இளையரின் போதைப் பழக்கம் நமது பெருங்கவலை: டியோ

இளையரின் போதைப் பழக்கம் நமது பெருங்கவலை: டியோ

2 mins read
c62880bc-bb31-4e0c-bf3a-ed8dd4da4fd9
-

சிங்­கப்­பூ­ரில் இளை­யர்­கள் போதைப் புழக்­கத்­துக்கு அடி­மை­யா­வது வருத்­த­ம­ளிக்­கும் போக்கு என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் தெரி­வித்து உள்­ளார்.

"இளைய வய­தி­லும் பெற்­றோர் கண்­கா­ணிப்­பில் பாது­காப்­பான இட­மாக விளங்­கக்­கூ­டிய வீட்­டி­லும் போதைப் புழக்­கம் தொடங்­கு­கிறது என்­பதை அறி­யும்­போது மிக­வும் கவ­லை­யாக உள்­ளது," என்­றார் அவர்.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) நேற்று நடத்­திய செயல்­திட்ட கருத்­த­ரங்­கின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட திரு டியோ, "நீண்­ட­கா­லத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய போதைப் பழக்­கத்­தைத் துடைத்­தொ­ழிக்க இன்­னும் அதி­கம் செய்ய வேண்டி உள்­ளது," என்­றார்.

இந்­தக் கருத்­த­ரங்­கில், போதைப் பழக்­கம் தொடர்­பாக முதல்­முறை நடத்­தப்­பட்ட ஆய்­வின் முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன. மன­ந­லக் கழ­கம் 2021 ஏப்­ரல் முதல் 2022 ஜூலை வரை கிட்­டத்­தட்ட 15 மாதங்­கள் மேற்­கொண்ட ஆய்­வில் 6,509 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் கலந்­து­கொண்­ட­னர். அவர்­கள் 15 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­கள் போதைப்­பொ­ருள் உட்­கொள்­ளக்­கூ­டிய இடை­நிலை வயது 15.9 என ஆய்வு கண்­ட­றிந்­தது. மேலும், 41.8 விழுக்­காட்­டி­னர் போதை உட்­கொள்­ளும் பழக்­கத்தை 18 வய­தி­லேயே தொடங்­கு­வ­தா­க­வும் ஆய்வு தெரி­வித்­தது.

ஆய்­வின் முடி­வு­களை மேற்­கோள் காட்டி பேசிய திரு டியோ, "கடந்த ஆண்டு சிங்­கப்­பூர்­வா­சி­களில் 0.7 விழுக்­காட்­டி­னர் போதைப் புழங்­கி­க­ளாக இருந்­த­தாக ஆய்வு குறிப்­பி­டு­கிறது. விகி­தாசா­ரத்­தில் இது சிறி­ய­தா­கத் தோன்­றி­னா­லும் மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில் பார்த்­தால் 18,000 பேர் என்­பது பெரிய எண்ணிக்கை. இந்த முடி­வு­கள் நமக்கு கவலை அளிக்­கின்­றன," என்­றார் அவர்.

ஆய்­வில் கலந்­து­கொண்­டோர் போதைப்­பொ­ருள் பழக்­கத்தை ஒழிப்­பது தொடர்­பான ஆலோ­சனை­க­ளை­யும் வழங்­கி­னர். சட்ட நட­வ­டிக்கை கைமேல் பல­ன­ளிக்­கும் என்று 74.4 விழுக்­காட்­டி­னர் கூறி­னர். கைது செய்­யப்­ப­ட­லாம் என்ற பயத்தை ஏற்­ப­டுத்­து­வ­தோடு போதைப்­பொ­ருள்­க­ளால் உடல்­ந­லம் எந்த அள­வுக்­குப் பாதிக்­கும் என்ற விழிப்­பு­ணர்­வுத் தக­வல்­க­ளை­யும் பரப்ப வேண்­டும் என்று அவர்­கள் கூறி­னர்.

கஞ்சா, எக்ஸ்­டஸி மற்­றும் மெத்­தம்­ஃபெட்­டா­மைன் ஆகிய போதைப்­பொ­ருள்­களே பெரும்­பா­லும் உட்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் இவற்­றில் கஞ்­சா­வையே முதன்­மு­த­லில் அவர்­கள் முயன்று பார்ப்­ப­தா­க­வும் ஆய்வு குறிப்­பிட்­டது. உட்­கொண்­டால் எப்­படி இருக்­கும் என்ற ஆர்­வ­மும் கவலை, மன அழுத்­தத்­தைப் போக்­கும் என்ற தவ­றான நினைப்­பும் அவர்­கள் போதைப்­பொ­ருளை நாடு­வ­தற்­கான முதல் இரு கார­ணங்­கள் என்­றும் ஆய்வு கண்­ட­றிந்­தது.

கஞ்சா கடத்­து­வோ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும் என 1990ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்ட நான்­காண்­டு­களில், அந்­தத் தண்­ட­னைக்­கா­கக் குறிப்­பி­டப்­பட்ட அள­வுக்கு மேல் கஞ்சா கடத்­து­வது 15 விழுக்­காடு முதல் 19 விழுக்­காடு வரை குறைந்­த­தாக திரு டியோ விளக்­கி­னார்.

"போதைப்­பொ­ரு­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நமது கடு­மை­யான சட்­டத்­துக்கு, குறிப்­பாக மரண தண்­ட­னைக்கு எதி­ராக பிர­சா­ரம் செய்­வோ­ரும் உள்­ளார்­கள். அவர்­கள் ஒரு எளிய தக­வ­லைப் பரப்ப தங்­க­ளது நேரத்­தை­யும் உழைப்­பை­யும் செல­வி­டு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்.

"போதைப்­பொ­ருள்­கள் ஆபத்­தா­னவை. அதி­லி­ருந்து விலகி இருப்­ப­தன் மூலம் உங்­க­ளை­யும் மற்­ற­வர்­க­ளை­யும் ஆபத்­தி­லி­ருந்து காப்­பாற்­றுங்­கள் - என்ற தக­வல்­தான் அது," என்­றார் மூத்த அமைச்­சர்.