அதிமுகவின் 7வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவின் 7வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

2 mins read
df47fc52-0d5b-4798-9081-1c8ea9142b28
-

அதி­முக பொதுக்­கு­ழுத் தீர்­மா­னம், பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­தல் ஆகி­ய­வற்றை எதிர்த்து தொட­ரப்­பட்ட வழக்­கு­களில் நேற்று தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் (அதி­முக) ஏழா­வது பொதுச் செய­லா­ள­ராக திரு எடப்­பாடி பழ­னி­சாமி (படம்) அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்.

சென்­னை­யில் சென்ற ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­வி­கள் கலைக்­கப்­பட்டு தீர்­மா­னம் இயற்­றப்­பட்­டது. மேலும் அதி­மு­க­வின் இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சா­மியை (இபி­எஸ்) நிய­மித்து ஒரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அந்­தத் தீர்­மா­னங்­களை எதிர்த்து திரு ஓ. பன்­னீர்­செல்­வம் (ஓபி­எஸ்) சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தார். அதில் சாத­க­மான தீர்ப்பு கிடைக்­கா­த­தால் உச்ச நீதி­மன்­றத்­தி­லும் முறை­யீடு செய்­தார். அதி­லும் அவர் வெற்­றி­பெ­றாத நிலை­யில், இம்­மா­தம் 26ஆம் தேதி கட்­சிப் பொதுச்­செ­ய­லா­ளர் பத­விக்­குத் தேர்­தல் நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

திரு பழ­னி­சாமி ஒரு­ம­ன­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­ இ­ருந்த நிலை­யில் இந்த அறி­விப்பை எதிர்த்து ஓபி­எஸ் தரப்­பி­னர் உயர் நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­த­னர்.

இவற்றை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு நேற்று, இவ்வழக்­கு­களைத் தள்­ளு­படி செய்தார்.

பொதுக்­கு­ழுத் தீர்­மா­னங்­கள் செல்­லும் என்­றும் பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­த­லுக்­குத் தடை இல்லை என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­த­லில் திரு பழ­னி­சாமி மட்­டுமே வேட்பு மனு தாக்­கல் செய்­தி­ருந்த நிலை­யில் அவர் போட்­டி­யின்­றித் தேர்­வா­னார்.

நேற்று அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தில் மூத்த நிர்­வா­கி­கள் முன்­னி­லை­யில் பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சாமி பொறுப்­பேற்­றுக்­கொண்­டார்.

கட்­சித் தேர்­தல் ஆணை­யர்­கள் நத்­தம் விஸ்­வ­நா­தன், பொள்­ளாச்சி ஜெய­ரா­மன் ஆகி­யோர் பொதுச்­செ­ய­லா­ளர் சான்­றி­தழை எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் வழங்­கி­னர். பின்­னர் இபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் பட்­டாசு வெடித்து வெற்­றி­யைக் கொண்­டா­டா­டி­னர்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த திரு பழ­னி­சாமி, தம்மை ஒரு­ம­ன­தா­கத் தேர்­வு­செய்த அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் மன­மார்ந்த நன்றி எனக் கூறி­னார்.

பொதுச்­செ­ய­லா­ளர் பதவி அதி­மு­க­வின் அதி­கா­ர­மிக்க உயர்­பதவி­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

கட்­சி­யில் எடுக்­கப்­படும் அனைத்து முடி­வு­க­ளுக்­கும் இறு­தி­யாக பொதுச்­செ­ய­லா­ளரே கையெ­ழுத்­திட வேண்­டும்.

மறைந்த முன்­னாள் முதல்­வர் எம்­ஜி­ஆர் 1972ஆம் ஆண்டு கட்­சி­யைத் தொடங்­கி­ய­தில் இருந்து ஏறக்­கு­றைய ஆறு ஆண்­டு­கள் தாமே இப்­ப­த­வியை வகித்­தார்.

பின்­னர் நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யன், ப.உ. சண்­மு­கம், ராக­வா­னந்­தம், மீண்­டும் திரு எம்­ஜி­ஆர், அவ­ரது மறை­வுக்­குப் பிறகு ஏறக்­கு­றைய 27 ஆண்­டு­க­ளுக்­குத் திரு­வாட்டி ஜெய­ல­லிதா, அவ­ரது மறை­வுக்­குப் பிறகு 48 நாள்­கள் மட்­டும் திரு­வாட்டி சசி­கலா ஆகி­யோர் இந்­தப் பத­வியை வகித்­துள்ளனர்.

இவ்­வே­ளை­யில் நேற்­றைய தீர்ப்பை எதிர்த்து ஓபி­எஸ் தரப்பு மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது. இரண்டு நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு இவ்­வ­ழக்கை இன்று விசா­ரிக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.