பல மணிநேரம் கழித்து வழக்கநிலை திரும்பியது

பல மணிநேரம் கழித்து வழக்கநிலை திரும்பியது

3 mins read
6c4c4257-d6b8-4516-902f-3069aa27f233
செங்காங்கின் காம்பஸ் ஒன் கடைத்தொகுதியில் உள்ள பிஓஎஸ்பி கிளையில் புதன்கிழமை இரவு 7.30 மணிக்குப் பிறகு காணப்பட்ட நிலவரம். படம்: சாவ் பாவ் -

டிபி­எஸ் வங்­கி­யின் மின்­னி­லக்­கச் சேவை­கள் நேற்று பல மணி­நேர முடக்­க­நி­லைக்­குப் பிறகு வழக்க

நிலைக்­குத் திரும்­பி­ன.

சேவை முடக்­கம் 12 மணி நேரத்­துக்கு மேல் நீடித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நேற்று மாலை 5.45 மணி நில­வ­ரப்­படி தனது மின்­னி­லக்­கச் சேவை­கள் (டிபி­எஸ்/பிஓ­எஸ்பி டிஜி­பேங்க் கைப்­பேசி, இணைய வங்­கிச் சேவை, டிபி­எஸ் பேலா, டிபி­எஸ்­எம் டிரே­டிங் சேவை­கள்) வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­ய­தாக டிபி­எஸ் வங்கி தெரி­வித்­தது.

இருப்­பி­னும், நிலை­மையை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக அது கூறி­யது.

டிபி­எஸ் மின்­னி­லக்­கச் சேவை­

க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யா­மல் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் நேற்று காலை 7 மணியில்

இருந்து புகார் செய்­யத் தொடங்­கி­னர். டிபி­எஸ் டிஜி­பேங்க் சேவை, வாடிக்­கை­யா­ளர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மான 'பேலா' செயலி போன்ற மின்­னி­லக்­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டது. காலை 8.30 மணிக்­குள் கிட்­டத்­தட்ட 360 புகார்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து, தனது மின்­னி­லக்­கச் சேவை­கள் முடங்­கி­யி­ருப்­ப­தாக காலை 9.20 மணி அள­வில் டிபி­எஸ் வங்கி உறுதி செய்து அறிக்கை வெளி­யிட்­டது.

ஆனால் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் சேமிப்­பு­கள், பணம் பாது­காப்­பாக இருப்­ப­தாக அது உறுதி அளித்­தது.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் டிபி­எஸ்/பிஓ­எஸ்பி அட்­டை­க­ளைப் பயன்­ப­டுத்தி பரி­வர்த்­த­னை­கள் செய்­ய­லாம் என்று அது கூறி­யது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் டிபி­எஸ், பிஓ­எஸ்பி கிளை­கள் இயங்­கும் நேரம் நேற்று இரண்டு மணி நேரத்­துக்கு நீட்­டிக்­கப்­பட்­டது.

மின்­னி­லக்­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டால் அவற்­றைப் பயன்­ப­டுத்தி பரி­வர்த்­த­னை­கள் செய்ய முடி­யாத வாடிக்­கை­யா­ளர்­கள் வங்­கிக் கிளை­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று பரி­வர்த்­த­னை­க­ளைச் செய்ய உத­வும் வகை­யில் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இந்­நி­லை­யில், இருக்­கும் இடத்­தி­லேயே இருந்­து­கொண்டு வங்­கிப் பரி­வ­ர்த்­த­னை­க­ளைச் செய்ய உத­வும் மின்­னி­லக்­கச் சேவை­கள் முடங்­கி­யது குறித்து வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் அதி­ருப்தி தெரி­வித்­த­னர். சேவை முடக்­கம் கார­ண­மா­கத் தாங்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள், அசௌ­க­ரி­யம் குறித்து பலர் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­ட­னர். ஒரு­முறை பயன்­ப­டுத்­தும் மறைச்­சொல் கிடைக்­க­வில்லை என்­றும் தனிப்­பட்ட அடை­யாள எண்ணை மாற்றுமாறு செயலி தெரிவித்தது என்றும் அவர்­கள் குறைகூ­றி­னர். நேற்று நண்­ப­க­லில் கூட்­டம் இல்­லா­த­தால் பசார் மாலாம் உண­வுச்­சந்­தைக்­குச் சென்ற குமாரி உபா­சனா, 25, உணவை வாங்­கி­ய­ பின் தனது வங்­கிச் செயலி மூலம் பணம் செலுத்த முயன்­ற­போ­து­தான் அது வேலை செய்­யா­ததை அறிந்­தார்.

"வேறு வழி­யின்றி பக்­கத்­தில் இருந்த கடைத்தொகு­திக்­குச் சென்று, அங்­குள்ள தானி­யக்க வங்கி இயந்­தி­ரத்­தி­லி­ருந்து பணம் எடுத்து வந்­தேன். இத­னால் கடைக்­கா­ர­ரும் மற்ற வாடிக்­கை­யா­ளர்­களும் நீண்­ட­நே­ரம் காத்­தி­ருக்க வேண்­டி­ய­தா­யிற்று," என்று குமாரி உபா­சனா ஆதங்­கப்­பட்­டார்.

பல் மருத்­து­வ­ரைப் பார்க்­கச் சென்­ற­போது பணம் கட்ட முடி­யா­மல் தவித்­த­தா­கக் கூறி­னார் குமாரி திவ்­யா­தாக்­‌ஷா­யினி, 26.

"பிறகு என் தாயா­ருக்­குக் கட­னட்டை பதி­வு­செய்ய வங்கி இணை­யத்­த­ளத்­திற்­குச் சென்­ற­போ­தும் எது­வும் வேலை செய்­ய­வில்லை. வங்­கிக் கணக்­கில் எவ்­வ­ளவு பணம் இருக்­கிறது என்­ப­தைக்­கூட என்­னால் பார்க்க முடி­யா­மல் போனது," என்­றார் குமாரி திவ்யா.

டிபி­எஸ் வங்­கி­யின் மின்­னி­லக்­கச் சேவை­கள் முடங்­கி­ய­தால் மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணத்­தைச் செலுத்த முடி­யா­மல் தாம் தவித்­த­தாக மாவார் மமாட் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

டிபி­எஸ் வங்­கி­யின் மின்­னி­லக்­கச் சேவை­யைப் பயன்­ப­டுத்தி கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த காலை 8 மணி­யி­லி­ருந்து கிட்­டத்­தட்ட ஏழு முறை முயன்­ற­தா­க­வும் ஆனால் அனைத்து முயற்­சி­களும் தோல்­வி­யில் முடிந்­த­தா­க­வும் பொறி­யா­ள­ரான சு யுவான்­சாங் பகிர்ந்­து­கொண்­டார். "தனிப்­பட்ட அடை­யாள எண்ணை மாற்­று­மாறு வங்­கி­யின் செயலி அடிக்­கடி தெரி­வித்­தது. எனது பரி­வர்த்­த­னைத் தொகை வரம்பை உயர்த்த விரும்­பி­னேன். ஆனால் சேவை­யைப் பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை," என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் செய்தி:

அனுஷா செல்வமணி