பங்ளாதேஷில் பயங்கர தீச்சம்பவம்: உருத்தெரியாமல் அழிந்த சந்தைகள்

பங்ளாதேஷில் பயங்கர தீச்சம்பவம்: உருத்தெரியாமல் அழிந்த சந்தைகள்

1 mins read
292f3c6b-5aee-4058-b372-d5e8c17d90f2
-

பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வில் உள்ள பிர­சித்­தி­பெற்ற துணிச் சந்­தை­க­ளைக் கொண்ட பங்­கா­ப­சார் வணிக வளா­கத்­தில் அந்­நாட்­டின் நேரப்­படி நேற்று அதி­காலை தீ மூண்­டது.

கண் சிமிட்­டும் நேரத்­தில் வளா­கம் எங்­கும் தீ பர­வி­ய­தில் நோன்­புப் பெரு­நாள் விற்­ப­னைக்­காக அங்குள்ள கிட்டத்தட்ட 3,000 கடைகளில் அடுக்கி வைக்­கப்­பட்டி­ருந்து துணி­கள் சாம்­ப­லா­யின.

இத­னால் அங்­குள்ள கடைக்­கா­ரர்­களுக்­குப் பெருத்த நட்­டம் ஏற்­பட்­டுள்­ளது. ஒன்­றும் செய்ய முடி­யா­மல் பலர் கதறி அழு­த­னர்.

கொழுந்­து­விட்டு எரிந்த தீயை அணைக்க தீய­ணைப்­புப் படை­யி­னர் மிகக் கடு­மை­யா­கப் போரா­டி­னர்.

கிட்­டத்­தட்ட ஆறு மணி நேரம் கழித்து தீ கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று இரவு 10 மணி நில­வ­ரப்­படி மர­ண­ம­டைந்­தோர், காய­ம­டைந்­தோர் குறித்து தக­வல்­கள் கிடைக்­க­வில்லை.

அதி­காலை நேரத்­தில் தீ மூண்­ட­தால் அப்­போது அங்கு யாரும் இருந்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, தீய­ணைப்­புப் பணி­கள் உட­ன­டி­யாக நடத்­தப்­ப­ட­வில்லை என்று கடைக்­கா­ரர்­கள், பொது­மக்­க­ளி­டையே கொந்­த­ளிப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் தீய­ணைப்­புப் படை­யின் தலை­மை­ய­கத்­தைக் கும்­பல் ஒன்று தாக்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதில் குறைந்­தது நான்கு தீய­ணைப்­புப் படை அதி­கா­ரி­கள் காய­ம­டைந்­த­னர்.

அவர்­களில் இரு­வர் மருத்துவ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.