'புதிய சட்டம் பராமரிப்புத் தொகை ஏய்ப்பைத் தடுக்க உதவும்'

'புதிய சட்டம் பராமரிப்புத் தொகை ஏய்ப்பைத் தடுக்க உதவும்'

3 mins read

குடும்ப நீதி சீர்­தி­ருத்த மசோ­தா­வில் பரிந்­து­ரைக்­கப்­படும் திருத்­தம் பரா­ம­ரிப்­புத் தொகையைத் தராமல் முன்­னாள் வாழ்க்­கைத்­துணையால் ஏமாற்­றப்­ப­டு­வோ­ருக்கு நீதி கிடைக்க உத­வும் என்று உள்­துறை, சட்ட அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­யுள்­ளார்.

மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இரண்­டாம் வாசிப்­புக்­காகத் தாக்­கல் செய்­யப்­பட்­டபோது ஆற்­றிய உரை­யில் அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

முன்­னாள் வாழ்க்­கைத்­துணைக்­குப் பரா­ம­ரிப்­புத் தொகை வழங்­கு­வது தொடர்­பான அம­லாக்க நட­வ­டிக்­கை­யில் பரிந்­து­ரைக்­கப்­படும் திருத்­தம் மூன்று அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தும் என்­றார் அமைச்­சர்.

உத்­த­ரவை மீறு­வ­தைத் தடுக்­கும் நோக்­கில் கடு­மை­யான நட­வடிக்கை, உண்­மை­யா­கவே பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தர இய­லா­மல் சிர­மப்­ப­டு­வோ­ரின் சிக்­கல்­களுக்கு நிலை­யான தீர்­வு­காண உத­வு­தல், உத்­த­ரவை மீறு­வோர் மீது அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­வதை எளி­தாக்­கு­தல் ஆகி­யவை அவை.

"பரா­ம­ரிப்­புத் தொகை வழங்­கும்­படி பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவு மீண்­டும் மீண்­டும் மீறப்­பட்­டால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் வாழ்க்கை மிக­வும் சிர­மத்­துக்கு உள்­ளா­கிறது.

"பாதிக்­கப்­பட்­டோர் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டக்­கூ­டும். இரு­த­ரப்­புக்கு இடை­யி­லும் விரி­சலை அது அதி­கப்­ப­டுத்­தும்," என்று அமைச்­சர் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, குழந்­தை­களின் பரா­ம­ரிப்­புப் பொறுப்பை ஏற்­றி­ருக்­கும் ஒரு­வர், முன்­னாள் வாழ்க்­கைத்­துணை பரா­ம­ரிப்­புத் தொகையை உரிய நேரத்­தில் தரத் தவ­றும்­போது பிள்­ளை­களைப் பார்க்க அவ­ருக்கு அனு­மதி மறுக்­கக்­கூ­டும் என்­பதை திரு சண்­மு­கம் சுட்­டி­னார்.

இத்­த­கைய விவ­கா­ரங்­கள், மண­வி­லக்­கிற்­குப் பிறகு நீண்­ட­கா­லத்­திற்­குத் தொட­ரும்­போது அது மண­மா­கிப் பிரிந்­தோரை மட்­டு­மன்றி அவர்­க­ளது பிள்ளை­களை­யும் அவர்­க­ளைச் சுற்றி இருப்­போ­ரை­யும் பாதிக்­கக்­கூ­டி­யவை என்­றார் அவர்.

பரா­ம­ரிப்பு அம­லாக்­கத் திட்­டம் அத்­த­கைய சூழ­லைச் சிறி­த­ள­வா­வது மாற்ற உத­வும்.

மண­வி­லக்கு பெற்­ற­பின் சச்­ச­ர­வின்றி வாழ்க்கையைத் தொடர வகை­செய்­யும் என்­றார் அவர்.

2017ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில், ஒவ்­வோர் ஆண்­டும் பரா­மரிப்பு அம­லாக்­கம் தொடர்­பில் சரா­ச­ரி­யாக 2,700 விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்­டுள்­ளன.

அவற்­றில் 15 முதல் 20 விழுக்­காட்டு விண்­ணப்­பங்­கள் அதே ஆண்­டில் மீண்­டும் மீண்­டும் உத்­த­ரவை மீறு­வோர் தொடர்­பில் விண்­ணப்­பிக்­கப்­பட்­டவை.

பரா­ம­ரிப்­புத் தொகை ஏய்ப்­பில் பெரும்­பா­லும் பெண்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

முன்­னாள் வாழ்க்­கைத்­துணை பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தரா­மல் ஏய்க்­கும்­போது, ஏற்­கெ­னவே பிள்­ளை­கள், வேலை என இரு முனை­க­ளுக்கு இடை­யில் திண­றும் அவர்­க­ளுக்­குக் கவ­லை­யும் எரிச்­ச­லும் ஏற்­ப­டு­வதை அமைச்­சர் எடுத்­து­ரைத்­தார்.

மசோதா சட்ட அங்­கீ­கா­ரம் பெற்­றால், சம்­பந்­தப்­பட்­ட­வர் களின் சொத்து, வரு­மான விவ­ரங்­க­ளைக் கேட்­டுப் பெறும் அதி­கா­ரம் அம­லாக்க அதி­கா­ரி­களுக்கு வழங்­கப்­படும்.

வங்­கி­கள், மத்­திய சேம­ நி­திக் கழ­கம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் உள்­ளிட்ட அர­சாங்க அமைப்­பு­களி­டம் இருந்து அவர்­கள் தக­வல்­ பெற முடி­யும்.

ஒரு­வர் உண்­மை­யி­லேயே பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தர இய­லா­த­வரா, வசதி இருந்­தும் ஏய்க்­கி­றாரா என்று ஆராய்ந்து முடி­வெ­டுப்­ப­தில் அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்கு அந்­தத் தக­வல்­கள் உத­வும்.

நீதி­மன்­றம் அவர்­கள் தொடர்­பில் பொருத்­த­மான உத்­­தர­வைப் பிறப்­பிக்க அவை வழி­வ­குக்­கும்.

பார­ம­ரிப்­புத் தொகையை உத்­த­ர­வில் குறிப்­பிட்ட தேதிக்­குள் செலுத்­தி­ய­தற்கு ஆதா­ரம் காட்­டும்­படி உத்­த­ர­வி­ட­ இய­லும்.

அவ்­வாறு காட்­டத் தவ­றினால் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­வும் வாய்ப்­புண்டு.

உடல்நலக் குறைவு, முதுமை போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.

புதிய சட்­டத்­தின்­கீழ் அம­லுக்கு வரும் இத்­த­கைய நட­வடிக்­கை­கள் அனைத்­தும் வசதி இருந்­தும் பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தரா­மல் மீண்­டும் மீண்­டும் ஏய்க்­கும் சம்­ப­வங்­க­ளைக் குறைக்­கும் நோக்­கம் கொண்­டவை.

மண­வி­லக்கு பெற்ற பிற­கும் பெற்­றோர் இரு­வ­ரும் பிள்ளை வளர்ப்­பில் அவ­ர­வர் பங்கை ஆற்­ற­வும் மண­வி­லக்­கிற்­குப் பிற­கான வாழ்க்கை சுமு­க­மா­கச் செல்­வதை உறு­தி­செய்­ய­வும் அண்மை ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­படும் ஆகப் பெரிய முயற்­சி­யா­கக் குடும்ப நீதி சீர்­தி­ருத்த மசோதா அமை­கிறது.