுவார்.
பின்னர், பெய்ஜிங்கில் அதிபர் ஸி ஜின்பிங்கையும் புதிதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள பிரதமர் லி கியாங்கையும் திரு லீ சந்திப்பார்.
அங்கு சிங்கப்பூர் பேராளர்களுக்கான வரவேற்பு விழாவுக்கும் மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.