அடுத்த ஆண்டு இறுதி முதல் மேலும் 400 மின்சாரப் பேருந்துகள்

அடுத்த ஆண்டு இறுதி முதல் மேலும் 400 மின்சாரப் பேருந்துகள்

2 mins read

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் கொள்­முதல் ஒப்­பந்­தத்­தின்­படி வரும் 2024 டிசம்­பர் முதல் 400 புதிய மின்­சா­ரப் பேருந்­து­கள் சிங்­கப்­பூர் சாலை­களில் ஓடும்.

மின்சாரத்தில் இயங்­கும் பேருந்­து­க­ளுக்­கான ஒப்­பந்­தப்­புள்ளி மார்ச் 27 அன்று கோரப்­பட்­டது. அத­னு­டன் நான்கு எதிர்­கால பேருந்து நிலை­யங்­கள், கட்­டப்­ப­ட­வுள்ள இரு ஒருங்­கிணைந்த போக்­கு­வ­ரத்து மையங்­களில் மின்­னூட்ட நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான தனி ஒப்­பந்­தப் புள்­ளி­யும் கோரப்­பட்­டது.

செங்­காங் வெஸ்ட், காலி பாத்து, ஈஸ்ட் கோஸ்ட், கிம் சுவான் ஆகிய இடங்­களில் அமை­ய­வுள்­ள பேருந்து நிலை­யங்­களில் முதல் இரண்டின் கட்டு­மா­னப் பணி­கள் 2024ல் நிறை­வ­டையும் என்றும் மின்­சா­ரப் பேருந்­து­களின் முதல் தொகுதி பேருந்­து­க­ளைப் பெறும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மற்ற இரு நிலை­யங்­கள் முறையே 2025, 2026ஆம் ­ஆண்­டு­களில் நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மின்­சாரப் பேருந்­து­க­ளுக்­கான மின்­னூட்ட நிலை­யங்­க­ளைப் பெறும் ஒருங்­கி­ணைந்த போக்­கு­வ­ரத்து மையங்­கள் ஒன்று பொங்­கோல் கோஸ்ட் பகு­தி­யில் அமைகிறது. 2024ல் இங்கு புதிய எம்­ஆர்டி நிலை­யம் செயல்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பாசிர் ரிஸ் ஒருங்­கி­ணைந்த போக்­கு­வ­ரத்து மையம் 2028ல் தயா­ரா­க­வி­டும் என்று கருதப்படுகிறது.

பூலிம், சிலேத்­தார், லோயாங் ஆகிய பேருந்து நிலை­யங்­களில் தற்­போது 32 செரு­கும் மின்னூட்ட நிலை­யங்­களும், புக்­கிட் பாஞ்­சாங், பிடோக்­கில் உள்ள ஒருங்­கி­ணைந்த போக்­கு­வ­ரத்து மையங்­களில் மேலிருந்து பேருந்து களுக்கு மின்னூட்டம் செய்யும் நான்கு வச­தி­களும் உள்­ளன.

2018ல் வாங்­கப்­பட்ட 60 மின்­சா­ரப் பேருந்­து­க­ளுக்­காக அமைக்­கப்­பட்ட இவை, முன்­னோ­டித் திட்­டத்­தின்கீழ் 2020 முதல் சேவை­யாற்றி வருகின்றன.

17 ஆண்­டு­கால சட்­ட­பூர்வ செயல்­பாட்­டுக் காலம் முடி­வ­டைய உள்ள டீச­லில் இயங்­கும் பேருந்­து­க­ளுக்கு மாற்­றாக வாங்­கப்­பட உள்ள 400 புதிய மின்­சார வாக­னங்­கள் அமை­யும்.

ஒப்­பந்­தப்­பள்ளி ஆவ­ணங்­களின்­படி, புதிய மின்­சா­ரப் பேருந்­து­கள் ஓர­டுக்குடன்­, மூன்று கதவு­கள், இரு சக்­கர நாற்­காலி நிறுத்­து­மி­டங்­க­ளுடன் தாழ்­தள உட்­புற வடி­வ­மைப்பு கொண்­ட­தாக இருக்க வேண்­டும். பேருந்­து­க­ளின் இயக்க வரம்பு குறைந்­தது 280 கி.மீ. இருக்க வேண்­டும். ஆவ­ணங்­களின்­படி, முதல் தொகுதி புதிய பேருந்­து­கள் 2024 அக்­டோ­ப­ரிலும் கடைசித் தொகுதி 2025 அக்­டோ­ப­ரிலும் வழங்­கப்­படும்.