சிங்கப்பூர்-ஹாங்காங் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவு கிறது என்று கூறுவது செய்தித் தலைப்புகளுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும் என்றும் உண்மையில் அத்தகைய கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் தனித் தனி பலங்கள் இருப்பதாக அவர் கூறினார்.
உலக நாடுகளின் பொருளியல்கள் ஒன்றுக்கொன்று சார்ந்தவையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், சிங்கப்பூர் வளர்ச்சி அடைந்தால் ஹாங்காங் பலனடையும் என்றும் ஹாங்காங் வளர்ச்சி அடைந்தால் சிங்கப்பூர் பலனடையும் என்றும் கூறினார்.
இதன்மூலம் இந்த வட்டாரம் துடிப்புடன் இருக்கும் என்றார் அவர்.
"புவியியல் ரீதியாக இவ்விரு நாடுகளின் அமைப்பு, அவற்றின் செயல்பாடு, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளும்போது இரு நாடுகளும் சிறப்பான நிலையை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
"ஒருவரின் தோல்வி இன்னொருவரின் வெற்றி என்ற அணுகுமுறை இங்கு இல்லை," என்று ஐந்தாவது முறையாக நடத்தப்பட்ட 'சீனா மாநாடு: தென்கிழக்காசியா' நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திரு சண்முகம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் அரசாங்கப் பிரதிநிதிகளும் வர்த்தகத் தலைவர்களும் கலந்துகொண்டு உலகளாவியப் போக்கை சீனாவும் தென்கிழக்காசியாவும் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது குறித்து கலந்துரையாடினர்.
இவ்வாண்டின் மாநாடு சிங்கப்பூரில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
சிங்கப்பூரும் ஹாங்காங்கும் உச்சம் எட்டியிருப்பது அனை
வரும் அறிந்த ஒன்று என்றும் அதில் ரகசியம் ஏதுமில்லை என்றும் திரு சண்முகம் கூறினார்.
இதற்கு அந்த நாடுகளின் ஆட்சிமுறையும் நிலைத்தன்மையும் காரணம் என்றார் அவர்.
சிங்கப்பூர் மூலம் அனைத்
துலக முதலீடு, ஆசிய நாடு
களைச் சென்றடைவதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
வலுவான சட்டக் கட்டமைப்புகள், 27 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தகம், நிதி, விமானப் போக்குவரத்து, நிபுணத்
துவச் சேவைகள், கப்பல் துறை முதலியவற்றுக்கான முக்கிய மையமாக திகழ்வது ஆகியவை சிங்கப்பூரை வலுவான நிலையில் வைத்திருப்பதாக திரு சண்முகம் தெரிவித்தார்.
"கொவிட்-19 நெருக்கடி
நிலைக்குப் பிறகு சிங்கப்பூர் மேலும் வலுவடைந்திருக்கிறது என்பதே உலக நாடுகளின் ஒருமித்த கருத்தாகும்.
"சிங்கப்பூரில் முதலீடு செய்யப்பட்ட பணம் பாதுகாப்பாக இருப்பதை உலக நாடுகள் உணர்கின்றன. சிங்கப்பூரில் உள்ள உலகத் தரம்வாய்ந்த சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு, பகுத்தறிவு வாய்ந்த கொள்கைகள் ஆகியவற்றால் இந்நிலை ஏற்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் சண்முகம்.
தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் சிங்கப்பூருக்கு இருப்பதாக அவர் கூறினார்.

