தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் அதிவேக இணையச்சேவை; S$16 மி. திட்டம்

2 mins read

தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்­து குடும்­பங்­க­ளுக்­கும் அதி­வேக இணை­யச் சேவையை வழங்க மாநில அரசு திட்­ட­மிட்டு இருப்­ப­தாக தக­வல்­துறை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் அறி­வித்­தார்.

இப்­போது சேவை வழங்­கும் வட்­டார இணை­யச் சேவை கட்­ட­மைப்பில் இடம்­பெற்­றுள்ள நிறு­வ­னங்­க­ளைப் பய­ன்­ப­டுத்தி கம்­பி­வடம் வழி­யாக அந்­தச் சேவையை வழங்­கு­வது நோக்­கம். இதற்­காக ரூ.100 கோடி (சுமார் $16 மில்­லி­யன்) ஒதுக்­கப்­படும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சட்­ட­மன்­றத்­தில் தக­வல்­துறை அமைச்­சின் தக­வல் தொழில்­நுட்­பம், மின்­னி­லக்கத் துறை மானி­யக் கோரிக்­கை­கள் தொடர்­பில் இடம்­பெற்ற விவா­திப்­பில் பேசிய அமைச்­சர், மொத்­தம் 13 அறி­விப்பு­களை விடுத்­தார்.

அந்­தத் திட்­டங்­களில் ஒன்றாக, மாநி­லத்­தில் உள்ள குடும்­பங்­களுக்குக் குறைந்த கட்­ட­ணத்­தில், நம்­ப­க­மாக அதிவேக இணைய சேவை­கள் வழங்­கப்­படும் என்று கூறி­னார்.

இது ஒரு­பு­றம் இருக்க, மாநிலம் முழு­வ­தும் உள்ள சுமார் 20,000 அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு அதி­வேக இணைய இணைப்பு ரூ.184 கோடி செல­வில் வழங்­கப்­படும் என்­றும் அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் தெரி­வித்­தார்.

தமிழ்­நாடு செயற்கை நுண்ண­றிவு அமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வது; கணினி உயி­ரோ­வி­யம், கணினிக் காட்சி வியூ­கம், கணினி விளை­யாட்டுக் கொள்கையை வெளி­யி­டு­வது;

சோழிங்­க­நல்­லூ­ரில் உல­கத்­தரம் வாய்ந்த பசு­மைப் பூங்­காவை ரூ.20 கோடி செல­வில் அமைக்­கப்­பது உள்ளிட்ட பல­வும் அமைச்­சர் அறி­வித்தவற்­றில் உள்­ள­டங்­கும்.

சென்னை, ஓசூர், கோவை யில் உல­கத் தரத்­தில் எல்லா வசதி­க­ளு­டன் கூடிய உயர்­தொ­ழில்­நுட்ப நகர்­கள் அமைய உள்­ளன. இணை­யச்­சேவை, மக்­கள் சேவை மையங்­களில் ரூ.1.20 கோடி­யில் கூடு­த­லாக 100 புதிய சேவை­கள் வழங்­கப்­படும்.

தக­வல் தொழில்­நுட்பத் துறை­க­ளுக்­கான சீர்­மிகு மையம் 10 கோடி ரூபா­யில் நிறு­வப்­படும் எனவும் அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் சட்­டப்­பே­ர­வை­யில் தெரி­வித்­துள்­ளார்.

"தமி­ழக அரசு அம­லாக்க விரும்­பும் தக­வல்­தொ­ழில்­நுட்ப, மின்­னி­லக்­கத் திட்­டங்­கள் மாநிலத்­தில் மக்­க­ளி­டையே மின்­னி­லக்­கச் சேவை­க­ளைப் பெறக்­கூ­டி­ய­வர்­களின் எண்­ணிக்­கையைக் கணிசமான அளவுக்கு அதி­க­மாக்­கும்.

"மின்­னி­லக்கப் புரட்­சியை ஏற்­ப­டுத்­தும். அர­சாங்­கச் சேவை களை மக்­க­ளின் வீடு­க­ளுக்­குக் கொண்டு செல்­வ­தற்­கான கிரியா­ஊக்­கி­யாக புதிய திட்­டங்­கள் செயல்­படும்," என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

தமிழ் நாட்­டில் செயல்­படும் 37,656 அரசு பள்­ளிக்­கூ­டங்­களில் 9,292 பள்­ளி­களில் மட்­டும் அதா­வது 25% பள்­ளிக்­கூ­டங்­களில் மட்டுமே இணைய வசதி இப்­போது இருக்­கிறது.

இது இந்­திய அள­வில் மற்ற மாநி­லங்­க­ளு­டன் ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் மிக­வும் குறைவு. ஆகை­யால் பள்­ளிக்கூடங்­களில் இணை­யக் கட்­ட­மைப்பு வச­தியைக் கணி­ச­மான அளவுக்கு மேம்­படுத்­த­வும் திட்­டங்­கள் இருப்­ப­தாக மாநில தக­வல்­துறை அமைச்­சர் அமைச்­சர் தெரி­வித்­தார்.