அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள நேஷ்வில் நகரைச் சேர்ந்த கவனண்ட் பள்ளி எனும் தனியார் தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியான 28 வயது மாது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களுக்கும் வயது ஒன்பது எனத் தெரிவிக்கப்பட்டது.
இவர்களுடன், 60 வயதாகும் பள்ளி முதல்வர், தற்காலிக ஆசிரியர், காப்பாளர் ஆகியோரும் மாண்டனர்.
துப்பாக்கிக்காரரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி விற்பனைக்குத் தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாம் மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
அதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கார்னி ஜீன் பியர்ரி, குடியரசுக் கட்சியினர் துப்பாக்கித் தடைக்கு ஒப்புதல் அளிப்பதற்குள் மேலும் பல சிறார்கள் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்பதைச் சுட்டினார்.