தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடப்பிதழ் துணையின்றி வெளியேற தானியக்க முறை

2 mins read
64932984-4fd5-4539-aa9e-6250c2fbff87
-

சிங்­கப்­பூர்­வா­சி­களும் வரு­கை­யா­ளர்­களும் அடுத்த ஆண்டு முதல் கடப்­பி­த­ழைப் பயன்­ப­டுத்­தா­ம­லேயே சிங்­கப்­பூரை விட்டு வெளி­யே­ற­லாம். புதிய தானி­யக்க முறை அதற்­குக் கைகொ­டுக்­கும். கார் மூலம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யே­று­வோர் தரை வழி சோத­னைச் சாவ­டி­களில் கியூ­ஆர் குறி­யீட்­டைப் பயன்­ப­டுத்­த­லாம். அல்­லது பய­ணி­கள் கூடங்­களில் அமைக்­கப்­படும் புதிய தானி­யக்க எல்­லைக் கட்­டுப்­பாட்டு முறையை (ஏபி­சி­எஸ்) பயன்­ப­டுத்­த­லாம்.

தானி­யக்க முறை விரி­வு­படுத்­தப்­ப­டு­வ­தால் எல்லா குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­களி­லும் அதி­கா­ரி­கள் மூலம் நேர­டி­யாக வெளி­யே­றும் அனு­மதி பெறும் முறை படிப்­ப­டி­யாகக் கைவி­டப்­படும். அதற்­குப் பதி­லாக, 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்­டில் தானி­யக்க எல்­லைக் கட்­டுப்­பாட்டு முறை­யைப் பயன்­ப­டுத்­தும் 800 தானி­யக்க வரி­சை­கள் இடம்­பெறும். சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நேற்று நடை­பெற்ற தனது செயல்­திட்ட கருத்­த­ரங்­கில் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் இந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தது.

பய­ணி­க­ளின் உட­லங்க அடை­யா­ளத்­தைப் பயன்­ப­டுத்தி வெளி­யேற்ற அனு­மதி பெறும் முறை கடந்த 2019ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்ட புதிய அனு­மதி அணு­கு­மு­றை­யின் ஒரு பகுதி.

விரை­வா­க­வும் அதிக பாது­காப்­பா­க­வும் பய­ணி­க­ளின் குடி­யேற்ற, சுங்க அனு­ம­தி­யைப் பெறும் வகை­யில் இந்த புதிய உரு­மாற்­றத் திட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. அது முதல்­முறை­யாக 2019ஆம் ஆண்டு சாங்கி விமான நிலை­யத்­தின் நான்­கா­வது முனை­யத்­தி­லும் துவாஸ் சோத­னைச் சாவ­டி­யி­லும் சோதித்­துப் பார்க்­கப்­பட்­டது.

அதே­போல, காரில் செல்­வோ­ருக்­கான தானி­யக்க அனு­மதி முறை 2022ஆம் ஆண்டு சோதனை ஓட்­டத்­திற்கு விடப்­பட்­டது. அப்­போது கிட்­டத்­தட்ட 94 விழுக்­காட்­டுப் பய­ணி­கள் அதி­கா­ரி­க­ளின் உதவி இன்றி அனு­மதி பெற்று வெளி­யே­றி­னர். தரைவழி சோத­னைச் சாவ­டி­களில் கட்­டம் கட்­ட­மாக அறி­மு­கம் செய்­வ­தற்கு முன்­னர் உள்­துறைக் குழு­வின் அறி­வி­யல் தொழில்­நுட்ப முக­வை­யு­டன் இணைந்து தானி­யக்க முறையை மேம்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் செயல்­படும்.

இதன் முதற்­கட்ட அறி­மு­கம் 2024ன் தொடக்­கப் பகு­தி­யில் இடம்­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்­போது, கடப்­பி­த­ழின் துணை­யின்றி கியூ­ஆர் குறி­யீட்டை மட்­டும் பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யேற முடி­யும். காரில் செல்­வோர் MyICA கைப்­பே­சிச் செயலி வாயி­லாக தங்­க­ளுக்­கான கியூ­ஆர் குறி­யீட்டை உரு­வாக்கி, குடி­நு­ழை­வுக் கூடங்­களில் அக்­கு­றி­யீட்டை ஒளி­வ­ரு­ட­வேண்­டும். அப்­போது குடி­நு­ழைவு அதி ­கா­ரி­கள் அந்­தக் குறி­யீட்­டைப் பயன்­ப­டுத்தி பய­ணி­க­ளின் முக அடை­யா­ளத்­தைச் சோதிப்­பர். சொந்த விவ­ரங்­கள் அடங்­கிய இதே குறி­யீட்டை அந்­தப் பய­ணி­கள் தங்­க­ளின் அடுத்­த­டுத்த பய­ணத்­திற்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும். கடப்­பி­த­ழில் விவ­ரங்­கள் மாற்­றம் செய்­யப்­படாத வரை இந்­தக் குறி­யீட்டை அவர்­கள் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்த தானி­யக்க முறை துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் 2026லும் உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டி­யில் 2028லும் அறி­மு­கம் காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டு முதல் எல்லா சோதனைச் சாவடிகளிலும் கட்டம் கட்டமாக அறிமுகம்