ஜப்பான் பிரதமரை நோக்கி புகைக்குண்டு வீச்சு

ஜப்பான் பிரதமரை நோக்கி புகைக்குண்டு வீச்சு

1 mins read
2363bae0-a299-4335-a35b-36ea36c4cc08
-

ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா உரை­யாற்ற இருந்த இடத்­தில் நேற்று புகைக்குண்டு வீசப்­பட்­ட­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அச்­சம்­ப­வத்­தின் தொடர்­பில் ஆட­வர் ஒரு­வர் தடுத்து வைக்­கப்­பட்டு உள்­ளார்.

தென்­மேற்கு ஒசாகா நக­ரி­ல்­இருந்து சுமார் 65 கிலோ­மீட்­டர் தூர­முள்ள வக்­கா­யாமா என்­னும் பகு­தி­யில் உள்ள மீன்­பி­டித் துறை­மு­கத்­திற்கு திரு கிஷிடா நேற்று வரு­கை­ பு­ரிந்­தார். அப்­போது இளை­யர் ஒரு­வர் 'பைப்' போன்ற ஒரு பொருளை வீசி­விட்டு தப்ப முயன்­றார். ஆனால், துறை­முக ஊழி­யர் ஒரு­வர் அவ­ரைப் பிடிக்க முயன்­ற­தா­க­வும் கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் செயல்­பட்ட காவல்­து­றை­யி­னர் அந்த இளை­யரை மடக்­கிப் பிடித்­த­தா­க­வும் அசாஹி என்­னும் உள்­ளூர் நாளி­தழ் தெரி­வித்­தது.

அவர் பிடி­பட்ட சற்று நேரத்­தில், திரு கிஷிடா நின்­றி­ருந்த இடத்­தின் அருகே குண்டு வெடிப்­ப­தைப் போன்ற சத்­த­மும் அத­னைத் தொடர்ந்து புகை­யும் எழுந்­தது. காவ­லர்­கள் விரைந்து சென்று அவ­ரைப் பத்­தி­ர­மாக அழைத்­துச் சென்­றனர். இச்­சம்­பவத்­தில் யாருக்­கும் காய­மில்லை என்று காவல்­து­றையை மேற்­கோள் காட்டி என்­எச்கே அர­சாங்க ஊட­கம் கூறி­யது.

இளை­ய­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவ­ரின் செய­லுக்கு என்ன கார­ணம் என்று அதன் பின்­னரே தெரிய வரும் என்­றும் அமைச்­ச­ர­வைத் தலை­மைச் செய­லா­ளர் ஹிரோ­கசு மட்­சுனோ தெரி­வித்­தார். ஜப்­பா­னியப் பிர­த­ம­ராக நீண்­ட­காலம் இருந்து ஓய்­வு­பெற்ற திரு ஷின்ஸோ அபே, கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சுட்­டுக்­கொல்­லப்­பட்டு ஓராண்டு நிறை­வடை­வ­தற்­குள் இந்த அசம்­பா­விதம் அரங்­கேறி உள்­ளது.