இந்திய ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர்கள் நால்வர் மரணம்

இந்திய ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர்கள் நால்வர் மரணம்

1 mins read
140b5469-ee3b-44b5-af34-0868d5e5d0cb
-

இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் உள்ள பதிண்டா நக­ரில், ராணுவ முகா­மில் நேற்று துப்­பாக்­கிச்சூடு நிகழ்ந்­தது.

இந்­திய நேரப்­படி நேற்று அதி­காலை 4.30 மணி அள­வில் முகா­மில் உள்ள பீரங்­கிப் படைப் பிரி­வில் நிகழ்ந்த இந்­தத் தாக்­கு­த­லில் நான்கு ராணுவ அதி­கா­ரி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

இத்­த­க­வலை இந்­திய ராணு­வத்­தின் தென்­மேற்கு தள­பத்­தி­யம் உறுதி செய்­தது.

சம்­பவ இடத்­துக்கு இந்­திய ராணு­வத்­தின் சிறப்பு நட­வ­டிக்­கைப் பிரிவு அதி­கா­ரி­கள் விரைந்தனர்.

தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட இடத்­தைச் சுற்றி தடுப்பு போட்­ட­னர். முகா­மின் நுழை­வா­யில்­கள் அனைத்­தும் மூடப்­பட்டுள்­ளன.

இத்­தாக்­கு­தல் பயங்­க­ர­வா­தச் செயல் அல்ல என்று விசா­ரணை அதி­கா­ரி­கள் தெரி­வித்துள்ளனர். நேற்­றி­ரவு நில­வ­ரப்­படி மாண்­ட­வர்­க­ளின் அடை­யா­ளத்தை அவர்­கள் இன்­னும் வெளி­யி­ட­வில்லை. ராணுவ அதி­காரி ஒரு­வர் சக வீரர்­களை நோக்­கித் துப்­பாக்­கி­யால் சர­மாரி­யா­கச் சுட்­ட­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

தாக்­கு­தல் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் கூடு­தல் தக­வல்­கள் சேக­ரிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதி­காரி­கள் கூறி­னர்.

கிட்­டத்­தட்ட மூன்று நாள்­க­ளுக்கு முன்பு முகா­மில் இருந்த ஒரு துப்­பாக்­கி­யும் 28 தோட்­டாக்­களும் மாய­மா­யின என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

காணா­மல்­போன அந்­தத் துப்­பாக்­கி­யைத் தேடும் பணி­கள் நடந்­து­கொண்­டி­ருந்­தபோது ராணுவச் சீரு­டை­யில் இல்­லாது, சாதா­ரண உடை­யை அணிந்து முகா­முக்கு வந்த ஒரு­வர் துப்­பாக்­கிச்சூட்டை நடத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் பயன்­ப­டுத்­திய துப்­பாக்­கிக்­கும் முகா­மி­லி­ருந்து மாய­மான துப்­பாக்­கிக்­கும் தொடர்பு உள்­ள­தா என்­பதை கண்­ட­றிய விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, தாக்­கு­தல் நடத்­திய ஆட­வ­ரைத் தேடும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.