தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடா-அமெரிக்கா எல்லையில் இந்தியர்கள் உட்பட எட்டுப் பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

1 mins read

கனடா வழி­யா­க அமெ­ரிக்­கா­விற்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைய முயன்ற எட்­டுப் பேர் மாண்­டு­போயி­னர். அவர்­களில் இரு­வர் குழந்­தை­கள் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அவர்­கள் ருமே­னியா மற்­றும் இந்­தி­யா­வைச் சேர்ந்த இரு குடும்­பத்­தி­னர் என்று கூறப்­பட்­டது.

காணா­மல் போன கேஸி ஓக்ஸ், 30, என்ற பட­கோட்­டி­யைத் தேடும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அவர்­க­ளின் உடல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அப்­ப­ட­கோட்டி இன்­னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று பிபிசி செய்தி தெரி­வித்­தது.

இச்­சம்­ப­வம் நெஞ்­சைப் பிளப்­ப­தாக உள்­ளது என்று கன­டிய பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ தெரி­வித்­துள்­ளார். என்ன நடந்­தது, எப்­படி நடந்­தது என்­ப­தைத் தெரிந்­து­கொண்டு, இனி­மேல் இவ்­வாறு நடப்­ப­தைத் தடுக்க ஆன அனைத்­தை­யும் செய்ய வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் அவர் சொன்­னார்.