அமைச்சரவை மாற்றி அமைப்பு: தகவல் தொழில்நுட்ப அமைச்சரான தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்

அமைச்சரவை மாற்றி அமைப்பு: தகவல் தொழில்நுட்ப அமைச்சரான தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்

2 mins read
3d7a422c-c455-4428-a4f9-fc9d508d815f
-

தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழனி­வேல் தியா­க­ரா­ஜன் (பிடிஆர்) அந்தப் பத­வி­யில் இருந்து அகற்றப்­பட்டு தக­வல்­தொ­ழில்­நுட்ப அமைச்­ச­ராக ஆக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

தமிழ்­நாடு, தக­வல்­தொ­ழில்­நுட்­பத்துறை­யில் முன்னணி மாநி­ல­மாக மீண்டும் திகழ பாடு­ப­டப்­போவ­தாக டுவிட்­ட­ரில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 2021 மே மாதம் 7ஆம் தேதி திமுக ஆட்­சிக்கு வந்­தது.

அது முதல் மூன்­றா­வது முறை­யாக நேற்று அமைச்­ச­ரவை மாற்றம் கண்டது. அதன்­படி ஐந்து அமைச்­சர்­க­ளின் துறை­கள் மாற்­றப்­பட்­டன.

அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் வகித்து வந்த தக­வல் தொழில்­நுட்­பத்­துறை பி.டி.ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது.

புதிய நிதி அமைச்­ச­ராக தங்­கம் தென்­ன­ரசு பொறுப்பு ஏற்­கிறார். இவர், மனிதவள மேலாண்­மைத் துறைக்­கும் பொறுப்பு வகிப்­பார். அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் இனி பால்­வ­ளத்­து­றையை கவ­னிப்­பார்.

தங்­கம் தென்­ன­ர­சு­வி­டம் இருந்த தமிழ் வளர்ச்­சித்­துறை, செய்­தித்­துறை அமைச்­ச­ராக இருந்த அமைச்­சர் சாமி­நாதனிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது.

புதிய அமைச்­ச­ராக பொறுப்பு ஏற்­றுக்­கொண்ட டி.ஆர்.பி.ராஜா­வுக்குத் தொழில்­துறை ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது. இந்­தத் துறையை இது­வரை தங்­கம் தென்­ன­ரசு கவ­னித்து வந்­தார்.

திமுக தலை­மைக்­கும் நிதி அமைச்­ச­ராக இருந்த பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னுக்­கும் இடை­யில் பிரச்­சினை தலை­தூக்கி இருப்­ப­தாக அண்­மைய நாட்­களில் செய்தி­கள் தலை­காட்­டின.

திமுக, ஒரு வாரத்­திற்கு முன் கட்­சி­யின் பேச்­சா­ளர் பட்டி­யலை வெளி­யிட்­டது. அதில் பிடி­ஆர் பெயர் இல்லை. அதற்கு முன்­ன­தாக பாஜக மாநி­லத் தலை­வர் அண்ணா­மலை ஒலிப்­பதிவு ஒன்றை வெளி­யிட்­டார்.

திமுக தலை­வ­ரும் முதல்­வரு மான ஸ்டா­லின் குடும்­பத்­தினர் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் பெரும் பணம் சேர்த்து இருப்­ப­தாக அந்த ஒலிப்­ப­தி­வில் பிடி­ஆர் தெரி­வித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஆனால், தான் அப்­படி எதை­யும் கூற­வில்லை என்­றும் அந்த ஒலிப்­ப­திவு தில்­லு­முல்லு வேலை என்­றும் பிடி­ஆர் அறிக்கை வெளி­யிட்­டார். கடந்த வாரம் முதல்வரை தனிப்­பட்ட முறை­யில் சந்­தித்து அந்த விவ­கா­ரம் பற்றி பிடி­ஆர் விளக்­க­மும் அளித்­தார்.

இருந்தா­லும்­கூட அந்த ஒலிப்­பதிவு விவ­கா­ரம் கட்­சி­யி­ன­ரி­டத்­தி­லும் முதல்­வர் குடும்­பத்­தி­லும் பிரச்­சி­னை­க­ளைக் கிளப்பி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத்­த­கைய சூழ­லில் அமைச்­ச­ரவை மாற்­றப்­பட்டு புதிய நிதி அமைச்­சர் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.