மருத்துவர் குத்திக்கொலை; பள்ளி ஆசிரியர் கைது

2 mins read
ebf31055-a389-425e-b0e1-09c7dee930e2
-
multi-img1 of 2

கேர­ளா­வில் அரசு மருத்­து­வ­ம­னை­யில் பெண் மருத்­து­வரை கொலை செய்த அரசு பள்ளி ஆசி­ரி­யர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

கேரள மாநி­லம், கொட்­டா­ரக்­கரா பகு­தி­யைச் சேர்ந்த 24 வயது பள்ளி ஆசி­ரி­யர் சந்­தீப் மது­விற்கு அடி­மை­யாகி இருந்­த­து­டன் போதைப் பொருள்­க­ளை­யும் உட்­கொண்டு வந்­துள்­ளார்.

குடும்­பத்­தி­ன­ரு­டன் அவர் நேற்று முன்­தி­னம் இரவு தக­ரா­றில் ஈடு­பட்­டுள்­ளார். அக்­கம்­பக்­கத்­தில் வசிப்­ப­வர்­க­ளி­ட­மும் தக­ராறு செய்­துள்­ளார். தன்­னைக் காப்­பாற்­றும்­படி காவல்­து­றை­யின் அவ­சர சேவை எண்­ணுக்கு அவர் அழைத்­ததை அடுத்து, காவல்­து­றை­யி­னர் அங்கு விரைந்­த­னர். பின் காயம் அடைந்­தி­ருந்த அவரை கொட்­டா­ரக்­கரா தாலுகா மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர்.

அங்கு சந்­தீப்­புக்கு காலில் ஏற்­பட்ட காயத்­துக்கு 22 வயது மருத்­து­வர் வந்­தனா தாஸ் சிகிச்சை அளித்­துக்­கொண்­டி­ருந்­த­போது சந்­தீப் அவ­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார்.

திடீ­ரென சிகிச்சை அளிக்க பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கத்­தி­ரிக்­கோலை எடுத்து வந்­தனா தாஸை அவர் குத்­தி­யுள்­ளார். அவ­ரைப் பிடிக்க முயன்ற காவல்­து­றை­யி­ன­ரை­யும் மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளை­யும் சந்­தீப் கத்­தி­ரிக்­கோ­லால் குத்­தி­யுள்­ளார். இத­னால் அவர்­களும் காயம் அடைந்­த­னர். மருத்­து­வ­ம­னை­யை­யும் சந்­தீப் சேதப்­ப­டுத்­தி­னார்.

காய­ம­டைந்த மருத்­து­வர் வந்­தனா தாஸை திரு­வ­னந்­த­பு­ரத்­தி­லுள்ள தனி­யார் மருத்­து­வ­மனைக்கு கொண்டு சென்­ற­னர். சிகிச்சை பல­னின்றி அங்கு அவர் உயி­ரி­ழந்­தார் என ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன.

சம்­ப­வம் தொடர்­பாக காவல்­து­றை­யி­னர் சந்­தீப்பை விசா­ரித்து வரு­கின்­ற­னர். அவர் எதற்­காக மருத்­து­வ­ரைத் தாக்­கி­னார் என்பது குறித்த விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை.

"நோயா­ளி­யின் காயத்­திற்கு சிகிச்சை அளிக்­கப்­படும் அறைக்­குள் எங்­க­ளுக்கு அனு­மதி இல்லை என்­ப­தால் அவர் மருத்­து­வ­ரு­டன் தனி­யாக இருந்­தார். திடீ­ரென்று, சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மருத்­து­வர் உத­விக்­காக அல­றி­யடி­படி வெளியே ஓடி­னார். தொடர்ந்து கத்­தி­ரிக்­கோல், கத்தி­யைப் பிடித்­த­படி 'உன்­னைக் கொன்­று­வி­டு­வேன்' என்று அந்த ஆட­வர் கத்­திக்­கொண்­டி­ருந்­தார்," என்று அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

மருத்­து­வர் கொலை செய்­யப்­பட்­டதை கண்­டித்து கேரள மாநி­லத்­தில் உள்ள பல்­வேறு அரசு மருத்­து­வ­ம­னை­கள், ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், மாவட்ட தலைமை மருத்­து­வ­ம­னை­கள், மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் என அனைத்து பகு­தி­க­ளி­லும் மருத்­து­வர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அர­சி­யல்­வா­தி­களும் கண்­ட­னம் தெரி­வித்து வரு­கின்­ற­னர். பெண் மருத்­து­வர் ஒரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் கேர­ளா­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.