தமிழாசிரியர்கள் பற்றாக்குறையால் பொதுக் கற்றலில் சிரமம்: விக்ரம் நாயர்

தமிழாசிரியர்கள் பற்றாக்குறையால் பொதுக் கற்றலில் சிரமம்: விக்ரம் நாயர்

2 mins read
d32d100f-2959-458e-ba2c-4b59c5fa02a7
-

சிங்­கப்­பூர் பள்­ளி­களில் தமிழ்­மொழி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தட்­டுப்­பாடு சவா­லான சூழலை ஏற்­படுத்­தி­யுள்­ள­தாக செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாயர் கூறி­இருக்கிறார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரையாற்றியபோது அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

"தமிழ் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ள­தால் மற்ற தாய்­மொழி ஆசி­ரி­யர்­க­ளை­விட குறை­வான எண்­ணிக்­கை­யி­லேயே தமிழ்­மொழி ஆசி­ரி­யர்­கள் உள்­ள­னர்.

"தமிழ் மாண­வர்­கள் குறை­வா­கவே உள்ளபோதி­லும் பள்­ளி­களில் வெவ்­வேறு வய­து­களில் வெவ்­வேறு பாடத் தொகுப்­பு­க­ளைக் கற்­கும் தமிழ் மாண­வர்­களுக்­கான கற்­றல் தேவை­கள் பல­த­ரப்­பட்­ட­வை­யா­கவே உள்­ளன," என்று திரு விக்­ரம் குறிப்­பிட்­டார்.

"தமி­ழா­சி­ரி­யர்­கள் பற்­றாக்­குறை­யால் சில பள்­ளி­களில் வெவ்­வேறு பாடத் தொகுப்­பு­களைத் தேர்ந்­தெ­டுக்­கும் மாண­வர்­கள் தமிழ்­மொழி வகுப்­பு­களுக்கு ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­கின்­ற­னர். இது பொதுக் கற்­றலைச் சிர­ம­மாக்­கு­கிறது," என்று திரு விக்­ரம் கூறி­னார்.

"கல்வி அமைச்சு இந்­தப் பிரச்­சி­னை­யைக் கையாள ஏதே­னும் திட்­டங்­கள் வைத்­தி­ருக்­கி­றதா என்­பதை அறி­வது பயன்­மிக்­க­தாக இருக்­கும்.

"அர­சாங்­கப் பள்­ளி­க­ளி­லும் பாலர் பள்­ளி­க­ளி­லும் தமிழ்­மொழி ஆசி­ரி­யர்­க­ளின் எண்­ணிக்கையை அதி­க­ரிப்­ப­தும் முக்­கி­ய­மா­னது," என்­றார் திரு விக்­ரம்.

1950களில் தமது தந்தை தொடக்­கப்­பள்ளி பயின்ற காலம், 1980களில் தாம் பாலர் பள்­ளி­யில் பயின்ற கால­கட்­டம் போன்­ற­வற்­று­டன் ஒப்­பி­டு­கை­யில் தற்­போது சிங்­கப்­பூ­ரின் பாலர் பள்­ளி­க­ளி­லும் அர­சாங்­கப் பள்­ளி­க­ளி­லும் தமிழ்­மொழி கற்­பிக்­கப்­ப­டு­வதை அவர் சுட்­டி­னார். இருப்­பி­னும், தமி­ழா­சி­ரி­யர் பற்­றாக்­குறை சவா­லாக விளங்­கு­வ­தாக திரு விக்­ரம் குறிப்­பிட்­டார்.

தமிழ்­மொழி வளர்ச்­சிக்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தொடர்ந்து ஆத­ர­வும் உத­வி­யும் செய்து வரு­வ­தற்­குத் தாம் நன்­றிக்­க­டன்பட்­டு உள்­ள­தா­க அவர் கூறி­னார்.

வளர்­த­மிழ் இயக்­கம் தமிழ்­மொழி விழா­வுக்கு வழங்­கி­வ­ரும் ஆத­ரவை அவர் குறிப்­பிட்­டார்.

தாம் தலை­மைப் பொறுப்­பேற்­று ­உள்ள தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு, வகுப்­ப­றைக்கு அப்­பால் மாண­வர்­க­ளுக்­குத் தமிழ்­மொழி மீதான ஆர்­வத்­தைத் தூண்­டும் வகை­யில் செயல்­பட்டு வரு­வ­தை­யும் திரு விக்­ரம் சுட்­டி­னார்.

தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் அதன் பொதுச்­சேவை ஒளி­ப­ரப்­புத் திட்­டத்­தின்­மூலம் தர­மான நிகழ்ச்­சி­க­ளைப் படைப்­ப­தற்கு மானி­யங்­கள் வழங்­கு­வதை அவர் எடுத்­து­ரைத்­தார்.

இத்­த­கைய ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள், சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி துடிப்­பு­மிக்க மொழி­யாக விளங்­கு­வ­தற்கு உத­வு­கின்­றன என்று கூறிய திரு விக்­ரம், அர­சாங்­கத்­தின் ஆர­வா­ர­மில்­லாத இத்­த­கைய ஆத­ர­வுக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.