சிக்கலான உலகச் சூழலில் ஆசிய ஒற்றுமை அவசியம்

சிக்கலான உலகச் சூழலில் ஆசிய ஒற்றுமை அவசியம்

3 mins read
5c18de78-4409-443a-ac0c-c42d5ebffca0
-

தீர்க்­க­மு­டி­யாத பிரச்­சி­னை­கள் பல­வற்­றின் தொடர்­பில் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் வெவ்­வேறு கருத்­து­க­ளைக் கொண்­டி­ருப்­பது உள்­ளிட்ட சிக்­கல் நிறைந்த உல­கச் சூழ­லில் ஆசிய நாடு­கள் ஒன்­றா­க­வும் வெளிப்­பு­றப் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்­தும் செயல்­பட வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆசிய நாடு­கள் ஒன்­றை­யொன்று சார்ந்­தி­ருக்­கும் போக்­கை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் வலு­வாக்க வேண்­டும். அவ்­வாறு செய்­வது வட்­டா­ரத்தை மேலும் வலு­வா­க­வும் மீள்­தி­றன்­மிக்­க­தா­க­வும் உரு­வாக்­கும். ஒன்­று­டன் ஒன்று இணைந்து செயல்­படும் வட்­டார ஒன்­று­கூ­டல்­கள் உள்­ளிட்ட இணைப்­பு­க­ளை­யும் அது உரு­வாக்­கும். சீனா­வில் நேற்­றுக் காலை உரை­யாற்­றிய சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் இவற்­றைத் தெரி­வித்­தார்.

சீனா­வின் தெற்­குத் தீவான ஹைனா­னில் நடை­பெற்ற 'ஆசி­யா­வுக்­கான போவோ கருத்­த­ரங்கு' என்­னும் வரு­டாந்­திர நிகழ்­வில் பங்­கேற்று திரு லீ பேசி­னார்.

"ஒன்­று­டன் ஒன்று சார்ந்­தி­ருக்­கும் பட்­சத்­தில் ஒவ்­வொரு ஒன்­று­கூ­ட­லி­லும் ஒவ்­வொரு நாடும் இருக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டாது.

"இருப்­பி­னும் ஒட்­டு­மொத்­த­மாக, வெவ்­வேறு ஒன்­று­கூ­டல்­கள் மீள்­தி­ற­னை­யும் ஆசிய நாடு­க­ளி­டை­யே­யான ஒத்­து­ழைப்­புக்­கு­ரிய கூட்­டி­ணைவுக் கட்­ட­மைப்­பை­யும் ஏற்­ப­டுத்­தும்.

"அதே­வேளை, இந்த வட்­டார ஒன்­று­கூ­டல்­கள் ஆசிய நாடு­க­ளி­டை­யே­யும் உல­கின் இதர பகு­தி­க­ளு­ட­னும் உற­வு­களை வலுப்படு­த்தும். இதன்­மூ­லம் நமது வெளி­வட்­டா­ரப் பங்­கா­ளி­கள் ஆசி­யா­வின் அமை­தி­யி­லும் வளப்­பத்­தி­லும் பங்­கெ­டுப்­பார்­கள்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

மேலும் அவர் கூறு­கை­யில், நாடு­க­ளு­ட­னான தொடர்­புத் திற­னுக்கு உதா­ர­ண­மாக ஆசி­யா­னைச் சுட்­டி­னார். வட்­டார விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம் என்­னும் தாராள வர்த்­தக உடன்­பாடு உல­கி­லேயே ஆகப் பெரி­ய­தொரு உடன்­பாடு. இது உரு­வாக ஆசி­யான் உத­வி­ய­தாக திரு லீ கூறி­னார். இந்த பங்­கா­ளித்துவ உடன்­பாட்­டில் இடம்­பெற்­றுள்ள 15 உறுப்பு நாடு­களில் சீனா­வும் உள்­ளது.

கிழக்கு ஆசிய உச்­ச­நி­லைக் கூட்­டம், ஆசி­யான் பிளஸ் திரீ மற்­றும் ஆசி­யான் வட்­டா­ரக் கருத்­த­ரங்கு போன்ற நிகழ்­வு­கள் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நாடு­களை ஒன்­றி­ணைத்­துள்­ள­து­டன் உற்­பத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லுக்­கும் ஈடு­பாட்­டுக்­கும் சரி­சம வாய்ப்­பு­க­ளை­யும் வழங்கி உள்­ள­தாக பிர­த­மர் லீ தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

இவை தவிர, எல்­லை­தாண்­டிய பசி­பிக் பங்­கா­ளித்­து­வத்­துக்­கான விரி­வான, முற்­போக்­கான உடன்­பாடு (சிபி­டி­பிபி), அமெ­ரிக்கா தொடங்­கி வைத்த இந்தோ-பசி­பிக் பொரு­ளி­யல் கட்­ட­மைப்பு மற்­றும் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு (டெபா) ஆகிய வட்­டார ஒன்­று­கூ­டல்­களும் உள்­ள­தாக அவர் சொன்­னார்.

இவற்­றில் சிபி­டி­பி­பி­யி­லும் டெபா­வி­லும் உறுப்­பி­னர் ஆக சீனா விண்­ணப்­பித்­தி­ருந்­தா­லும் இப்­போது வரை அது உறுப்­பி­னர் ஆக­வில்லை.

சீனா­வு­ட­னான தனது உற­வு­களை வலுப்­ப­டுத்­து­மாறு வட்­டார நாடு­க­ளுக்கு அழைப்பு விடுத்த திரு லீ, இரு­த­ரப்பு நம்­பிக்­கையை வளர்க்­கக்­கூ­டிய நிலைத்­தன்மை, விரி­வான உறவு போன்­றவை அடிப்­ப­டை­யாக இருப்­பின் சீனா­வுக்­கும் அண்­டைய ஆசிய நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு இன்­னும் வலு­வாக இருக்­கும் என்­றார்.

வட்­டார அள­வி­லும் இரு­த­ரப்­பி­லும் தீர்க்­கப்­பட வேண்­டிய பல பிரச்­சி­னை­கள் இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் மற்­றும் பாது­காப்பு உள்­ளிட்ட பல அம்­சங்­கள் குறித்து விவா­திக்க உல­க­ள­வி­லான அர­சாங்க, நிறு­வ­னத் தலை­வர்­கள் இக்­க­ருத்­த­ரங்­கில் ஒன்­று­கூ­டி­னர்.

சீனப் பிர­த­மர் லீ சியாங்­கின் அழைப்­பின்­பே­ரில் இக்­க­ருத்­த­ரங்­கில் திரு லீ கலந்­து­கொண்­டார். சீனா­வுக்கு ஒரு­வார கால சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டி­ருக்­கும் அவ­ரது பய­ணப் பட்­டி­ய­லில் இந்­நி­கழ்­வும் அடங்­கும். இதற்கு முன்­னர் 2018ஆம் ஆண்டு இதே போவோ கருத்­த­ரங்­கில் திரு லீ பங்­கேற்­றுப் பேசி­னார். அப்­போது சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் அதில் கலந்­து­கொண்­டி­ருந்­தார்.

மலேசியப் பிரதமருடன் சந்திப்பு

நேற்­றைய கருத்­த­ரங்­கில் மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மும் கலந்­து­கொண்­டார். திரு லீயும் திரு அன்­வா­ரும் நேற்று இரு­த­ரப்பு சந்­திப்பை நிகழ்த்­தி­னர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு அணுக்க உற­வு­க­ளின் தனித்­து­வத்தை இரு தலை­வர்­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர். அத்­து­டன், திரு அன்­வார் ஜன­வரியில் மேற்­கொண்ட அதி­கா­ரத்­துவ சிங்­கப்­பூர் வரு­கைக்­குப் பின்­னர் ஏற்­பட்­டி­ருக்­கும் இரு­த­ரப்பு முன்­னேற்­றம் குறித்­தும் இரு­வ­ரும் கலந்து ஆலோசித்தனர்.