எல்லை தாண்டிய வடகொரியப் படகுக்கு எச்சரிக்கை விடுத்த தென்கொரிய ராணுவம்

2 mins read

வட­கொ­ரிய சுற்­றுக்­கா­வல் படகு ஒன்று கடல் எல்­லை­யத் தாண்டி தங்­கள் பக்­கம் வந்­த­தால் அதை எச்­ச­ரிக்­கும் விதத்­தில் துப்­பாக்கி முழக்­கம் செய்­யப்­பட்­ட­தா­கத் தென்­கொ­ரிய ராணு­வம் தெரி­வித்­துள்­ளது.

உட­ன­டி­யாக வெளி­யே­றும்­படி எச்­ச­ரிக்­கைக் குறிப்­பு­கள் ஒலி­ப­ரப்­பப்­பட்­ட­தா­க­வும் அது கூறி­யது.

நேற்று முன்­தி­னம் உள்­ளூர் நேரப்­படி முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் வட­கொ­ரிய சுற்­றுக்­கா­வல் படகு எல்லை தாண்டி நுழைந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

வட­கொ­ரிய சுற்­றுக்­கா­வல் பட­கு­கள் இத்­த­கைய சின­மூட்­டும் செயல்­களில் ஈடு­பட்­டால் உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்­கா­கத் தனது ராணு­வம் தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­க­வும் தொடர்ந்து கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் தென்­கொ­ரியா கூறி­யது.

இந்த நட­வ­டிக்­கை­யின்­போது தெளி­வா­கப் பார்க்க முடி­யா­த­தால் அரு­கில் இருந்த சீன மீன்­பி­டிப் பட­கு­டன் லேசாக மோத நேரிட்­ட­து.

அதனால் தென்­கொரி­யப் பட­கில் இருந்த சில­ருக்­குக் காயங்­கள் ஏற்­பட்­ட­தா­க­த் தெரிவிக்கப்பட்டது.

அண்­மைய வாரங்­களில் வட­கொ­ரியா அதன் ராணுவ நட­வடிக்­கை­களை அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை கண்­டம் விட்­டுக் கண்­டம் பாயக்­கூ­டிய புதிய ஏவு­க­ணை­களை அது சோதித்­தது.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளால் பதற்­றம் நில­வும் வேளை­யில் வட­கொ­ரிய சுற்­றுக்­கா­வல் படகு ஊடு­ரு­விய சம்­ப­வம் பதற்­றத்தை அதி­க­ரித்­துள்­ளது.

1950 முதல் 1953 வரை நடந்த கொரி­யப் போருக்­குப் பிறகு வரை­யப்­பட்ட கடல் எல்லை தவறு என்­றும் அது மேலும் தெற்­கில் அமை­ய­வேண்­டும் என்­றும் 1990ஆம் ஆண்­டி­லி­ருந்தே பியோங்­யாங் ­கூறி வரு­கிறது.

சென்ற ஆண்­டும் கடல் எல்­லையை மீறி நுழைந்த விவ­கா­ரம் தொடர்­பில் இரு கொரி­யாக்­களும் எச்­ச­ரிக்கை குண்டு முழக்­கம் செய்­தன.

அமெ­ரிக்­கப் படை­க­ளு­டன் தென்­கொ­ரியா கூட்­டுப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டால் ராணுவ நட­வடிக்கை மேற்­கொள்­ளப் போவ­தாக வட­கொ­ரியா மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்காவிற்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி அணு­வா­யு­தப் போருக்­கான ஒத்­திகை என்று பியோங்­யாங் கரு­து­கிறது.

இருப்­பி­னும் அமெ­ரிக்க ஆகா­யப் படை, கப்­பற்படை­க­ளு­டன் இம்­மா­தம் 28ஆம் தேதி வரை கூட்­டுப் பயிற்சி நடத்­தப்­படும் என்று சோல் கூறி­யுள்­ளது.

அதில் இரு நாடு­க­ளின் 110 போர் விமா­னங்­க­ளோடு 1,400 துருப்­பி­ன­ரும் பயிற்­சி­யில் ஈடு­படு­வர் என்று கூறப்­பட்­டது.

வாஷிங்­ட­னும் சோலும் வலுச் சண்­டைக்கு வரு­வ­தால் போர்த் தடுப்பு ஆற்­றலை வலுப்­படுத்­தும்­ப­டி­ வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன் அந்­நாட்டு ராணு­வத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

ஆனால் வட­கொ­ரி­யா­வின் போர் நட­வ­டிக்­கை­க­ளைத் தடுத்து நிறுத்தி அந்த வட்டாரத்தில் தற்­காப்பை வலுப்­ப­டுத்­தும் நோக்­கி­லேயே கூட்­டுப் பயிற்­சி­யில் ஈடு­படு­வ­தாக அமெ­ரிக்­கா­வும் தென்­கொ­ரி­யா­வும் கூறு­கின்­றன.