மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு

மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு

2 mins read
b85e0f8f-a237-43cf-9402-062b0742dcf3
-

முன்­னாள் காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி தமக்கு விதிக்­கப்­பட்ட ஈராண்டு சிறைத்­தண்­ட­னைக்கு எதி­ராக நேற்று குஜ­ராத்­தின் சூரத் மாவட்ட அமர்வு நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­தார். அதற்­காக அவர் தாக்­கல் செய்த மனுவை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்­றம், ராகுல் காந்­திக்கு இம்­மா­தம் 13ஆம் தேதி­வரை பிணை வழங்­கி­யது.

மனு மீதான விசா­ர­ணை­யும் இம்­மா­தம் 13ஆம் தேதி நடை­பெ­றும் என்று கூறிய சூரத் நீதி­மன்­றம், பிர­தி­வா­தி­யான புர்­னேஷ் மோடி வரும் 10ஆம் தேதிக்­குள் இது­தொ­ட­ர­பான தமது பதிலை அளிக்க உத்­த­ர­விட்­டது.

மேலும், 13ஆம் தேதி நடை­பெ­றும் விசா­ர­ணைக்கு ராகுல் காந்தி நேரில் வர­வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் கூடு­தல் அமர்வு நீதி­பதி ஆர்பி மெகேரா தெரி­வித்­தார்.

மேல்­மு­றை­யீட்டு மனு மீதான விசா­ரண நடை­பெற்று முடி­யும் வரை ராகுல் காந்­திக்கு விதிக்­கப்­பட்ட ஈராண்டு சிறைத் தண்­ட­னையை நிறுத்தி வைக்­க­வும் அது உத்­த­ர­விட்­டது.

மேல்­மு­றை­யீட்டு மனுவை தாக்­கல் செய்ய புது­டெல்­லி­யில்­இருந்து புறப்­படும் முன்­னர் ராகுல் காந்­தியை அவ­ரது தாயார் சோனியா காந்தி சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னார்.

பின்­னர் காங்­கி­ரஸ் கட்சி பொதுச்­செ­ய­லா­ள­ரும் தமது சகோ­த­ரி­யு­மான பிரி­யங்கா காந்தி, காங்­கி­ரஸ் ஆளும் மாநி­லங்­க­ளின் முத­ல­மைச்­சர்­கள் மற்­றும் மூத்த காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளு­டன் இண்­டிகோ விமா­னம் மூலம் சூரத் நகர் சென்­றார் ராகுல் காந்தி.

மேல்­மு­றை­யீட்டு மனு­வைத் தாக்­கல் செய்த பின்­னர் நீதி­மன்ற வளா­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ராகுல் காந்தி, "உண்­மையே எனது ஆயு­தம். அதுவே ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்­று­வ­தற்­கான ஆத­ர­வும் ஆகும்," என்­றார்.