தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிர்ச்சி, மீளாத் துயரம்: உள்ளூர் காற்பந்து வீரர் கார்த்திக் ராஜ் காலமானார்

2 mins read
17f9eade-a9f6-4bbe-8650-a56e5431bdb7
-

ரச்­சனா வேலா­யு­தம்

கடந்த ஆண்டு சிங்­கப்­பூர் காற்­பந்து லீக் 'ஒன்' போட்­டியை வென்ற சிங்­கப்­பூர் கல்சா சங்க குழு­வைச் சேர்ந்த 25 வய­தான கார்த்­திக் ராஜ் மணி­மா­றன் நேற்று முன்­தி­னம் கால­மா­னார்.

நட்­பு­முறை ஆட்­டத்­திற்­காக தனது காற்­பந்­துக் குழு­வு­டன் மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ருக்­குச் சென்ற கார்த்­திக் ராஜுக்கு, இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று வலிப்பு நோய் ஏற்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து அவர் கோலா­லம்­பூர் பொது மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

மறு­நாள் மருத்­துவ விமா­னம் மூலம் கார்த்­திக் ராஜ் சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வரப்­பட்­டார்.

சிங்­கப்­பூர் பொது மருத்­துவ

மனை­யில் அவர் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­தார்.

இந்­நி­லை­யில், சிகிச்சை பல­னின்றி அவர் நேற்று முன்­தி­னம் இரவு கால­மா­னார்.

இந்­தத் தக­வலை சிங்­கப்­பூர் கல்சா சங்­கம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தது.

கார்த்­திக் ராஜின் திடீர் மர­ணம் அவ­ரது குழுவை மீளாத் துய­ரில், அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ள­தாக சிங்­கப்­பூர் கல்சா சங்­கம் தனது பதி­வில் தெரி­வித்­தது.

கார்த்­திக் ராஜ் சென்ற ஆண்­டின் கல்சா அணி­யின் சிறந்த இளம் வீர­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார் என்­ப­தை­யும் சங்­கம் மிகுந்த சோகத்­து­டன் நினை­வு­கூர்ந்­தது.

2015ஆம் ஆண்­டில் கார்த்­திக் ராஜ் 17 வய­துக்கு உட்­பட்டோருக்­கான தேசிய காற்பந்துக் குழு­வுக்­கா­க­வும் 2016ஆம் ஆண்­டில் 18 வய­துக்­கு உட்­பட்­டோ­ருக்­கான தேசிய காற்பந்துக் குழு­வுக்­கா­க­வும் விளை­யா­டி­னார்.

கார்த்­திக் ராஜ் சென்ற ஆண்டு கல்சா அணி­யில் சேர்ந்­தார். இந்த அணி­யில் சிங்­கப்­பூர் காற்­பந்து லீக் 'ஒன்' போட்­டி­யில் ஐந்து கோல்­க­ளைப் போட்­டார். 2020ல் பாலஸ்­டி­யர் கல்­சா­வில் இருந்­த­போது சிங்­கப்­பூர் பிரிமி­யர் லீக் ஆட்­டங்­களில் எட்டு முறை கள­மி­றங்­கி­னார்.

சகோ­த­ரரை இழந்து ஆழ்ந்த சோகத்­தில் இருக்­கும் கார்த்­திக் ராஜின் சகோ­த­ரி­கள் அவ­ரு­டன் தங்­க­ளுக்கு இடையிலான நெருங்­கிய உறவைத் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"அதி­கா­லை­யில் மருத்­துவ விமா­னத்­தில் கார்த்­திக் சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­போது அவ­ரின் நண்­பர்­கள் பலர் திரண்­ட­னர். அவர் பல­ரா­லும் நேசிக்­கப்­பட்­ட­வர். இரண்­டா­வது பிள்­ளை­யான கார்த்­திக் குடும்­பத்தை தமது உயி­ருக்கு நிக­ராக கரு­தி­னார்," என்று சகோ­த­ரி­கள் இரு­வ­ரும் கண்­ணீர் மல்கக் கூறி­னர்.

இன்று இரவு 7 மணிக்கு புளாக் 130, மார்­சி­லிங் ரைஸ், #05-344 எனும் முக­வ­ரி­யில் கார்த்­திக்­ ராஜின் இறு­திச் சடங்கு நடை­பெ­றும். இரவு 8 மணிக்கு மண்­டாய் தக­னச் சாலைக்கு அவ­ரது நல்­லு­டல் எடுத்­துச்­செல்­லப்­பட்டு ஹால் நான்­கில் எரி­யூட்­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.