பாலியல் புகார்களுக்கு காவல் நிலையங்களில் முன்னுரிமை: சண்முகம்

பாலியல் புகார்களுக்கு காவல் நிலையங்களில் முன்னுரிமை: சண்முகம்

2 mins read
ac7da868-8e18-4b7d-86ae-1a0bfcb1f727
-

பாலி­யல் குற்­றங்­க­ளால் பாதிக்­கப்­ப­ட்டு புகார் அளிக்க வரு­வோ­ருக்கு இந்த மாதத்­தி­லிருந்து சிங்­கப்­பூ­ரில் உள்ள 34 அக்கம்பக்கக் காவல்­ நிலை­யங்­க­ளி­லும் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றும் அவர்­க­ளின் அந்­த­ரங்­கத்­தைப் பாது­காக்க முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், பாலி­யல் குற்­றம் தொடர்­பா­கப் புகா­ர­ளிக்க வந்­தி­ருப்­ப­தாக காவல் நிலைய வரிசை எண் வழங்­கும் இயந்­தி­ரங்­களில் குறிப்­பி­டும் வசதி செய்து தரப்­படும்.

நடந்­தது என்ன என்று விசா­ரித்து அறிய தனிமை நிறைந்த இடங்­கள் அவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­படும்.

பாலி­யல் குற்ற விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­கில் பங்­கேற்­றுப் பேசிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

இக்­க­ருத்­த­ரங்கு, அனைத்­துலகப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் விழிப்­பு­ணர்வு மாதத்­தை­யொட்டி கேன்டோன்மண்ட் காவல்­துறை வளா­கத்­தில் நேற்று நடத்­தப்­பட்­டது.

வரிசை எண் வழங்­கும் இயந்­தி­ரங்­களில் 'பாலி­யல் குற்­றப் புகார்' என்­னும் தெரிவை காவல்­துறை படிப்­ப­டி­யாக ஏற்­படுத்­தும் என்று அப்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"அந்­தத் தெரி­வில் புகார் பதி­வாகி இருப்­பதை காவல் நிலையத்­தில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கு அந்த இயந்­தி­ரம் உட­ன­டி­யா­கத் தெரி­விக்­கும். அதன் பிறகு, புகார் அளிக்க வந்­தி­ருப்­ப­வ­ருக்கு வரிசை எண்ணில் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு, ரக­சிய இடம் ஒதுக்­கப்­படும்.

"பாலி­யல் குற்­றங்­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வோரை ஆத­ரிப்­ப­தற்­கான முயற்­சி­கள் இந்த ஆண்­டில் அதி­க­மாக மேற்­கொள்­ளப்­படும். பாலி­யல் குற்­றம் தொடர்­பா­கப் புகார் அளிப்­ப­தில் உள்ள சிர­மங்­க­ளைக் குறைக்க ஏற்­பாடு செய்­யப்­படும்," என்­றார் திரு சண்­மு­கம்.

காவல்­துறை நேற்று அறி­வித்த பல்­வேறு புதிய நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகுதி இது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு பாலி­யல் குற்­றங்­களின் எண்ணிக்கை ஐந்து ஆண்டு காணாத உச்­சத்­தைத் தொட்­டது.

பாலி­யல் வன்கொடுமை, பாலி­யல் துன்­பு­றுத்­தல், மான­பங்­கம், எளி­தில் பாதிப்­புக்கு ஆளா­வோ­ரை­யும் குழந்­தை­க­ளை­யும் ஈடு­படுத்தி பாலி­யல் குற்­றம் புரி­தல் போன்­றவை உள்­ளிட்ட 2,549 பாலி­யல் குற்­றங்­கள் தொடர்­பான புகார்­கள் அந்த ஆண்­டில் பதி­வா­ன­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

இதற்கு முன்­னர், அத்­த­கைய புகார்­களின் எண்­ணிக்கை 2020ஆம் ஆண்டு 2,459ஆக­வும் 2021ஆம் ஆண்டு 2,212 ஆக­வும் இருந்­தது. கடந்த ஆண்­டின் எண்­ணிக்கை இவற்றை எல்­லாம் தாண்­டி­விட்­டது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு முன்­னர் பதி­வான எண்­ணிக்­கை­யை­யும்­கூட அது கடந்­து­விட்­டது. 2018ஆம் ஆண்டு 2,414 பாலி­யல் குற்­றப் புகார்­கள் பதி­வான நிலை­யில் அதற்­க­டுத்த 2019ஆம் ஆண்டு 2,409 என அந்­தப் புகார்­க­ளின் எண்­ணிக்கை சற்று குறைந்­திருந்­தது.

சிங்­கப்­பூர் காவல்­துறை இம்­மா­தம் 3ஆம் தேதி பாலி­யல் குற்­றம் மற்­றும் குடும்ப வன்­முறை­யைக் கையா­ளும் தனிப்­பிரிவை அமைத்­தது. குற்­றப் புல­னாய்­வுத் துறை­யின்­கீழ் அமைக்­கப்­பட்ட அந்­தப் பிரி­வில் பாலி­யல் குற்­றங்­க­ளைக் கையாள பயிற்­சி­பெற்ற அதி­கா­ரி­கள் இடம்­பெற்­ற­னர்.